கடவுளை தேடுறீங்களே நம்ப உடம்பிலே சாக்கடையில் வைரமணியாக இறைவன் இருக்கான்
நம் உடம்புக்குள்ளே மிக அற்புத சக்தி ஒன்று இருக்கிறது. அந்த சக்தியைத் தட்டி எழுப்புவதற்கு ஆசான்தான் செய்ய வேண்டும்.  அவர் அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். ஓர் ஒளிச்சுடர், சொல்லவொண்ணாப்  பேரானந்தத்தை தரக்கூடிய ஒர் ஒளிச்சுடரை அவர் அடைந்திருக்கிறார். அதை நாம் அடைய வேண்டும்.
                அதை அடைவதற்குக் கடைசி, குறையெல்லாம் நிவர்த்திப்பதற்கு நிறை எது ? என்று கேட்டான். அது மீண்டும் பிறவாமை.  அதுதான் நிறை. குறையெல்லாம் முடிந்தது.  முன் செய்த பாவம் குறை. கல்வி குறை; மன உளைச்சல்; பல்வேறு பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து கொண்டே வருகிறது. தீரும் வரை விடக்கூடாது. அதுதான் பிரச்சனை, நம் குறை தீர்ந்தது; செல்வநிலை பெருகியது, வறுமை தீர்ந்தது. எல்லாம் தீர வேண்டும். கடைசியில் பெற வேண்டிய ஒன்று. நிறைவான வாழ்வு. எப்போதும் நிறைவான வாழ்வு. அதை அடைவதற்கு ஆசானைக் கேட்க வேண்டும். அதுதான் முடிவு. பூஜையின் முடிவு அதுதான். ஜென்மத்தைக் கடைத்தேற்ற வேண்டும். இப்ப ஜென்மத்தைக் கடைத்தேற்றுவதற்காகத் திருவடியைப் பற்ற வேண்டும். அதுதான் குறையது கூறி குணங்கொண்டு போற்ற என்றார்
                நம் குறையெல்லாம் சொல்லி,  குணங்கொண்டு போற்றணும். போற்றுதல் என்பது ஞானிகளைப் புகழ்ந்து பேசுதல். நல்ல பண்போடு குணங்கொண்டு பேசணும்.                                 குணங்கொண்டு போற்றச் சிறை உடல் நீ அறக் காட்டி
நம் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது இப்போது. எந்தச் சிறையில் கிடக்கிறது? மனமாசு. மலமாசு. உடம்பு என்று சொல்லப்பட்ட களிம்பு தேகம். மும்மலம் என்று சொல்லப்பட்ட களிம்பு தேகத்தில் அந்த ஆன்மா சிறைப்பட்டிருக்கிறது.
                        சிறை உடல் நீ அறக் காட்டி – ஆன்மா சிறைப்பட்டிருப்பதை,  நீக்கக் காட்டி, அது அற்றுப் போகும்படி செய்து,
                                சிவத்தோடு
                        அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே.   நாம் சிவத்தோடு சேர வேண்டும்.  இப்போது நாம் சவமாக இருக்கிறோம். நம் உடம்பில் தலைவன் இருந்தாலும், புலப்படவில்லை நமக்கு. அதுதான்,
                                உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
                        உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
                        உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
                        உள்ளம் அவனை உருவு அறியாதே
                                    -திருமந்திரம்-கவி எண் 431
                நம்மோடு தலைவன் இருக்கிறான். ஆனால் அவனை அறிய முடியாது. ஆக நாம் என்ன செய்யணும்,  சிவத்தோடு  இருக்கணும். நம் உடம்பிற்குள்ளேயே தலைவன் இருக்கிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் 
                        உள்ளத்து ஒருவனை உள்ளுறு சோதியை
                        உள்ளம் விட்டு ஓரடி நீங்கா ஒருவனை
அவன் நம் மனதை விட்டு ஒரு அடி கூட, ஒரு அங்குலம் கூட நகரவில்லை. ஒரு ஜாண் கூடப் போகவில்லை. உள்ளம் விட்டு ஓரடி என்று சொன்னார்.
                                உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
                        உள்ளம் அவனை உருவு அறியாதே.
 அவனும் நாமும் இருக்கிறோம். ஆனால், நாம் உடம்பாகிய சாக்கடைக்குள்ளே ஒரு வைரமணி இருக்கிறது. அந்த வைரமணி ஜொலிக்க வேண்டும். அதுவோ  ஆயிரம் கோடி சூரியப்பிரகாசம் உள்ள ஒரு வைரமணி. அந்த வைரஜோதி, அதுதான் அந்த
                ஆணிப்பொன் அம்பலம் என்று சொல்வார். அந்த மணி வந்து உடம்பாகிய நாற்ற தேகம், அசுத்தத்தில் கிடக்கிறது. அப்ப என்ன சொல்வார்,
                                சிவத்தோடு அறிவுக்கு அறிவிப்போன் சன்மார்க்கி ஆமே  என்றார். சுடரைத் தட்டி எழுப்பணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0182487
Visit Today : 648
Total Visit : 182487

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories