இது வரை உலகம் அறிந்த திருக்குறள் & திருவள்ளுவர்
——-
திருக்குறள் உலக பொதுமறை
உலகின் பெரும்பாலான மொழிகளில் மொழிபெயர்கப்பட்ட தமிழ் நூல்
திருவள்ளுவர் தெய்வ புலவர்
——-
ஆனால் உண்மை திருவள்ளுவர் தான் (வஞ்சிக்கும் விந்துவை சதகோடி பிரகாசமுள்ள மணியாக்கியவர்) பிரம்மா விஷ்ணு சிவபெருமான்
ref: (சுக்கலாம் – (விந்து) பரதரம் விக்ஷ்ணு சாசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாதாயே)
ஆகையில் திருக்குறளே இறைவேதம் – மனிதனை இறைவனாக்கும் வேதம் – காமதேகதை அண்டமெல்லாம் பரவும் சூட்சும தேகமாக்கும் ரகசியம் கொண்ட நூல்
——-
ஆனால் ஏன் இதுநாள் வரை இதை ஒரு சில தமிழன் தவிர மற்றவர்களால் உணரமுடியவில்லை?

காரணங்கள்:-

1.பள்ளியிலே அசைவமாகிய முட்டையை மாணவர்களுக்கு சாப்பிட கொடுத்து (வஞ்சிக்கும் காம தேகத்திற்கு விஷ உணவாகிய அசைவம்) ஞான நூலாகிய திருக்குறளை மனிதன் நடத்தினால் அந்த மாணவர்கள் என்ன கற்றுக்கொள்ள முடியும்?

2.நல்லா உயிர்கொலை செய்து கறி சாப்பிடும் அடிப்படை சைவதைக்கூட கடைபிடிக்காத தமிழ் வாத்தியர்கள் திருக்குறள் வகுப்பு நடத்தினால் என்ன உளமார்ந்த விளக்கம் தரமுடியும்?

3.ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் லஞ்சமும் ஊழலும் உல்லாசமாக செய்யும் பேர்வழிகள் நடத்தும் திருக்குறள் விழாக்களில்/கருத்தரங்குகளில் தமிழர்கள் என்ன பயன்பெற முடியும்?

4.வங்கி கணக்கில் முன்தொகையை deposit செய்தால்தான் சொர்போழிவுக்கே வரும் பொருள் பற்று கொண்ட விளக்க உரை ஆசிரியர்கள் / பேச்சாளர்கள்

மேற்சொன்ன குறைகள் இல்லாவிட்டாலும் – எந்த மனிதராலும் காமதேகத்தில் உள்ள அறிவை கொண்டு திருவள்ளுவரின் திருவடியை உருகி பூசிக்காமல் ஞான படைப்பிற்கு விளக்கம் உணரவோ அல்லது அளிக்க முடியாது.
——-
இன்றுமுதல் தமிழன் மேன்மையடைய வழி …….
——-
திருக்குறளை பார்த்தல் தொட்டு வணங்குதல் படித்தல் திருவள்ளுவரை சிந்தித்தல் தியானித்தல் ஆகியவை புண்ணிய ஆன்மாவுக்கு ஆக்கம் தரும் செயல்கள் ஆகும் – இதை குழந்தைகளுக்கு பழக்கி வளர்ப்பதே நாம் நம் தலைமுறைக்கு செய்யும் ஜென்மாந்திர அனைத்து வகை பாதுகாப்பாகும்
——-
இந்த பதிவின் இணைப்பை தொடரும் மக்கள்
மனிதனாக பிறந்து இயற்கை படைத்த மும்மலத்தை நீக்கி மகான்/கடவுள் ஆனா திருவள்ளுவர் எழுதிய இல்லை இயற்றிய / படைத்த ஞானநூலான திருக்குறளுக்கு பாமரனும் அறியும் வண்ணம் வணங்குபவனுக்கு உணர்த்தவும் கடைபிடிக்கவும் வல்ல மும்மலம் அற்ற மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகரின் அருளுரையை எளிய முறையில் வணங்கி கேட்டு பயனடையுங்கள்
——-
இந்த அறிய பெரும் சித்த ரகசிய பொக்கிஷத்தை வலைத்தளத்தில் பகிர உணர்த்தி வாய்ப்பு ஆசி வழங்கிய சிவபெருமான் திருவள்ளுவ நாயனாரின் திருவடியை போற்றி வணங்கி
குற்றம் குறை இருந்தால் மன்னித்து அருளும்படி உங்கள் திருவடியை வணங்கி கேட்டு முடிக்கிறேன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0191773
Visit Today : 104
Total Visit : 191773

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories