குரு பார்க்க கோடி நன்மை

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் அருளுரை – 20.02.1989 


ஓம் அகத்தீசாய நம

அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
     இன்று மதியம் சுமார் 750 அன்பர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அன்பர்கள் காலையிலிருந்து நன்றாக தொண்டு செய்தார்கள். எவ்வளவோ பஞ்சபராரிகள், பசி உள்ள மக்கள் உணவை சாப்பிட்டார்கள்.
     இங்கு உணவை சமைத்த பின், “இந்த உணவு பசி உள்ள மக்களுக்கெல்லாம் பயன்பட வேண்டும். அது மட்டுமல்ல, இந்த உணவை யார் அன்போடு, பயபக்தியோடு உட்கொண்டாலும், அவர்களுக்கு எல்லா நனமைகளும் உண்டாக வேண்டும்” என்று கேட்டுக்கொள்வோம். இதுதான் இங்கு வழங்கப்படும் உணவின் மகிமை. ஆசான் சுப்பிரமணியரையும், ஆசான் அகத்தீசரையும், மகான் திருமூலதேவரையும் அழைத்து “இந்த உணவை ஒரு பார்வை பார்க்க வேண்டும் தாயே! இந்த உணவில் தங்களுடைய பார்வை பட வேண்டும்” என்று கேட்பேன். இப்படி ஞானிகளை வணங்கி, இந்து எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது.
     சில அன்பர்கள் என்னைப் புகந்து பேசினார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன்னமே, நான் வருங்காலத்தை பற்றி சொன்னதாக அவர்கள் சொன்னார்கள். அதுவும் உண்மையே. 1965ம் வருடம் தஞ்சையில், எனக்கு மிகவும் வேண்டிய அன்பருக்கு திருமணம் ஏற்பாடாகியிருந்தது. திருமணத்திற்கு முதல நாள் அவருக்கு சித்தபிரம்மை போன்று மூளை கோளாறாகி விட்டது. அவரை தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, கையைப் பிடித்துக் கொண்டு, பத்து நிமிடம் அவரைப் பார்த்தபிறகு, என்னுடைய பார்வை அவர் மீது பட்ட பிறகு, அவர் சித்தபிரம்மை இயல்பு நிலைக்குத் திரும்பினார். அவர் ஒரு ஸ்திரத்திற்குவந்தார். மறுநாள் திருமணம் நடைபெற்றது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னமே எனக்கு அந்த ஆற்றல் இருந்தது.
     அன்பர் ஒருவர் என்னிடம் வந்து, “எனது மனைவிக்கு குழந்தை உண்டாக ஒரு மாதம் ஆகிறது” என்று சொன்னார்.
     அப்போது, “உன் மனைவிக்கு இந்த குழந்தை ஆபரேஷன் செய்துதான் எடுக்க வேண்டும். இது சுகப்பிரசவமாக இருக்காது” என்று சொன்னேன்.
     இப்படி நான் சொல்லும்போது அவருக்கு ஒரு தயக்கம். இப்போது முதல் மாதம் தானே ஆகிறது. ஒன்பது மாதத்திற்கு பின்னே நடக்கக் கூடியதை அதற்குள்ளே சொல்கிறாரே என்று அவருக்கு ஒரு ஐயப்பாடு இருந்தது. ஒவ்வொரு மாதமும் சந்திக்கும்போது இதை சொல்லி வந்தேன்.
     கடைசி நேரத்தில் ஒன்பதாவது மாதம் முடியும் போது சொன்னேன், “வீட்டில் இருக்கும் பெண்கள் நாங்கள் மருத்துவம் பார்ப்போம். எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது என்று சொல்வார்கள், அப்படி அவர்கள் சொன்னால் ஏமாந்து விடாதே! என்று சொன்னேன்.
     நிறுவனத்தில் அவர் வேலை செய்யும்போது ஒரு ஆள் வந்து “உன் மனைவிக்கு இடுப்பு வலி, பிரசவ வேதனை வந்துவிட்டது” என்பர் சொன்னார். வரும்போதே, ஒரு ஆட்டோ ரிக்சா கொண்டு வந்தார். அங்கு வீட்டில் இருந்த முதியவர்கள், பெண்கள் எல்லாம், “எங்களுக்கு அனுபவம் உண்டு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் அனுப்ப மாட்டோம்” என்று சொன்னார்கள்.
     அவர் அதையெல்லாம் கேட்கவில்லை. “மனைவிக்கு பிரசவம் ஆக வேண்டுமென்றால், ஆஸ்பத்திரியில்தான் சேர்க்க வேண்டும்” என்பர் எனஹ்டு ஆசான் சொன்னார். ஆகவே யாரும் என்னை தடுக்க வேண்டாமென்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனார். சுகப்பிரசவம் சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு போனார். சுகப்பிரசவம் ஆகவில்லை. ஆபரேஷன் செய்துதான் குழந்தையை எடுத்தார்கள். இது 1965லேயே நடந்தது. அப்போதே எனக்கு வருங்காலத்தை சொல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
     தக்க நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்ததால் அந்த தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள் என்று அந்த அன்பர் சொன்னது உண்மைதான்.
     வருங்காலத்தை முன்னமே உணருகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது என்றால் நான் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறேன், தவம் செய்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் தவம் செய்ததால் இந்த ஆற்றலைப் பெற்றிருக்கிறேன். ஆசான் அகத்தீசர் போன்ற மகான்களை குறித்து தவம் செய்திருக்கிறேன், பூஜை செய்திருக்கிறேன், ஞானிகளை பூஜை செய்துதான், ஆசான் அகத்தீசருடைய ஆற்றலை பூரணமாகப் பெற முடியும். அவர்கள் யாராக இருந்தாலும் சரி, என்ன குற்றம் செய்திருந்தாலும் சரி, மகான் இராமலிங்க சுவாமிகள்,
      ஐயா நான் செய் பிழைகள் ஏழ் கடலிற் பெரியதே
            அனைத்தும் பொறுத்த தயவு பிறர்க்கு அறிய அறியதே
      மெய்யா நீ செய் உதவிக்கு ஒரு கைமாறு வேண்டுமே
            வேண்டாதன அறிந்து எனக்குள் ஆசி தூண்டுமே
 என்று சொல்வார்.
     ஐயா நான் செய் பிழைகள் ஏழ் கடலிற் பெரியதே என்பார்.
     நான் ஒவ்வொரு காரியம் செய்கின்ற போதும், அது எனக்கு நியாயமாக இருக்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு அது கொடுமையாக இருக்கிரகுடு. அவனைப் பற்றி எனக்கு தெரிகிறது. ஆனால் என்னைப்பற்றி எனக்குத் தெரியாத ஒரு பலகீனம். அதை நான் உணர்ந்து கொள்ள வேண்டுமென்று ஆசானை கேட்டேன்.
     நான் செய்கின்ற காரியம் எனக்கு நியாயமாகத் தெரியும். நான் புண்ணியம் செய்ததாக நினைக்கிறேன். ஆனால் மற்றவன் “கொடும்பாவி இப்படி செய்கிறானே” என்று வெதும்புகிறான். அதை என்னால் உணர முடியவில்லை. அந்த உணர்வு எனக்கு வரவேண்டுமென்று கேட்க வேண்டும்.
     மீண்டும் அது போன்ற கொடுமையான சிந்தனைகள், எண்ணங்கள், எண்ணக் கிளர்ச்சிகள் வராது இருப்பதற்கு, தூண்டாமல் இருப்பதற்கு அருள் செய்வார்.
     இப்படியெல்லாம் கடந்த காலத்தில் நான் ஆசானை வணங்கி கேட்டு வந்திருக்கிறேன். காரணம் எனக்குக் காட்டப்பட்ட பாதை அப்பேர்ப்பாட்ட ஞானப்பாதை. ஆகையால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
     இந்த வாய்ப்புள்ள மக்கள் ஆரம்பத்திலிருந்தே தனக்கென்று வாழ மாட்டன். தனக்கென்று பொருள் சேர்ப்பது, தனக்கென்று சேகரிப்பது போன்ற இறுகிய கடிய மனம் இல்லை. அந்த உயர்ந்த பன்பு தானே வரும். இதற்கு ஆசான் திருவடிதான் ஒரே வழி.
     ஞானிகள் திருவடியைப் பற்றாமல் ஒருவனுக்கு தர்ம சிந்தனையே வராது. தன்னையே அர்ப்பணிக்கக்கூடிய அந்த ஆற்றல் அவனிடம் இருக்கும். ஆகவே சார்ந்தால் ஞானிகளிடம் சார வேண்டும்.
     இது மட்டுமல்ல. ஆண்களும் பெண்களுமாக இருக்கும் இந்த கூட்டத்தில், யாராவது ஒருவர் சிறிது மாறுபாடாக நினைத்தாலும் எனக்குத் தெரியும். இந்த வாய்ப்பைப் பெற்றவன் நான்.
     ஒரு அன்பர் பேசிக்கொண்டிருக்கும்போதே அவர் என்ன நினைக்கிறார் என்பது எனக்குத் தெரியும். இன்னொரு ரகசியம் தெரியும். ஒருவனைப் பார்க்கும்போதே அவனுடைய ஆயுள் எனக்கு தெரியும். அவனுக்கு இன்னும் ஆறு மாதம்தான் ஆயுள் இருக்கிறது என்றால், அவனிடம் நேரடியாக சொல்ல மாட்டேன், மறைமுகமாகச் சொல்வேன்.
     அன்னதானம் செய்தால் நல்லது என்று சொல்வேன். “அடிக்கடி அன்னதானம் செய்ய வேண்டும் என்பர் சொல்வேன். ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் போன்ற கோவில்களுக்கு சென்று அன்னதானம் செய்ய வேண்டுமென்பேன்.
     மகான் சட்டமுனிவர் ஸ்ரீரங்கத்தில் அடக்கம். நான் கோவில் வழிபாட்டைப் பற்றி சொல்லவில்லை. அந்த கோவில்களிலெல்லாம் மாபெரும் யோகிகள் இருக்கிறார்கள். ஆகவே “ஸ்ரீரங்கம் போ, திருவானைக்காவல் போ” என்று சொல்வோம். இந்த ஸ்தலங்களுக்கெல்லாம் சென்று அங்குள்ள ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய சொல்வோம். இப்படி சொல்வது ஆயுள் பெருக்கத்திற்காக.
     ஒரு நபரைப் பார்க்கும்போதே அவருடைய ஆயுள் எவ்வளவு என்று அறிந்து கொள்கின்ற வாய்ப்பு ஆசான் அகத்தீசருடைய ஆசியால், அனுக்கிரகத்தால்எனக்குக் கிடைத்தது.
     அன்பர் பேசும்போது, ஒரு கவியை சொல்லி அதற்கு சற்று விளக்கம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னார்.
     கருடன் உருவங் கருதும் அளவிற்
      பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
      குருவின் உருவாங் குறித்தஅப் போதே
      திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
                      -திருமந்திரம் – ஞானகுரு தரிசனம் – கவி எண் 2659
     வியாழக்கிழமை அன்று ஆகாயத்தில் பறக்கும் கருடனை பார்த்து சிலர் வணங்குவார்கள். அது ஏதோ ஒரு நம்பிக்கை, சாட்சியாக அமையலாம். கருடன் முந்நூறு அடி உயரத்தில் ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும்போது அங்கிருந்து கீழே இருக்கும் நாகப்பாம்பை பார்க்கும். பல நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் இருந்து கருடன் நாகப்பாம்பை பார்க்கும். அங்கிருந்து கருடன் பார்த்தாலே அந்த பாம்பு மயங்கிவிடும். கருடப்பார்வைக்கு அந்த ஆற்றல். நல்ல பாம்பை கருடன் பார்த்தாலே அந்த பாம்புக்கு அசைய முடியாதபடி ஒரு மயக்கம் வரும். அவ்வளவு ஆற்றல் உண்டு. அதைத்தான் மகான் திருமூலர் தனது பாடலில் சொல்கிறார்.
     சில மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட மக்கள் காட்டு எலியைப் பிடித்து சாப்பிடுவதுண்டு. எலியினுடைய வளையில் நான்கு பக்கமும் சென்று வரக்கூடிய ஓட்டை இருக்கும். எல்லா பக்கமும் வெளியில் ஓடமுடியாத அளவிற்கு மண்ணைப் போட்டு மூடி விடுவான்.
     ஒரு பக்கம் மட்டும் தேடிக்கொண்டே போவான். அப்படி தோண்டும்போது எலி நான்கு பக்கமும் போக முடியாமல், திரும்ப இங்கு வரும். அப்படியே அந்த எலியைப் பிடித்து அடித்து இடுப்பில் கோர்த்துக் கொள்வான். கோவணம் தான் அவனுக்கு உடை. அது அவர்களுடைய பழக்கம். இடுப்பில் இருக்கும் அரைஞான் கயிற்றில் அதை கோர்த்துக் கட்டிக் கொள்வான்.
     இப்படி இடுப்பை சுற்றிலும் செத்த எலி இருக்கும். இன்னொரு எலி வளையில் எலியை பிடிக்க முயற்சித்தான். அதில் கருநாகப்பாம்பு இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாது. அந்த பாம்பு அவனைக் கடித்து விட்டது. பாம்பு கடித்ததும் அவனுக்கு மயக்கம் வந்துவிட்டது.
     இவன் ஊருக்குள் வைத்தியத்திற்கு செல்ல வேண்டிய இடம் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம். தள்ளாடி நடக்கிறான். தலையில் ஒரு பாரம் வைத்துக் கொண்டால் அந்த விஷம் குறையும் என்று நினைத்தான், முடியவில்லை.
     கொஞ்சம் தூரம் நடப்பதற்குள் மயக்கம் வந்து காட்டுப் பகுதியில் விழுந்து விட்டன. வானில் இருந்த கருடன் அவனது இடுப்பில் இருந்த அணிற்பிள்ளையையும், எலியையும் பார்த்தது.
     அந்த கருடனின் பார்வை இவன் மீது பட்டதும், இவனைக் கடித்த கருநாகப்பாம்பின் விஷம் நீங்கியதுஎன்பர் சொல்கிறார். இதெல்லாம் நடைமுறை ஒன்று கற்பனை இல்லை.
     ஆக கருடப்பார்வைக்கு அவ்வளவு ஆற்றல் உண்டு. அந்த பாம்பு கடித்தவன் இறப்பதற்குள்ளே கருடப்பார்வை படுமேயானால் அவனுக்கு உயிர்ப் பிச்சை உண்டு.
     கருடன் உருவங் கருதும் அளவிற்
      பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
     பரு என்றால் குற்றம் என்று அர்த்தம். எல்லா பாம்புக்கும் அது உண்டு.
     பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் – பயங்கெடும். கருடப்பார்வையால் பயங்கெடும். இனி நாம் பிழைத்துக்கொண்டோமேன்பதால் பயங்கெடும்.
      பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
       குருவின் உருவாங் குறித்தஅப் போதே
      மும்மலத்தை வென்றவனாகவும், கருணையே வடிவானவனாகவும் குரு இருக்க வேண்டும். அவருடைய இதயம் தூய்மையாக இருக்கும், சிறிதும் மாசு இருக்காது.
     பொருளை சேர்க்க வேண்டுமென்று நினைத்தால், அங்கே இதயம் மாசுபடும். ஏதோ ஒன்றை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தால் அல்லது சேகரித்துக் கொள்ள வேண்டுமென்ற இதயம் இருக்குமேயானால் அஹ்டு மாசுபடும். தூய மனதுள்ள குருநாதரின் பார்வை பட்டால், நாம் பிழைத்துக் கொண்டோமென பயம் நீங்கும். இதைத்தான் சொல்கிறார்,
       பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல்
       குருவின் உருவங் குறித்தஅப் போதே
      அந்த குருவிற்கு தூய மனது இருக்க வேண்டும். இப்படிப்பட்ட உருவத்தை எப்போது பார்த்தாலும் அப்போதே குணம் மாறும்.
               
                குருவின் உருவங் குறித்தஅப் போதேஞானிகளை அவ்வளவு இலகுவாக நினைத்துவிடக் கூடாது. அவருடைய தோற்றம் கிடைப்பதற்கே பத்து பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். கொஞ்சமேனும், சிறிதும் கருணை காட்ட மாட்டார்கள்.
     ஆனாலும் பூஜை செய்யும்போது நமது அன்பர்கள் ஆணோ, பெண்ணோ “அகத்தீஸ்வரா! என்னுடைய பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் ஆகாமல் இருக்கிறது. நான்கு பெண் பிள்ளைகள், வயதுக்கு வந்து ஐந்து வருடம்  ஆகிறது. நான் ஒவ்வொரு நாளும் நிம்மது இல்லாமல் செத்து செத்து பிழைக்கிறேன். உனக்கு கண் தெரியவில்லையா?” என்று கேட்பான்.
     உனக்கெல்லாம் கருணையே இருக்காதா? என்று கேட்பான்.
     “அப்படியா மகளே? கவனத்தில் வைத்து கொள்கிறேன் என்பார்.
     ஒவ்வொரு நாளும் அப்படியே ஆசானிடம் கேட்டுக் கொண்டே வருவார்கள். மறுநாளும், நான்கு பெண் இருக்கே அப்பா! திருமணமாகி வீட்டை விட்டும் போகவில்லையே? நான் ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைக்கிறேனே? நியாயமா? என்பாள்.
     இதற்கு ஆசான் “பொறு மகளே!” என்பார்.
     தினம் ஒவ்வொரு நாளும் இப்படியே கேட்கிறான். “பொறு! பொறு! பொறு! என்கிறார் ஆசான்.
     என்ன? ஏன் பொறு என்கிறார்? நீ இந்த அளவிற்கு என்னை நம்பி என்னுடைய மகளுக்கெல்லாம் நல்லபடி திருமணம் நடைபெற வேண்டுமென்று நம்பி என்னிடம் கேட்டதினாலே, அவளுக்கு நல்ல நம்பி கிடைக்க வேண்டும். நல்ல கணவனாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டுமென்பார்.
     ஆசான் எதைக் கேட்டாலும் கொடுக்கும் தகைமை உள்ளவர். ஆனால் உடனே அரு செய்யமாட்டார். அப்படியே பார்ப்பார். சரி நம்மிடம் வேண்டுகிறாள். ஒரு ஆறு மாதம் விட்டுப் பிடிப்போம் என்பார். ஒரு வருடம் விட்டுப் பிடிப்பார். அதற்குள் என்ன செய்வான், ஆசான் அகத்தீசறை வேண்டி என்ன கிடைத்தது போதுமென்பான்.
     நீ கேட்க ஆரம்பித்து ஒரு வருடம்தானே ஆகிறது? ஏன் அவசரப்படுகிறாய்? ஞானிகளை பூஜை செயது கேட்டால் நிச்சயம் நடக்கும். ஆனால் காலதாமதம் ஆகும். தினமும் கேட்க வேண்டும், விடாமல் கேட்க வேண்டும்.
     ஆசானே நீ பார்த்து செய்யலாம். உன்னை விட்டால் எனக்கு வேறு கதியில்லை. சரி, ஒரு வருடம் கேட்டுப் பார்த்தேன். இரண்டாவது பெண்ணுக்கு 27வயதாகிறது, மூன்றாவது பெண்ணுக்கு 25 வயதாகிறது. இன்னும் ஒரு பெண் முழுமையாக காத்திருக்கிறாளே. நான் உன்னிடம் சொல்லி பார்த்தேனே? ஒரு வருடம் ஆகிறதே? நீ கவனிக்கவில்லையே? என்று புலம்புவான்.
     உன்னை கேட்டுப்பார்த்தேன், நடக்கவில்லை. வேறு ஒருவரிடம் சென்று இந்த பிரச்சனைத் தீர்க்க யோக்கியதை இருக்கிறதா? சரி, நான் வேறு ஒருவரிடம் சென்று கேட்பதற்கு எனக்கு யோக்கியதை இருக்கிறதா? என்பர் கேட்டால் அதுவும் இல்லையே! ஆக மறுபடியும் இங்கே வந்தேன்.
    
     கரையில் இருக்கும் கப்பலில், உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, காகத்திற்கு சிறிது உணவை வைப்பான். கரையில் இருக்கும் காகம் அதை சாப்பிட கப்பலில் போய் உட்கார்ந்து விடும். கப்பல் கரையை விட்டு முப்பது மைல் சென்று விடும். என்ன இன்னும் கரையே வரவில்லையே என்று காகம் பார்த்தது. கரைக்கு வர வேண்டுமென்று ஆசைப்பட்டு இரண்டு மல் பறந்து கரையிருக்கிறதா என்று பார்க்கும். கரையே தெரியாது. இந்த இடத்தையும் விட்டுவிட்டால் அவ்வளவுதான் என்று மறுபடியும் அந்த கப்பலின் கொடிமரத்திற்கே அந்த காகம் வருவதுபோல் வணங்கினேன், அழுதே, கேட்டுப்பார்த்தேன், நடக்கவில்லை என்று சோர்வடைந்தாலும், அந்த காகம் எப்படி மறுபடியம் அந்த கோடி மரத்தில் வந்து உட்காருகிறதோ, அதைப்போல் மறுபடியும் ஆசானிடத்து வரவேண்டும்.
     யாரேனும் பசி என்று வந்தால் அதற்கு உடனே பரிகாரம் செய்திருக்கிறாயா? மற்றவனுடைய குறிப்பறிந்து ஏதேனும் செய்திருக்கிறாயா? தவம் செய்திருக்கிறாயா? அல்லது தர்மம் செய்திருக்கிறாயா? உன்னுடைய தகுதி என்ன? ஒவ்வொரு ஜென்மத்திலும் யார் யாருக்கு என்ன செய்தாய்? எந்த மக்களுடைய பிரச்னையை தீர்த்து வைத்தாய்? எடுத்த உடனேயே ஆசான் அகத்தீசர் உனக்கு அள்ளிக் கொடுப்பார் என்று நினைப்பது எவ்வளவு குற்றம்? இருந்தாலும் “இவனுடைய வரவு செலவு என்ன? இவ்வளவு பெரிய காரியம் கேட்கிறானே? மற்ற மக்களை விட ஏன் இப்படி துடிக்கிறான்?” என்று கேட்பார். ஆசானிடம் கேட்டால் நடக்கும். ஆனாலும் காலதாமதம் ஆகும்.
    
     குருவின் உருவங் குறித்தஅப் போதே
      திருமலந் தீர்ந்து சிவனவ னாமே.
    
     அப்போதே என்று சொன்னார். பத்தாண்டுகள் பூசித்தும் நமக்கு அருள் செய்யாத இவர்கள், அந்த வினாடியே மும்மலம் நீங்கிப்போகும் என்று சொன்னதால், ஏதோ மர்மம் இருக்கிறது என்று நினைக்க வேண்டும். இப்படி இருக்கும்போதே அப்போதே என்ற வார்த்தையை மகன் திருமூலதேவர் ஏன் பயன்படுத்தினார்?
      குருவின் உருவங் குறித்தஅப் போதே – திரிமலம் தீர்ந்தது. எப்போது வரும்? அதற்குத்தான் விளக்கம் கொடுக்கிறோம். பத்தாண்டுகள் அன்பர்கள் பல்வேறு விதமாக பூஜை சய்தும், சில காரியம் தாமதமாகிறது. அப்படி இருக்கும்போது குருவின் பார்வைபட்டவுடன் அது அற்றுப்போகும் என்று சொன்னால் அதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்பார்கள்.
     திருமணம் ஆகாமல் இருப்பது, ஒரு சொந்த வீடு கட்ட முயற்சிப்பது, நிலபுலம் வாங்குவது, நல்ல மாணவி அமைவது, பிள்ளைகளுக்கு கல்வி அமைவது போன்றவை உலக நடையில் உள்ள தடைகள்.
     பிள்ளைகளுக்கு நோய் இருக்கும். அதுவும் சில பிள்ளைகளுக்கு அங்கஹீனம் இருக்கும். ஊமையாகவோ, செவிடாகவோ பார்ப்பதற்கு ரொம்ப கொடுமையாக இருக்கும். ஒவ்வொரு நாளும் சித்திரவதைப்படுகிறான், நரகத்தில் கிடக்கிறான். பிள்ளை நடக்க முடியாது, தூக்கிக் கொண்டு போய்த்தான் வைக்க வேண்டும். பிள்ளைக்கு உணர்வு இருக்காது. அப்படியெல்லாம் சில பிள்ளைகளைப் பார்க்கும்போது, அவனுக்கு நரகம் எங்கோ இல்லை, இங்கேயே அவன் நரகத்தில்தான் இருக்கிறான்.
     நரகத்தை எப்படி அனுபவிக்கிறான் என்றால், பாசத்தின் காரணமாக நரகத்தை அவன் அனுபவிக்கிறான். அதேபோன்று குறைபாடு உள்ள பக்கத்து வீட்டுக்காரனுடைய குழந்தையை பார்க்கும்போது, அவன் சோர்வடையவில்லை. பெற்ற பிள்ளையல்லவா? அந்த பிள்ளை வாய் பேசாமல் இருப்பதும், நடக்க முடியாமல் இருப்பதும், மூளைக்கோளாராக இருப்பதும், விகாரமாக இருப்பதும், உதடு கிழிந்து இருப்பதும், அவதாரமாக இருப்பதைப் பார்த்து, மனதில் அந்த பாசத்தின் ரூபத்தில் அவனை நரகத்தை அனுபவிக்கச் செய்கிறார்கள்.
     அந்த பாசத்தை விட்டு விட்டால் நரகம் அற்றுப் போகும். தினம் தினம் அந்த பிள்ளையைப் பார்த்து, நொந்து நொந்து சாகக்கூடிய அதே தந்தைக்கு மூளைக்கோளாராநாள் வேதனைப்பட மாட்டான்.
     இவனுக்கு அந்த பாசத்தைக் கொடுத்து, அவனை நரகத்தில் தள்ளுவான், இதெல்லாம் உலகநடை. பிள்ளைகள் அழகாக அமைவதும் புண்ணியம்தான். அழகாக அமைந்தது மட்டுமல்ல, சிறப்பான அறிவு இருப்பது அதைவிட புண்ணியம். சிறப்பரிவோடு, குணநலன் இருப்பது அதைவிட புண்ணியம். நல்லபடி வாழலாம். எல்லாம் உலகநடை.
     ஆனால், குருவின் உருவங் குறித்தஅப் போதே திருமலந் தீர்ந்து என்று சொன்னார். இது ரொம்ப உயர்ந்தது. ஆனால் நம்முடையது மும்மலத்தைச் சேர்ந்த வாழ்க்கை. உலகத்தில் வாழ்கின்ற பந்த பாசத்திற்கு உட்பட்ட வாழ்க்கை போதும். இல்லறம் ஒருவனுக்கு நல்லபடி இருக்க வேண்டும். அதுவே ஒருவனுக்கு சொர்க்கம்.
     தினம் தினமும் நோயும் ஊசியும் மருந்துமாக அவதிப்படும் மனைவி இருந்தால் அதுவே நரகம்.
     ஒருவருக்கு மனைவி திடமாக ஆரோக்கியமாக இருப்பாள். ஆனால் கணவனுக்கு கிராணி இருக்கும். சாப்பிட்டால் ஜீரணமாகாமல் வயிற்றுப்போக்கு போய்க்கொண்டே இருக்கும். அப்படியே நலிந்து இருப்பான். அவன் நல்ல குணம் உள்ளவனாக இருப்பான். ஆனால் உடம்பு என்ற சிறந்த செல்வம் இல்லை அல்லவா? அவனுடைய உடம்பை நினைத்து நித்தநித்தம் ஏங்கி சாவான்.
     இப்போது நான் சொல்வதெல்லாம் கற்பனை இல்லை, உண்மை. இது நடைமுறை. இதற்கு உபாயம் உண்டா? என்று கேட்டாள், எனக்கும் என் கணவனுக்கும் அந்தரங்க வாழ்க்கை நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது.கடவுளே என்னுடைய வாழ்க்கை இப்படி பாழாகி விட்டதே! என்று வெளியே தெரியாமலேயே உள்ளே அப்படியே வெதும்புவாள்.
    
     “அஞ்சேல் மகளே! அவனை நான் குணப்படுத்தி உன்னோடு வாழச் செய்கிறேன்!” என்று சொல்கின்ற ஆற்றல் ஆசான் அகத்தீசருக்கு உண்டு.
     “அஞ்சேல் மகளே! உன் கணவனுக்கு நல்ல திடகாத்திரத்தைக் கொடுத்து, உன்னை வாழ வைக்கின்ற ஆற்றல் எனக்கு உண்டு!” என்று சொகின்ற ஆற்றல், திறன் ஆசான் அகத்தீசருக்கு உண்டு. அதுவும் செய்வார்கள்.
     ஆனால் குருவின் உருவங் குறித்தஅப் போதே திருமலந் தீர்ந்து என்றார். முன்பு சொன்னது உலக நடையில் இருக்கும். எப்போது இந்த வாய்ப்பு வரும்? பத்து ஆண்டுகள் உலக நடையில் இருக்கும். எப்போது இந்த வாய்ப்பு வரும்? பத்து ஆண்டுகள் இல்லாத வாய்ப்பு. பத்து ஆண்டுகள் ஆசானை அழைத்து அழைத்து பார்த்து, நான் உன்னைக் காண  வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். உன்  திர்த்தொற்றம் எப்படி இருக்கும் என்று பார்க்க ஆசைப்படுகிறேன் என்றான். ஆனாலும் பேசாமல் இருக்கிறார்.
     ஆசான் பேசாதிருந்தலும் ஒரு செய்தி வரும். பயப்படாதே மகனே?
உனக்கு என்ன குறை? நீ எதைக் கேட்டாலும் நான் தரமுடியும். உனது விருப்பம் பொது நலத்தை மையமாகக் கொண்டிருக்க வேண்டுமென்பார் ஆசான். அது துரவினுடைய இலக்கணம்.
     இல்லறத்தானுடைய நோக்கம், அது குடும்பத்தைப் பற்றி இருக்க வேண்டும். என் மனைவி மக்கள் நீடு வாழ வேண்டும். அவர்களெல்லாம் நோயில்லாது இருக்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு போதிய கல்வி அறிவு வேண்டும். நான் மற்றவர்களிடம் சென்று கடன் வாங்காதிருக்க வேண்டும். நான் கௌரவமாக வாழ ஆசைப்படுகிறேன் என்று கேட்கலாம். இதெல்லாம் நடக்கும். பத்து ஆண்டுகள் பூஜை செய்வான். யோகி என்றால், “நான் பல ஜென்மங்களில் பாவம் செய்திருக்கலாம். அது என்னுடைய அறியாமை. நன் செய்த அறியாமையின் காரணமாகவோ, கடிய மனம் காரணமாகவோ, தீய எண்ணத்தின் காரணமாகவோ, பிறர் மனது துன்பப்படுவதை என்னால் உணர முடியாமல் போய்விட்டது. அது உண்மையே!” என்று ஆசானிடம் கேட்க வேண்டும்.
    
     ஐயா நான் செய் பிழைகள் ஏழ் கடலிற் பெரியதே
      அனைத்தும் பொறுத்து தயவு பிறர்க்கு அரிய அரியாதே
     என்றார். உண்மைதான். நான் குற்றவாளிகள். மகான் இராமலிங்கசுவாமிகளே சொல்கிறார், “எல்லோருமே குற்றவாளிதான். இருப்பினும் நீ பெற்ற அனைத்தையும் நான் பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். உன்னால் முடியும். உன்னால் ஆகாதது ஒன்றுமில்லை என்று எனக்குத் தெரியும். என்னை ஏமாற்ற முடியாது. உனக்கு சக்தி இல்லை என்று சொல்லி, நீ என்னிடமிருந்து தப்பிக்க முடியாது.
     நீர் ஆணைப் பெண்ணாக்குவீர்! பெண்ணை ஆணாக்குவீர். இரவை பகலாயும், பகலை இரவாக்கவும் உம்மால் முடியும். சூரியனை சந்திரன் ஆக்குவாய்! சந்திரனை சூரியன் ஆக்குவாய்! இந்திரனார் உலகத்தை இங்கே காட்டுவீர். எட்டு மலையையும் எடுத்து பந்தாடுவீர். இத்தனையும் முடியும். நீ பெற்ற அனைத்தையும் நான் பெற ஆசைப்படுகிறேன்.
     இல்லறம் சிறக்க வேண்டுமென்று இல்லறத்தான் கேட்கலாம். அது மட்டுமல்ல. நான் உன்னைப்போல் ஆக வேண்டுமென்று கேட்டாலும். அருள் செய்வார்கள். இல்லறத்தானுக்கு அந்த வாய்ப்பு உண்டு. ஏனென்றால் அவன் தான் தினம் தினம் பூஜை செய்ய முடியும். பிச்சை எடுப்பவன் பூஜை செய்ய முடியுமா? காலை உணவு சாப்பிடமுடியும். மதியத்திற்கு எங்கே செல்வது? என்று ஏங்குவான். திருவோடு இருக்கும். திருவோடு அல்ல அது! கர ஓடு. அவன் காலமெல்லாம் சோற்றுக்கே அலைய வேண்டும்.
     காலை உணவு இருக்கும், மதியம் கிடைக்காது. இல்லறத்தான் தான்  இந்த துறைக்கு சிறப்பானவன். அவனுக்குத்தான் அந்த வாய்ப்பு. ஒவ்வொரு நாளும் பூஜை செய்வான். பூஜை செய்து பூஜை செயஹ்டு. “நான் உன்னைப்போல் ஆக வேண்டும்” என்று கேட்க வேண்டும். சற்று குழப்ப நிலை இருக்கும். ஆரம்பத்தில் இவனுக்கே ஒரு சந்தேகம் வரும். “மரணமிலாப் பெருவாழ்வு இருக்கிறதா?  ஆசான் அகத்தீசர் இருக்கிறாரா? அப்படியென்றால் கண்ணுக்குத் தெரிய வேண்டுமே? மனம் அப்படியே தடுமாறும். மனம் அப்படி நழுவும் பொது முட்டுக் கொடுக்க வேண்டும். அதற்குத்தான் பாடல்கள்.
     ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை
      காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
      கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
                                      -திருமந்திரம் – பிராணயாமம் – கவி எண் –571
                மறுபடியும் மனம் நழுவும். இப்படியே ஒவ்வொரு நாளும் மேலே சென்று, பத்தாண்டுகள் சென்றபின், ஆசான் இதற்குரிய அறிவை கொடுப்பார். அந்த ஞானத்திற்குரிய பரிபக்குவத்தை மறைமுகமாக கொடுப்பார். இப்படியே பரிப்பக்குவத்தை கொடுத்து வந்துதான், வாசி நடத்தித் தருவார்.
     இப்படி அந்த அறிவை கொடுப்பார்கள். சும்மா சாதாரண அறிவு என்று நினைக்காதீர்கள். உடம்பை அணு அணுவாக பிரித்துப் பார்க்கக் கூடிய ஆற்றல். உடம்பை அல்ல, நாடி நரம்புகளை அணு அணுவாக பிரித்து பார்க்க கூடிய ஆற்றல். கூற்றுவனை உதைக்கக் கூடிய சிறப்பான அறிவை அவர்கள்தான் தர முடியும். இது சின்ன விசயமல்ல!
     மகன் திருமூலதேவர், “உனக்கு அறிவு போதாது. இதனை அறிந்து கொல்வதற்கு கடல் போன்ற அறிவு வேண்டும். ஆனால் என்னுடைய பாதத்தைப் பற்றினால் நான் உனக்கு அருள் செய்வேன்” என்பர் சொல்வார். அன்பர் கேட்டதற்கு,இன்று விளக்கம் சற்று கூடுதலாக இருக்கும். இதே விளக்கத்தை நான் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். இந்த கவிக்குரிய விளக்கத்தை முக்கால் மணி நேரம், ஒரு மணி நேரம் பேசலாம்.
     குருவின் உருவங் குறித்தஅப் போதே என்றார். எப்போது? என்றான். அப்போது என்றார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, இந்த அறிவு வரும். எப்போது? என்றான். நீ பூசிக்க பூசிக்க உணர்வு வரும் என்பார்.
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
      வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.
                                                -திருமந்திரம் – உபதேசம் – கவி எண் 42
                போதம் என்பது அறிவு. ஞானிகளிடத்து தினமும் அன்பு செலுத்த வேண்டும். ஞானிகள் அனைவரும் அறிவுக் கடலாக இருப்பார்கள். அறிவுக்கடல் என்றால் மேலான, சரியான அறிவு. அந்த அளவிற்கு ஈடாக வேறு ஒன்றை சொல்லவே முடியாது. கடல் போன்ற அறிவு. அண்டத்தில் அனுவைப் பார்ப்பார்கள். அணுவில் அண்டத்தைப் பார்ப்பார்கள்.
அண்டத்தில் அணுவைப் பார்ப்பார், அணுவில் அண்டத்தைப் பார்ப்பார் என்றால், அந்த ஆற்றல் என்ன? உடம்பு என்னும் சரீரத்தையெல்லாம் பிரித்து பிரித்து பார்க்கக் கூடிய ஆற்றல். கருவி காரணங்களை அப்படியே நிறுத்துவார்கள். மூச்சை அப்படியே நிறுத்துவார்கள். ஆறுமாதம், ஒரு வருடம் நிற்கும்.
     நம் அன்பர்கள் யாராவது அப்படியே நிறுத்தினால் என்ன ஆகும்? ஆறுமாதம் ஆனால் என்ன ஆகும்? பக்கத்து வீட்டுக்காரன் அடிக்க வந்துவிடுவான். இவர்கள் நிறுத்தி வைப்பார்கள் ஆறுமாதம், ஒரு வருடம். அவ்வளவு ஆற்றல் ஞானிகளிடத்து இருக்கிறது.
    
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
     
      எப்படி அன்பு செலுத்த வேண்டுமென்று ஆசானிடம் கேட்கக்கூடிய அறிவு வேண்டும்.
    
     ஆசானிடத்து, “நான் உங்களை தினம் பூசிப்பதற்குரிய அறிவைப் பெடுக்கொள்ள வேண்டும், வேறு எந்த ஆசையும் எனக்கு வேண்டாம். எனக்கு வேறு ஒன்றுமே வேண்டாம். உலகத்திலே உள்ள அத்தனைக்கும் அழிவு உண்டு. ஆனால் உங்கள் திருவடியைப் பற்றுகின்ற அந்த அறிவு மட்டும் அழியா நிலையைத் தரும்.” என்று கேட்டுக் கொள்வது அறிவு.
    
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
     
      கோழி அறுத்து, ஆடு வெட்டி குழம்பு வைத்து, பொங்கல் படைத்து பூஜை செய்கிறான். இது பூஜை அல்ல. இப்படி செய்து புண்ணியவான் ஆக முடியாது.
     அவனவன் புண்ணியம் செய்வதாக அன்னசத்திரம் கட்டுகிறான்.
    
     ஆனால் புண்ணியவானாக வேண்டுமென்றால், நீ புண்ணியவானை பூஜை செய்தாலே போதும் என்கிறார் ஆசான் திருமூலர்.
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      சிந்திக்க சிந்திக்க உனக்கு மெய்யுணர்வு வரும். அதுவே புண்ணியம். அந்த மென்மையான அறிவு, மெய்யுணர்வு, அந்த தீட்சண்யமான அறிவு வந்தாலே உனக்கு புண்ணியம் வந்து விட்டது.
     ஒரு காரியத்தை செய்யும்போதே அவன் உணர்ந்து கொள்வான். இந்த செயல் எப்படி மற்றவரை பாதிக்கும்மென்பதை உணர்ந்து, நாம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்ற உணர்வு வந்தால் அது புண்ணியம்.
     புண்ணியம் எப்படி வரும்? அன்னசத்திரம் கட்டி வரவில்லை, ஆட்டை வெட்டி வரவில்லை, உயிர்பளியிட்டு வரவில்லை. ஆனால் வந்தது, எப்படி வந்தது? அந்த மேலான உணர்வு, எந்த உணர்வு? பிறரை பாதிக்குமென்று உணர்ந்து செயலை திருத்திக்கொள்கின்ற மேலான உணர்வு.
     ஒருவன் ஐந்து ரூபாய் சம்பாதித்தான். மூன்று ரூபாய்க்கு பட்டை சாராயம் வாங்கி குடித்தான். ஒரு ரூபாய்க்கு மொச்சை கடலையை வாங்கிக் கொண்டான். சாப்பிட்டுக் கொண்டே வீட்டிற்கு போனான். மீதி பணம் மடியில் இருந்தது, அதுவும் கீழே விழுந்தது.
     வீட்டுக்குப் போய் ஏய்! என்றான். அந்த பழைய நினைப்பு வந்தது. பெண்களை அடிமைப்படுத்தி, அடிமைப்படுத்தி, ஒரு ஆற்றல் வந்து விட்டது இவனுக்கு. ஏய் கதவைத் திற! என்றான். அவளுக்குத் தெரியும், ஓகோ சரி, வந்துவிட்டான், அழகான கணவன் வந்துவிட்டான். கல் என்றாலும் கணவன் புல் என்றாலும் புருஷன். அங்கே அந்த தத்துவத்தை முழுமையாக கொண்டு வந்தாள்
     அவன் மூன்று நாளாக பசியோடு இருக்கிறாள். அவளுடைய பிள்ளைகள், அம்மா பசி! என்றது. பசி என்றதும், பக்கத்து வீட்டில் போய் அரிசி வாங்கினான். கால்படி வாங்கி, காஞ்சி வைத்து பிள்ளைகளுக்கு கொடுத்தாள். மறுபடி கொடுக்க வாய்ப்பில்லை.
     பிள்ளைகள் பசியால் அழுதது. அந்த கோபத்தில் பிள்ளைகளை போட்டு அடித்தாள். அதற்காக பிள்ளைகள் மேல் பாசமில்லை என்று நினைக்கக் கூடாது ஐயோ! இந்த குழந்தைகளுக்கு பசிக்கு உணவு கொடுக்க முடியவில்லையே! என்ற கோபத்தில் பிள்ளைகளை அடித்தாள். அடித்தால் அந்த பிள்ளை அழுது அழுது மயங்கிக் கிடக்கிறது.
     ஒரு பிள்ளை அப்படி இருக்கு. இன்னொரு பிள்ளை, அம்மா அடித்ததை பாத்ததும், மூன்று வயது பிள்ளையை அடிப்பதை பார்த்ததும், ஐந்து வயது பிள்ளை பயந்து நிற்கிறது. அந்த பிள்ளையை அடித்ததால், அழுது அழுது அது மயக்கத்தில் கிடக்கிறது. மற்றொரு பிள்ளை பயந்து கொண்டிருக்கிறது. இவள் மூன்று நாளாக பட்டினியாக இருக்கிறாள்.
     ஐந்து ரூபாய் சம்பாதித்துவிட்டு, அதில் மூன்று ரூபாய்க்கு சாராயம் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து, ஏய்! கதவைத திற! என்று கதவை தட்டினான்.
     புருஷனல்லவா? தெய்வமல்லவா? கல் என்றாலும் கணவன். புல் என்றாலும் புருஷன். இவனை எங்கே வைக்கக் கூடாது, ஒரு கோபுரம் கட்டி, அங்கே என் புருஷன் இருக்கிறார் பாருங்கள், அதோ தெய்வமாக! கோபுரத்தை பார்த்தீர்களா? என் கண்ணுக்குள் கண்ணான ராஜா இருக்கிறார்! என்று கோபுரத்தின் மேலே வைக்க வேண்டும்.
     ஏ பெண்ணே! நீ ஆரம்பத்திலேயே ஆசானை கேட்டிருக்க வேண்டும். இதுபோன்ற கயவன் எனக்கு கணவனாக வரக்கூடாது என்று, கருணையே வடிவான ஆசான் அகத்தீசரை அல்லவா கேட்டிருக்க வேண்டும்.
     என் நிலையை உணர முடியாத கயவனை எனக்கு ஏன் திருமணம் செய்து வைத்தார்கள்? நான் என்ன செய்வேன்? என்னை அழித்திருக்க வேண்டும்.இப்படி என்னை கொடுமை செய்து விட்டாயே என்று புலம்புகிறாள்.
     ஆனால் அவன் போதையில், அங்கே கிடந்த அரிவாள்மனையால் மனைவியை வெட்டினான். வெட்டியதில் பாதி சிரசு சாய்ந்து விட்டது. அப்போதுதான் அவனுக்கு போதை தெளிகிறது. ஐயோ மனைவியை னாமே கொன்று விட்டோமே என்று பதறுகிறான். அந்த உணர்வு மாறும்.
    
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      இந்த கடிய மனம் மாறும் தம்பி. இதை உணர்கின்ற பரிபக்குவம் வருமேயானால் அவன் புண்ணியவான். அதுதான் சொன்னார்
      போதந் தரும்எங்கள் புண்ணிய நந்தியைப்
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      இந்த குற்றம் நடப்பதற்கு முன்னே, இதனுடைய விளைவை ஆராய்ந்து பார்க்கும் திறமை இருந்தால் அது புண்ணியம். ஒரு செயலை செய்யும் முன்னே பல வகையால் ஆராய வேண்டும்.
      போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார்
      நாதன் நடத்தால் நயனங் களிகூர
     அதுதான் இரண்டாவது நிலை. ஞானிகளை பூஜை செய்தால் சிறப்பறிவு வரும். சிறப்பறிவு என்றால் அது திண்மையான அறிவு. மென்மையான அறிவின் காரணமாக ஆசான் நம்மோடு கலந்திருந்து இடகலையும், பின்கலையையும் சேர்த்து, புருவமத்தியிலே ஒடுக்கி விடுவார். இதைத்தான் அகார உகாரம் என்று சொல்வார்கள். அப்படி சேர்த்தால் ஓங்கார ஒழி காதிலே கேட்கும்.
      நாதன் நடத்தால் – சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போதும், அது தூங்காது. இதைத்தான் ஆசான் சுப்பிரமணியர் சிவபெருமானுக்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார். இப்படிச் சேர்த்தால் தசநாதம் கேட்கும் என்று சொல்லிக் கொடுத்தார். 
     நாதன் நடத்தால் நயனங் களிகூர – கண்கொள்ளாக் காட்சி கிடைக்கும். வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே என்றார்.
     குருவின் உருவாங் குறித்தஅப் போதே
      திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.
      என்றார். அப்போது அந்த நேரம் வந்தது, குருவின் உருவம் குறித்த – குரு உன் முன் தோன்றி “உன் அன்பான பூஜையை ஏற்றுக் கொண்டேன். இன்று முதல் நீ வேறு, நான் வேறு அல்ல. நீயும் நானும் ஒன்று” என்று சொல்வார்.
     குருவின் உருவாங் குறித்தஅப் போதே – அந்த நேரம்தான் அவர்கள் நேரில் வருவார்கள். அந்த வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு. இதைத்தான் ஆசான் திருமூலர் சொல்வார்,
     நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
      வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
      ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்
      தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
                                                -திருமந்திரம் – திருமூலர் வரலாறு – கவி எண் – 85
     தான் அடைந்த இன்பத்தை மற்றவர்களும் பெற வேண்டுமென்பார். இந்த இன்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் ஞானிகளுக்கு இருக்கும். சிந்தையில் எப்போதும் பரந்த எண்ணமே இருக்கும், குறுகிய நோக்கம் இருக்காது. எப்போதும் பரந்த எண்ணங்கள், பரந்த அறிவு, பரந்த எண்ணம், நல்ல சிந்தனைகளோடு இருப்பார்கள்.
    
     நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் – இந்த இன்பத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்பதற்காகத்தான், இந்த துறையில் உள்ள மக்கள் இப்பேர்ப்பட்ட விழாக்களை நடத்துவார்கள்.
     மாசி மகத்திற்கு ஏன் விழா நடத்த வேண்டும்? இதற்கு காரணம் என்ன? இதுபோன்ற விழாவிற்கு அன்பர்களைக் கூட்டி, ஆண்கள் பெண்களைக் கூட்டி ஞானிகள் பற்றிய கருத்துகளைச் சொல்வார்கள். இந்த வாய்ப்பை நான் அடைந்திருக்கிறேன், நான் பெற்றிருக்கிறேன். நீங்களும் பெற வேண்டும்.
     என்னுள்ளே பத்தாண்டுகளாகவே ஆதித்தலைவன் சுப்பிரமணியர், அருந்தவப்புதல்வன், கேட்பவர்க்கெல்லாம் வாரி வழங்கக் கூடிய பெருந்தகையாளன், எத்தனை குற்றம் செய்த போதும் பொறுத்துக் கொள்ளும் பண்பாளன் என்னுள் தங்கியிருக்கிறார்.
     காரணம் இந்த உலகத்தில் எந்த மகானை வணங்கினாலும், அந்த வினாடியே ஆசான் சுப்பிரமணியர் “நம் சீடரில் ஒருவரை வணங்குகிறான். நமது ஆசி அவனுக்கு உண்டு” என்று சொல்வார். அப்பேர்ப்பட்ட ஆசான் சுப்பிரமணியர் பத்தாண்டுகளாக என்னுள் தங்கியிருக்கிறார். இந்த விழா நடத்துவதற்கு அடிப்படைக் காரணம், இப்பேர்ப்பட்ட ஆசான் சுப்பிரமணியர் பூஜை செய்வதற்காகத்தான்.
     அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
      அந்த வுடல்தான் குகைசெய் திருத்திடில்
      சுந்தர மன்னருந் தொல்புவி யுள்ளோரும்
      அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
                                                                -திருமந்திரம் – சமாதிக் கிரியை – கவி எண் 1913
                அவர் என்னுள் தங்கியிருக்கிறார். தங்கியிருப்பதால் எனக்கு நினைத்ததெல்லாம் கை கூடுகிறது. இந்த ஓராண்டுக்குள் ஏராளமான பொருள் அன்னதானத்திற்கு வந்துள்ளது. அதைக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்திருக்கிறோம். மேலும் பல நல்ல காரியங்களை செய்திருக்கிறோம்.
     இன்னும் வருங்காலத்திலே, மாதம் ஒன்றுக்கு லட்சகணக்கில் அன்னதானத்திற்கு செலவு செய்ய திட்டமிருக்கிறது. நாங்கள் எந்த அளவிற்கு செலவு செய்ய திட்டமிடுகிறோமோ அந்த அளவிற்கு ஆசானை கேட்போம், “நல்ல காரியம் செய்ய வேண்டும் அதற்கு அருள் செய்யப்பா!” என்று கேட்டால் “இந்தா பிடி” என்று தருவார்கள். எப்படி என்றால் வங்கியில், ஐம்பது லட்சம், ஒரு கோடி இருந்தால் செக் போடும் போதெல்லாம் பணம் கொடுக்கிறார்கள் அல்லவா? அதுபோன்று தருவார்கள்.
     “இதுபோன்று விழா நடக்க வேண்டும். அதற்கு நீர்தான் அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டால் “தந்தேன்”  என்பார். பத்து, இருபது ஏழைகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்க வேண்டுமென்றால், “ஏற்பாடு செய்! இந்தா காசு” என்பார்.
     தினமும் வருகின்ற அன்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ஆசைப்படுகிறோம். இனம், சாதி, மத துவேசம் இல்லாமல் சாப்பாடு கொடுக்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னால் “இந்தா வைத்துக்கொள்!” என்பார்.
     ஒட்டுத்துணி தைத்து கட்டிக் கொண்டிருக்கின்ற ஏழைப் பெண், நடக்கும் போதே அப்படி ஒட்டு போட்டது பிதுங்கி தன் மானத்தைக் காப்பாற்ற முடியாமல் தடுமாறுகிராளே? அந்த கொடுமையான காட்சியை என்னால காண முடியவில்லையே? இது போன்று ஆயிரக்கணக்கான ஏழைப்பெண்கள் மானத்தைக் காப்பதற்காக,தரமான ஆடை நூறு பேருக்கு கொடுக்க ஆசைப்படுகிறேன் அப்பா!” என்றால் “இதோ தந்தேன்” என்பார்.
     பிள்ளைகளின் கால்சட்டை கிழிந்திருக்கிறதே. முன்னே போகும் பிள்ளைகளைப் பார்த்து தாய் வேதனைப்படுகிறாளே. இந்த பிள்ளைகளுக்கெல்லாம் உடை தர வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்றால், “இதோ வாங்கிக் கொள்!” என்பார்.
     “நோய் உள்ளவர்களுக்கெல்லாம் உதவி செய்ய ஆசைப்படுகிறேன்” என்றால் “இதோ வாங்கிக்கொள்!” என்பார். எதை வேண்டுமானாலும் விரும்பலாம், எதைக் கேட்டாலும் தருவார். அதனால்தான் மாதம் ஒன்றுக்கு மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்வோம் என்று சொன்னேன். நான் எதை எதை விரும்புகிறேனோ அதையெல்லாம் செய்து வைப்பார். விரும்பியதெல்லாம் கைகூடும். ஆனால் அந்த விருப்பம் பொது நலத்தைக் கருதியதாக இருக்க வேண்டும், இருக்கும். வேறு வழியில்லை. அப்படித்தான் இருக்கும். வேறு வழியே இல்லை என்பார்.
     வருகின்ற சித்ராபௌர்ணமி அன்று ஏழை மக்களுக்கு இலவசத் திருமணம் செய்து வைக்கிறோம். ஒரு பெண்ணுக்குத் தேவையான உடையும், மாப்பிள்ளைக்குத் தேவையான உடையும் மூன்று கிராம் தங்கத்தில் ஒரு தாலி. இவைகளை கொடுத்து அவர்களுக்கு சன்மார்க்க முறைப்படி  திருமணம் செய்து வைத்து அன்று மதியம் எல்லோருக்கும் சாப்பாடு வழங்குகிறோம். சன்மார்க்க முறைப்படி சித்ராபௌர்ணமி அன்று பூஜை செய்த, அந்த உணவைத்தான் எல்லோருக்கும் தருவோம்.
     நம் சக்திக்கு உட்பட்டு ஐந்து ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைக்கிறோம். சில அன்பர்களிடம் அந்த பொறுப்பை கொடுத்திருக்கிறோம். இப்போது நாம் தினம் அன்னதானம் செய்து வந்திருக்கிறோம். பல நல்லகாரியம் செய்வோம். இன்னும் கிராமங்களில் ஒதுக்குப்புறமான இடத்திலே, ஏழை எளிய மக்கள் யாராவது தன்மானத்தைக் காக்க, சேலை இல்லாவிட்டால், அதை வாங்கிக் கொடுப்போம். இப்படி வருவாய் பெருகப் பெருக, நல்ல பல காரியம் செய்வோம். எல்லாமே நடக்கும், விரும்பியதெல்லாம் நடக்கும்.
     வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
      ஈண்டு முயலப் படும்.
                                                        -திருக்குறள் – தவம் – குறள் எண் 265
                                விரும்பியதெல்லாம் கைகூடும். ஆனால் விருப்பம் நியாயமாக இருக்க வேண்டும்.
     வருகின்ற சித்ராபௌர்ணமியன்று நடைபெறுகின்ற இலவசத் திருமணமாக இருந்தாலும் சரி, அன்னதானமாக இருந்தாலும் சரி, இன்னும் பல நல்ல காரியங்களாக இருந்தாலும் சரி, சன்மார்க்க சங்க அன்பர்களின் ஒத்துழைப்பால்தான் செய்யமுடியும். என்னுடைய திறத்தாலேயே, அறிவாற்றலாலோ செய்யமுடியாது, ஒரு பாத்திரத்தை தூக்கக் கூட என்னால் முடியாது.
     சன்மார்க்க அன்பர்கள் சமையலுக்காக பாத்திரத்தை தூக்கும் போது, பார்த்துக் கொண்டிருப்பேன். நான் பாத்திரத்தை தூக்குவதற்காக கை வைத்தால், வைக்காதீர்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் அந்த புண்ணியத்தை அவர்களே பெற்றுக்கொள்ள வேண்டுமென்று என்னை எந்த வேலையையும் செய்ய விட மாட்டேன் என்கிறார்கள். அவ்வளவு வேலையையும் அவர்கள்தான் செய்வார்கள். பல நல்ல செயல்கள் நடைபெறும்.
     அன்பர்களுக்கு “அஷ்ட லட்சுமியே நமஹ” இன்று ஒரு உபதேசம் செய்தேன். என்ன உபதேசம்? அந்த உபதேசத்தின் சாரம் என்ன? என்பர் கேட்டார்கள்.
     இதுநாள் வரை ஆசான் அகத்தீசர் நாமத்தை சொன்னால் உங்களுக்கு சகலமும் சித்திக்கும் என்று சொன்னாரே? இன்று திருமகள் அருள் பெறுவதற்காக ஒரு விஞ்சை சொல்கிறாரே என்றால் அது உண்மைதான். ஆசான் அகத்தீசர் வாக்கு தான். என்னுடைய அறிவல்ல. இந்த பூஜை செய்கின்ட்ராஸ் மக்களுக்கு திருமகள் கடாட்சம் உண்டு.
     திருமகள் கடாட்சம் என்றால் என்ன? திருமகளை எப்படி வரவழைப்பது? எங்கேயோ பம்பாயில் இருந்து வந்து, சென்னையில் தங்கியிருந்தால், அந்த திருமகளை அழைத்து வந்திருக்கலாம். இல்லை, பம்பாயில் இருந்தால், இங்கிருந்து ரதம் கொண்டுபோய் அழைத்து வந்திருக்கலாம். அப்படியே செலவு செய்ய வேண்டியிருந்தாலும், சந்திர மண்டலத்திற்குப் போய் அழைத்துக் கொண்டு வந்து விடலாம். அங்கேயும் இல்லை. ஆனால் வரவழைக்கலாம்.
     ஏன் செல்வத்திற்கு, பொருளாதாரத்திற்கு திருமகள் என்று பெண்ணாக வைத்திருக்கிறான்? பெண்மை என்பது மென்மையானது, சாந்தம் உள்ளது. அது நன்மை தரும். ஆகவே செல்வத்திற்குரியவன் திருமகள் என்று ஆசான் அகத்தீசர் சொல்லியுள்ளார்.
     சமுதாயத்தில் வறட்சியின் காரணமாக எத்தனையோ மக்கள் வெளியே தெரியாமல் அல்லற்படுகிறார்கள். ஒரு நேரம் மட்டும் சாப்பிடுவது. ஒரு நேரம் கூட சாப்பிடாமல் இருப்பார்கள். ஆனால் வெளியே வரும்போது பார்த்தால் உயர்ந்த ரகமான சட்டைபோட்டிருப்பார்கள்.
     கடையில் சாப்பிடும்போது, மதிய நேரத்திலேயே டிபன் சாப்பிடுகிறான். ஏன் டிபன் சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்டால், வயிறு ஒத்துக் கொள்ளவில்லை என்பான். இல்லை, சூழ்நிலை சரியில்லை! வருவாயின் அமைப்பு அப்படி இருக்கிறது. இன்று சமுதாயம் இப்படி ரொம்ப வறண்டு போய் இருக்கிறது.
     “சமுதாயத்தில் வறட்சி மிகுதியாக இருப்பதனாலே, இனி வருங்காலம் ஞானச்சித்தர் காலம் என்பதனாலே, சமுதாயத்திற்கு இந்த விஞ்சையை சொல், மறுமலர்ச்சி அடையும், சுபிட்சமாகும்” என்றார்.
     எதையும் அவர்களால் செய்ய முடியும். அவர்கள் அன்பர்களுக்காக எதையும் செய்வார்கள்.
     ஆசான் அகத்தீசரை வணங்கினால், உனக்கு சகலமும் சித்திக்கும்.
பாட்டாளி துதைந்துவளர் கற்பகந னீழலைப்
பாரினிடை வரவழைப்பீர்
பத்மநிதி சங்கநிதி யிருபாரி சத்திலும்
பணிசெயுந் தொழிலாளர்போல்
கேட்டது கொடுத்துவர நிற்கவைப்பீர்; பிச்சை
கேட்டுப் பிழைப்போரையும்
கிரீடபதி யாக்குவீர்; கற்பாந்த வெள்ளமொரு
கேணியிடை குறுகவைப்பீர்
ஓட்டினை யெடுத்தாயி ரத்தெட்டு மாற்றாக
வொளிவிடும் பொன்னாக்குவீர்
உரகனு மிளைப்பாற யோகதண் டத்திலே
யுலகுசுமை யாகவருளால்
மீட்டிடவும் வல்லநீ ரென்மனக் கல்லையனன்
மெழுகாக்கி வைப்பதரிதோ;
வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலைபெற்ற
வித்தகச் சித்தர்கணமே .
                                                -மகன் தாயுமானவர் – சித்தர் கணம் – கவி எண் 2
     மகான் தாயுமானவர் தனது பாடலில் சொல்வார், அன்பர்கள் விரும்பினால் வண்டு மொய்க்கக்கூடிய பாட்டாளி துதைந்துவளர் கற்பகந னீழலை தருவார்கள். கற்பக தரு – விரும்பியதெல்லாம்  தரக்கூடிய கற்பக நிழலை பாரிடை வரவழைப்பீர். அது உம்மால் முடியும்.
     மகன் தாயுமானவர் ஆசான் அகத்தீசரிடம், “உங்களுக்கு உள்ள ஆற்றல் எனக்குத் தெரியும். என்னை நீர் ஏமாற்ற முடியாது” என்றார். அதுதான் அவர்கள் ஆற்றல்.
     பத்மநிதி சங்கநிதி யிருபாரி சத்திலும்
      பணிசெயுந் தொழிலாளர்போல்
     பத்மநிதி – கடலும் கடல் சார்ந்த செல்வம், சங்கநிதி – நிலமும் நிலம் சார்ந்த செல்வம் ஆகும். கணக்கில் அடங்காத இரண்டு நிதியையும் வேலைக்காரனாக நிறுத்தி வைக்க உங்களால் முடியும் என்பார்.
     இருபாரி சத்திலும் பணிசெயுந் தொழிலாளர்போல் – இந்த இரண்டு பொக்கிஷத்தையும், செல்வத்தையும் அழைத்தபோது வந்து, “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கின்ற வேலைக்காரனை போல ஆக்கமுடியும். ஆக எவ்வளவு ஆற்றல் அவர்களுக்கு?
     கேட்டது கொடுத்துவர நிற்கவைப்பீர்; பிச்சை
            கேட்டுப் பிழைப்போரையும்
      கிரீடபதி யாக்குவீர்;
      பிச்சை எடுப்போரையே உன்னால் அரசாள வைக்க முடியும். அரசுக்கு உரியவனாக ஆக்குவீர், அமைச்சனாக ஆக்குவீர், முடிசூடும் மன்னனாக ஆக்குவீர். இத்தனை ஆற்றல் உள்ள மகான், இந்த விஞ்சையை சொல் என்று சொல்லியிருக்கிறார். காலையில் சொன்ன விஞ்சையின் சாரம் இதுதான்.
     இப்படி சொல்வதற்கு பத்தேகால் ரூபாய் உலகோர் போன்று வாங்கியிருக்கிறோம். உலகோர்தான் உபதேசத்திற்காக இப்படி பொருளை வாங்குவார்கள். இந்த சங்கம் அப்படிச் செய்ததென்றால் அதற்கு என்ன பொருள்? நீ கொடுத்த பத்து ரூபாய் நான்கு ஏழைகளுக்கு உணவு கொடுக்கப் பயன்படும். உன் சார்பாக அன்னதானம் செய்து அந்த புண்ணியத்தை நீ அடைய வேண்டும் என்பதற்காக அந்த பத்து ரூபாயை, பெருமைக்குரிய நல்ல நோக்கத்தோடு வாங்கியிருக்கிறோம்.
     நீ கொடுத்த பத்து ரூபாய் உன் சார்பாக ஐந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்து அந்த புண்ணியத்தை நீ அடைய வேண்டும் என்ற தூய மனதோடு அந்த செயல் செய்யப்பட்டிருக்கிறது. பணத்திற்காக இந்த சங்கமல்ல! இன்று காலை 118 அன்பர்கள் ஒவ்வொருவரம் பத்தேகால் ரூபாய் கொடுத்து உபதேசம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாது மறைமுகமாக தாங்கள் ஒவ்வொருவரும் மறைமுகமாக ஐந்து ஏழைகளுக்கு அன்னதானத்திற்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று. இப்போதுதான் அந்த ரகசியத்தை வெளியிடுகிறோம். நீ முன்னமே ஐந்து ஏழைகளுக்கு தேவையான உணவிற்கு பணம் கொடுத்து விட்டாய். மொத்தம் 1250 ரூபாய். இன்ஹ்ட தொகையை கொண்டு இரண்டு மூட்டை அரிசி, மதிய அன்னதானத்திற்கு வாங்கிவிட்டோம். இது மற்ற அன்பர்களுக்கு தெரியும்.
     பசி உள்ளவனுக்கு உணவு கொடுப்போம். நீ புண்ணியத்தை தேடுவதற்கு உன் மூலமாக பத்தே கால் ரூபாயும், எல்லாம்வல்ல ஆசான் அகத்தீசரை வணங்கி ஆசி பெறுவதற்காக பக்தி நெறியையும் போதித்து, உன்னை இரண்டு வகையிலும் உயர்த்துவதற்காக இந்த விழா நடைபெறுகிறது.
     ஒரு பக்கம் தர்மம், ஒரு பக்கம் தவம். இரண்டும் இரண்டு கண்கள். மிகுதியாக தர்மம் செய்தால் சிறந்த பிறப்பு வரும், புண்ணியவானாக பிறப்பான். அமைச்சனாக இருப்பான்.
    
     ஆனால் தவமும் சேர்ந்திருந்தாலன்றி, ஒருவனுக்கு ஞான வாழ்வு வராது, தவமும் தர்மமும் சேர்கிறது. தவத்தால் சிறப்பறிவும், தர்மத்தால் பாதுகாப்பும் வேண்டும். இந்த இரண்டும் சேர்ந்தாலன்றி ஒருவன் பிறவித்துன்பத்திலிருந்து விடுபட முடியாது. இந்த சங்கம் இரண்டையும் போதிக்கும். ஒன்று தவத்தையும் செய்யும். இரண்டு தர்மத்தையும் போதிக்கும். தவம் எது? தர்மம் எது? என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். தவம் என்பது கண்ணை மூடியிருப்பதால், காட்டுக்கு செல்வதல்ல, நீ காலை எழும்போதே பன்னிரண்டு முறை ஆசான் அகத்தீசர் நாமத்தை சொல்ல வேண்டும். இப்போது சொல்லுங்கள்,
ஓம் அகத்தீசாய நம      ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம      ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம      ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம      ஓம் அகத்தீசாய நம       
ஓம் அகத்தீசாய நம      ஓம் அகத்தீசாய நம  
ஓம் அகத்தீசாய நம      ஓம் அகத்தீசாய நம
     இப்படி நாமஜெபம் சொல்வதே தவம். தவம் என்பது ஒரு பக்கம் மூக்கை அழுத்திக் கொண்டு மறுபக்கம் மூச்சுக்காற்றை இழுப்பதல்ல, காட்டுக்கு செல்வதல்ல, மனைவி மக்களை துறந்து செல்வதல்ல, வீட்டிலிருந்தபடியே செய்வதுதான் தவம். இந்துவே தவம்.
     தர்மம் எது? என்று கேட்டான். மற்றவனை இகழ்ந்து பேசாதே. அதுவே போதும் என்றான். “அவனுக்கு என்ன யோக்கியத்தை இருக்கிறது? என்னை இகழ்ந்து பேச” என்று சொல்லி சாடிப்பேசாதே. பிறரை மதிக்கக் கற்றுக் கொள். சாந்தமாக பேசுவதே தர்மம் என்று சொல்வான். மகன் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
         
     முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தான்ஆம்
      இன்சொ லினதே அறம்.
                                                -திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் – 93
இனிமையாகப் பேசுவதே தர்மம் என்பார்.
     யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
      யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
      யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
      யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
                                -திருமந்திரம் – அறஞ்செய்வான் திறம் – கவி எண் 252
                தர்மத்தையே இப்படி லகுவாக, இனிமையாகப் பேசுவதே தர்மம் என்று சொல்வார்.
     ஆகவே அன்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒவ்வொரு அன்பரும், ஆண்களும், பெண்களும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.
     இந்த சங்கத்தின் செயல்பாடுகளெல்லாம் தூய்மையான செயல்பாடுகும் என்று உறுதியாக சத்தியமாக சொல்கிறேன். ஒரு பைசா கூட இந்த சங்கம் இருப்பு வைத்துக் கொள்ளாது.
     அன்னதானத்திற்கு அரிசி வாங்குவோம். இருபத்துநான்கு மணி நேரமும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்கான் வேண்டும், சமைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வருகிறவனை யார்? என்று கேட்கக் கூடாது. சாப்பிடு! என்றுதான் சொல்ல வேண்டும். அவனுக்கு சாப்பாடு போடு வேண்டும்.
     இருப்பு வைக்காமல் அன்னதான காரியங்களைச் செய்வோம். இது போன்ற நல்ல பல அறிய காரியங்களைச் செய்வோம்.
     அதே சமயத்தில் ஆசான் அகத்தீசர் இன்னன்ன காரியங்களை செய் என்று சொன்னால், அப்படியே செய்வேன். இது சுப்ரீம் கோர்ட், உச்ச நீதிமன்ற தலைமை. திருமண மண்டபம் கட்டு என்று கட்டளை வந்தால் அவர் சொன்னதை நான் செய்வேன். எனது ஆசான் அகத்தீசர் சொல்வதை செய்வேன்.
     ஆகவே அன்பர்கள் இது போன்ற சங்கத்தின் பல நல்ல செயல்களுக்கு துணை நிற்க வேண்டும். இந்த சங்கத்தின் கொள்கை எது?
     பணிவு காட்டுதல்,
     இனிமையாகப் பேசுதல்,
     வஞ்ச மனப்பான்மை இல்லாதிருத்தல்,
     பிறரை மதிக்கக் கற்றுக் கொள்ளுதல்,
     ஜாதி, மத துவேசம் இல்லாதிருத்தல்,
     எல்லோருக்கும் உணவு தருதல்.
     பிறரை மதிக்காமலோ,கல்வி பெற்றோம் என்ற கர்வத்தாலோ, வாசி வசப்பட்டதே, தசநாதம் காதில் கேட்கிறதே. அமிர்தம் சாப்பிடப் போகிறாயே, புருவப்பூட்டு திறந்து ஜோதி காணப் போகிறாயே, அந்த கர்வத்தால் பிறரை நான் இகந்து பேசியிருந்தால், மற்றவனுக்கு இந்த தகுதி வரவில்லை என்பர் பலகீனமாக அவனை நினைத்தால் அதுவும் குற்றம்.
     “பொருளை சேர்க்காதே, அது கர்மம். யாருக்கோ பயன்படட்டும். இருப்பு வைக்காதே” என்று சொல்லுகின்ற மனது எனக்கு வந்துள்ளது.
     ஜாதி துவேசம் பார்க்க மாட்டேன். பிறரை மதிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறேன். பூரணத்தன்மை அடைய முயற்சிக்கிறேன். குறைபாடுகளை தீர்த்துக் கொள்வதற்காகத்தான் ஆசானுடைய திருவடியை தினமும் பூசித்து வருகிறேன்.
     “என்னிடம் இருக்கும் குறையை நன் தெரிந்து கொள்ள வேண்டும். அதனை நான் நீக்கிக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதுபோல் நீங்களும் கேட்டுக் கொள்ளலாம். இந்த சங்கத்தைச் சேர்ந்த அத்தனை பெரும் பிறரை மதிக்கக் கொண்ட மக்கள். சாதி மத துவேசம் பார்க்கமாட்டார்கள்.
     வருகின்ற சித்திராபௌர்ணமி அன்று இலவசத் திருமணம் செய்ய போகிறோம். அந்த திருமணத்தில் சாதி, மத, இன பேதம் பார்க்காமல் எல்லோரையும் சமமாக பாவித்து ஒன்றாக சரிசமமாக அமரவைத்து திருமணம் செய்யவுள்ளோம். இதற்கு ஆசான் அகத்தீசர் ஆசி வேண்டும். நான் சமமாகப் பார்க்க தவறினால், நான் இன்னும் முன்னேறவில்லை என்று பொருள். நிச்சயம் பார்ப்பேன்! பார்க்க வேண்டுமென்று சொல்கிறேன். அந்தப் பார்வை அன்பர்களுக்கும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன், வேண்டுகிறேன்.
     என்னிடம் உள்ள குறைபாடுகளை நீக்க முயற்சிக்கிறேன், நிறைவான பின் எனக்கு இங்கே வேலை இல்லை.
     ஆகவே அன்பர்கள் இன்பத்தை நீங்கள் அடைய வேண்டும். அதற்கு ஒன்றே ஒன்று தியானம், நிதானம், அன்பு காட்டுதல், பரிவு காட்டுதல், மதிப்பு காட்டுதல், உதவி செய்தல், கூடு வழிபாடு செய்தல், ஒருவரை ஒருவர் கலந்து பேசி தன்னை உயர்த்திக் கொள்ளல். இந்த பண்புகளை கடைப்பிடித்து நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
     நம்முடைய சங்கத்தார்கள் இந்த லட்சியத்தை அடைவதற்காக நான் முயற்சிக்கிறேன். நீங்க ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டால், ஒத்துழைப்போம் என்று நீங்கள் சொல்ல வேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இப்போதும் கேட்கிறேன்.
     வருகிற சித்ராபௌர்ணமி விழா அன்று நடைபெறுகின்ற இலவசத் திருமணத்திற்கு தங்கமும் கொடுத்து உதவலாம். தங்கம் என்பது இன்று எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு உள்ளது. இப்போது சில் வீட்டில் தங்கவே முடியாத அளவிற்குப போய்விட்டது தங்கம். கால் கிராமோ, அரை கிராமோ, ஒரு கிராமோ உங்களால் முடிந்ததை கொடுக்கலாம்.
     ஏதோ ஐந்து ரூபாய் அல்லது பத்து ரூபாய் கொடுக்கலாம். உங்களுடைய உழைப்பும் அதில் இருக்க வேண்டும். தனிநபர் ஒரு காரியத்தை செயஹ்டு பெருமை அடையக் கூடாது. அந்த காரியம் சிறக்காது. அன்று நடைபெறுகின்ற அன்னதானத்திற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். நீங்கள் பொருள் கொடுத்தாள் மட்டும் போதாது. விழாவிற்கு வந்து, சாதத்தை எடுத்து ஏழைகளுக்குப பரிமாற்ற வேண்டும். அவர்கள் சாப்பிடுவதைக் கண்டு ரசிக்க வேண்டும். இந்த உணர்வு உங்களுக்கு வேண்டும்.
     உங்களுக்கு பசி இருக்காது, வெறும் சாதத்தை வைத்துக் கொண்டு பிசைந்து கொண்டிருப்பான். ஆனால் அவன் பசித்தவன், பதினைந்து வினாடிக்குள். அந்த சாத்தத்தை சாப்பிட்டு விடுவான். அந்த உணவை கடவுளாக நினைக்கிறான்.
     அந்த வாய்ப்பு எனக்கு இல்லையே என்று ஏங்குகிறேன். காரணம் எனக்கு உப்பில்லா உணவு. நீங்கள் அரிசி கொடுத்தது மட்டுமல்ல, பணம் கொடுத்தது மட்டுமல்ல, நீங்கள் சாதத்தை பரிமாற்ற வேண்டும். சாப்பிடும் அவர்களை பார்த்து, பசியுள்ள மக்கள் சாப்பிடுவதை கண்டு ரசிக்க வேண்டும்.
     ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
     வைத்திழக்கும் வன்க ணவர்.  
-திருக்குறள் – ஈகை – குறள் எண் – 228
                உயர்ந்த லட்சியத்தை கடைப்பிடித்து, எடுத்துக் கொண்ட இந்த சன்மார்க்க நெறி தழைப்பதற்கும், நீடு வாழ்வதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும். நம்முடைய எல்லா லட்சியங்களுக்கும் வழி வகுத்துச் சொல்லுகின்ற ஆசான் அகத்தீசர் ஆசியும், உலகப்பேராசானாகிய சுப்பிரமணியர் அருளாசியும், கருணையே வடிவான இராமலிங்க சுவாமிகள் ஆசியும், மகத்துவம் பொருந்திய மாணிக்கவாசகர் ஆசியும், தாயினும் இனிய தாயுமான சுவாமிகள் ஆசியும், நமக்கு இருக்கிறது. எல்லா மகான்களும் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். இந்த காரியத்திற்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். ஞானிகள் மறைமுகமாகத்தான் உதவி செய்வார்கள்.
     காலையிலிருந்து இதுவரை பல அன்பர்கள் இங்கே வந்திருந்து இந்த விழாவை மிகச் சிறப்பாக செய்து முடித்தவர்கள். அவர்களின் உழைப்பின் தன்மையை என்னால உணர முடியும். இந்த ஸ்தாபனத்திற்கு பிறர் துன்பத்தை உணருகின்ற பரிபக்குவம் இருக்கும்போது, பிறர் உழைப்பைப் பற்றியா உணராமல் இருக்கும்? நிச்சயம் எங்களால் உணர முடியும். அப்படி பார்க்கும்போதே தெரிந்து கொள்வோம். சரி, உங்கள் உழைப்பு தரமான உழைப்பு என்பர் என் மனதில் பட்டால், அப்படி என் மனதில் தோன்றினால், அந்த வினாடியே அது ஆசான் அகத்தீசர் மனதில் தோன்றும்.
     இந்த சங்கத்தில் நீ கொண்டு செய்து பார். மனமுவந்து இங்கு தொண்டு செய்து பார். ஆனால் இந்தத் துறையில் மாசுபட்டால் எங்களுக்குத் தெரியும். நமக்கு ஒரு ஆற்றல் இருக்கிறது. நீ மனமுவந்து தொண்டு செய்து பார். நிச்சயம் எங்களது ஆசி உனக்கு உந்து. அதனால் மனமுவந்து பொருள் கொடுத்த அன்பர்களுக்கும், தொண்டு செய்த அன்பர்களுக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் எல்லோருக்கும் ஆசான் அகத்தீசர் ஆசி இருக்கிறது, எனது அன்பும், ஆசான் அகத்தீசர் ஆசியும் உங்களுக்கெல்லாம் உண்டு என்பர் சொல்லி இது நேரம் வரை அமைதியாக இருந்து ஒத்துழைத்ததற்கு குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நன்றி சொல்லி முடிக்கிறேன், வணக்கம்.

      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175070
Visit Today : 210
Total Visit : 175070

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories