புத்தகம் – 24.01.1985 – பூரணம் என்னும் யோக இரகசியம்


அரங்களின் அருளுரைபூரணம் என்னும் யோக இரகசியம்

அகத்தியர் துணை அருட்பெருஞ்சோதி
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி அரங்கமகாதேசிகர் அருளுரை பூரணம் என்னும் யோக இரகசியம்
அருளியவர் :
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு அரங்கமகாதேசிகர்
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
துறையூர் – 621 010.



அமங்களின் அருளுரை
பூரணம் என்னும் யோக இரகசியம்
நூலின் பெயர் :
அரங்கமகாதேசிகர் அருளுரை பூரணம் என்னும் யோக இரகசியம்
நூலாசிரியர்
:
தவத்திரு அரங்கமகாதேசிக சுவாமிகள்
மொழி
தமிழ்
நூலின் பொருள் :
பூரணம் என்னும் யோக இரகசியம்
வெளியிட்டோர் :
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர் – 621010. திருச்சி மாவட்டம். O : 04327 255184, 255384, www.agathiar.org Email : kudil@agathiar.in
முதற் பதிப்பு
:
12.07.2014, பௌர்ணமி பூஜை வெளியீடு
பிரசுர உரிமை :
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
பக்கங்கள்
48
நூல் அளவு
:
1X 8 டெம்மி
தாள்
80 Gsm GluggGg
விலை
ரூ.10/
டைப் செட்டர் :
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர் – 621010. திருச்சி மாவட்டம்.
அச்சிட்டோர்
கண்மணி பிரிண்டர்ஸ், விருதுநகர் -1. O : 9994181146




அரங்களின் அருளுரை
பூரணம் என்னும் யோக இரகசியம்
முருகப்பெருமான் துணை அரங்கமகாதேசிகர் அருளுரை | பூரணம் என்னும் யோக இரகசியம்
திருச்சி மாவட்டம், துறையூர் ஓங்காரக்குடிலாசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
24.01.1985 அன்று அருளிய அருளுரை
பூரணம் என்னும் யோக இரகசியம் அன்புள்ள சன்மார்க்க சங்க உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்,
யோகநெறி , பக்தி நெறிப்பற்றி பலவகையாக, பல ரூபத்திலே பல மகான்கள் சொன்ன கருத்துக்களைச் சொன்ன போதிலும், அவைகள் கேட்பதற்கு இலகுவாக இருக்கும். ஆனால் சிந்திக்கும் போது அது கடினமான ஒன்று.
இந்த கடினமான கருத்துக்களை சில அன்பர்கள் மற்றும் சில சங்கத்தார்கள் என்ன செய்கின்றார்கள்?
ஞானியர்களுக்கே புலப்படாத இந்த கொள்கையை பாமர மக்களுக்கு சொல்லித் தருவதாகவும், அதனுடைய பலனை அனுபவிக்கலாம் என்றும், பல நற்பலன்கள் ஏற்படுமென்று சொல்லி, ஒரு பிரம்மையை உண்டு பண்ணி, இந்த துறையை மாசுபடுத்துகிறார்கள்.
நம்முடைய ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்தான் இந்த துறையை பூரணமாக உணர்ந்து, எப்படி சொன்னால் இந்த தத்துவம் மக்களுக்குப் புலப்படும் என்று அறிந்து, மகான்களின் தயவு கொண்டு சொல்லி வருகிறோம்.



அரங்களின் அருளுரை
பூரணம் என்னும் யோக இரகசியம்

இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் கேட்பதற்கு இலகுவாக இருக்கும், உணர்வதற்கும் இலகுவாக இருக்கும். ஆனால் செயல்படும்போது முடியாது. அதிலுள்ள இரகசியம் எங்களுக்குத் தெரியும். அதை செயல்படுத்தும்போது மகான்கள் தயவு இருக்க வேண்டும். மகான்கள் தயவில்லாமல் முடியாது.
இந்த தத்துவத்தை அறிவதற்கும் ஆன்மலாபம் பெறுவதற்கும் எத்தனையோ மக்கள், ஒரு கோடியல்ல, பலகோடி மக்கள் முயன்று தோல்வியைக் கண்டதாக மகான்கள் சொல்கிறார்கள். பெரியபெரிய கல்வியாளர்களும், சொல்வன்மை உடையவர்களும், எழுத்துவன்மை உடையவர்களும், கவிஞர்களும் அறியமுடியாத ஒன்றை அறிய வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? பாடுபட வேண்டும். இந்த துறையில் பாடுபட முயன்றவர்கள் இறந்து விட்டார்கள்.
அதற்கு விளக்கம் சொல்லும்போது, பலகோடி மக்கள் ஆன்மலாபம் பெற முயன்றும், அந்த உள்ளெழும் ஜோதியை எழுப்ப முடியாமல் இறந்து விட்டார்களென்று ஆசான் சிவவாக்கியர் சொல்வார்.
உள்ளெழும் ஜோதியை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்கு நாம் பலமுறை விளக்கம் சொல்லி வருகிறோம். மனிதருக்குள் ஒரு ஒளிச்சுடர் உள்ளது. அந்த ஒளிச்சுடரை தட்டி எழுப்புகின்ற இடம், அந்த ஒளிச்சுடர் இருக்கும் இடம் மூலாதாரம். மூலாதாரத்தை தட்டி எழுப்ப ஒரு மார்க்கம் உண்டு. அதை மூச்சுக்காற்றால் மட்டும்தான் தட்டி எழுப்ப முடியுமே தவிர வேறு எதனாலும் முடியாது.
மூச்சுக்காற்றைக் கொண்டு மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டும். மூலாதாரத்தில் இருக்கின்ற குண்டலினி சக்திக்கு தாய் என்று பொருள். மூலாதாரத்தில் இருட்டாக இருக்கின்ற அந்த சக்தி, உச்சிக்கு வரும்போது பிரகாசமாக இருக்கின்றது.


மூலாதாரத்தில் இருக்கின்ற குண்டலினியை எழுப்புகின்ற மார்க்கத்தை எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்தார்கள், ஆனால் புலப்படவில்லை. ஆனால் ஆசான் சிவவாக்கியர் மட்டும்தான் சொன்னார். சிவவாக்கியருக்கு யார் ஆசான்? அகத்தீசர்தான் ஆசான்.
ஆசான் அகத்தியர், இந்த உள்ளெழும் ஜோதியை தட்டி எழுப்புகின்ற மார்க்கத்தை ஆசான் சிவவாக்கியருக்கு உணர்த்தினார். இதற்கு விளக்கம் சொல்லும் போது, ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள் கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 4. ஓடியோடி ஓடியோடி உட்கலந்த சோதியை – இல்லறத்தான் ஜோதியை அறிவதற்கு புறத்தே பலவாறு திரிவான். காசி, ராமேஸ்வரம் போன்ற பல ஸ்தலங்களை சுற்றி உண்மைப் பொருளை அறிய முயற்சிப்பான். ஆனால் எங்கு போனாலும் மன உளைச்சலும், அதைப்பற்றி அறிய முடியாத ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர, உண்மைப் பொருளை அறிய முடியாது.
ஓடியோடி ஓடியோடி உட்கலந்த சோதியை – நீங்கள் என்னதான் புறத்தே ஓடினாலும், குண்டலினி சக்தி உங்களுக்குள்ளே இருக்கிறதென்பதை அறிந்து அதை எழுப்புகின்ற மார்க்கத்தை அறிந்தால்தான் உங்களுக்கு உண்மை தெரியும்.
நாடிநாடி நாடிநாடி என்றால் ஆராய்தல் என்று அர்த்தம். நாடுதல் என்றால் விரும்புதல் என்றும் அர்த்தம். உள்ளெழும் ஜோதியை அறிவதற்கு நாம் விரும்பினாலும் காலம்தான் கழியுமே தவிர, உள்ளெழும் ஜோதியை நம்மால் அறிய முடியாது.


வாடி வாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள் – இவர்களெல்லாம் ஏன் மாண்டார்கள்? சும்மாயிருந்து சாகக்கூடாதா? வாடுதல் என்பது துன்பப்பட்டு என்று அர்த்தம். துன்பப்பட்டு, துன்பப்பட்டு சாகின்றான்.
ஏன்? காலமெல்லாம் அலைவான், தூங்காமல் இருப்பான், பசி பட்டினியாக இருப்பான். ஆனால் இந்த ஜோதியின் இரகசியத்தை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ முயற்சி செய்து, கடைசியாக எழுபது எண்பது வயதில் வாழ்ந்து பார்த்திருந்துவிட்டு அப்பா! ஒன்றுமில்லாமல் வெறுங்கையாகப் போகிறேனென்று அல்லற்பட்டு இறந்தவர்கள் அதிகம் பேர்.
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே – எண்ணிலடங்காத மக்கள் இப்படி போய்விட்டார்கள். அவன் உண்மைப் பொருளை அறியவில்லை. அவனுக்குத் தக்க ஆசான் இல்லை. அதற்காக என்ன செய்வான்? விரைவாக முன்னேற வேண்டுமென்று, யாராவது விரைவாக ஒரு பாதையைக் காட்டுவானா? என்று அலைவானே தவிர, உண்மையான இடத்திற்கு வர மாட்டான்.
நாங்கள் என்ன சொல்வோம்? அப்பா! நீ என்னதான் பாடுபட்டாலும், உன் வினை இருக்கும் வரையில் அது உன்னை விடாது. இந்த வினையை ஒழிப்பதற்கு ஒன்று தர்மம் செய்ய வேண்டும். மற்றொன்று தவம் செய்ய வேண்டும். அந்த தவம் என்பது ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்ற வேண்டும் அல்லது ஏதாவது ஒரு மகான் பாதத்தைப் பற்ற வேண்டும்.
அப்ப தவசியின்பால் அன்பு கொள்வது தவமென்றும், தர்மம் செய்வது அது தானம் என்றும் பொருள். ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அல்லது மற்ற வகையில் உதவி செய்ய வேண்டும். அப்போது ஏழை எளிய மக்களும் மற்றவர்களும் இவனை நல்லவன் என்று வாழ்த்தும்போது கிடைக்கும் ஆசியும், மகான்களுடைய தயவும் சேர்ந்து என்ன செய்யும்? நாம் பல்வேறு
10


ஜென்மங்களில் செய்த பாவசுமை நீங்கி, நமக்கு ஒரு உள்ளுணர்வு ஏற்படும். அப்படி உள்ளுணர்வு எழும்பினால் தான் நமக்கு உண்மை புலப்படும். இல்லாவிட்டால் வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்காள் என்றார். அப்படி ஆகாத அளவிற்கு செயல்பட வேண்டும்.
அந்த பொருள் எப்படி இருக்கிறது? உருவ வழிபாடு செய்தால் வருமா? உருவ வழிபாடு செய்தால் என்ன ஏற்படுமென்றால், ஒரு மனநிறைவு ஏற்படுமே தவிர, அதிலிருந்து ஒன்றும் கிடைக்காது.
பலகோடி மக்கள் இந்த துறையில் முன்னேற முற்பட்டு ஆன்மலாபத்தைப் பெறுவதற்கு முயற்சித்தாலும், அத்தனைபேர்களும் தோல்வியடைந்தது மட்டுமல்ல, துன்பப்பட்டு இறந்தார்கள் என்பது இதன் சாரம். துன்பப்பட்டு இறக்காமல் இருக்க என்ன செய்யலாம்? சிந்திக்க வேண்டும். சிந்திக்க சிந்திக்க தலைவன் என்பவன் ஒருவன் இருக்கிறான். அவன் ஞானிதான். ஈசன்தான் ஞானி. ஈசன்தான் தலைவன். அவன் ஆதிகாலத்தில் சித்தி பெற்றவன். மகான் மாணிக்கவாசகர்தான் இந்த உண்மையைச் சொன்னார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி தமிழகத்தில் தான்
ஆதித்தலைவனே தோன்றியிருக்கின்றான். அவன் பின்னர் உலகத்திற்கே தலைவன் ஆனான். அப்பேர்ப்பட்ட தலைவன்பால் அன்பு கொள்ளும்போது என்ன ஆகும்? நீ அன்புகொள்ள, அன்புகொள்ள அந்த மெய்யுணர்வு, பல்வேறு ஜென்மங்களில் மும்மலக் களிம்பால் ஏற்பட்ட மயக்க உணர்வு நீங்கி மெய்யுணர்வு தோன்றும்.
அது எப்படி தோன்றுமென்றால் இளநீரில் தண்ணீர் வந்து சேர்வதுபோல என்றார். அது யாருக்காவது தெரியுமா? எனவே மெய்ப்பொருள் உணர்ந்த ஆசான்மேல் அன்பு செலுத்த செலுத்த அகம் அன்பு செலுத்தும். ஆனால் புறம் அறியாது. புறத்திலே அன்பு


செலுத்துவதாக காட்டுவதெல்லாம் அபத்தமாக முடியுமே தவிர, அதனால் எந்த பயனும் கிடையாது. ஆனால் அக அன்பு, அகத்திலே அன்பு மிகுதி ஆகஆக எல்லாம்வல்ல பரம்பொருள் அல்லது எல்லாம் வல்ல ஞானிகளுடைய அனுக்கிரகம் பையபைய நம்மை சார்ந்துவிடும். நம் உணர்வோடும் உணர்ச்சியோடும் கலந்துவிடும்.
செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள் போல் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன் ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 33. செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் – செய்ய என்றால் செயல்படுதல். ஒரு காரியத்தை செய்தான் என்றால் செயல்பட்டான் என்று அர்த்தம். காட்டில் ஒரு தென்னந்தோப்பு இருந்தால் அதை தினமும் பராமரிக்க வேண்டும். மண் கொத்துவது போன்று சில பராமரிப்பு இருக்கிறது. சில மரங்களில் காயே காய்க்காது. காரணம் அதற்கு பராமரிப்பு இல்லை. தேவையான உரமோ , நீர்வசதியோ இல்லாமல் அந்த தென்னம்பிள்ளை காய்க்காது.
பராமரிக்கப்பட்ட தென்னை மரத்திலிருந்து இளநீர் வந்தால் அதற்கு ஒரு போஷாக்கு உண்டு. இளநீர் பெருக்கும். மரத்தை எந்த அளவிற்கு பராமரிக்கின்றார்களோ? அந்த அளவிற்குத்தானே இளநீருக்குள் நீர் பெருக்கும். அப்ப இளநீருக்குள் இருக்கும் தண்ணீர் ஆரம்பத்தில் சிறிய அளவாக இருக்கும். நாளுக்குநாள் நாளுக்குநாள் வேரில் இருக்கும் நீர் இளநீருக்குள் வந்துவிடும். இளநீரை வெட்டினால் முக்கால் லிட்டர் நீர் இருக்கும். அந்த முக்கால் லிட்டர் தண்ணீ ரும் எப்படி வந்தது? என்று யாருக்கும் தெரியாது. நீர் அந்த காம்பு வழியாக இளநீருக்குள் சேர்ந்து முக்கால் லிட்டர் அளவில் இருக்கும். அது நம் கண்ணிற்கு புலப்படாதது போல சிந்திக்க சிந்திக்க எல்லாம்வல்ல பரம்பொருளுடைய அனுக்கிரகம், அருள் என் அகத்தே பொருந்தியது. அகத்தில் பொருந்தியபின் அவன் என்ன


செய்தான்? இந்த தத்துவத்தை வெளியில் சொல்ல முடியாத சூழ்நிலை எனக்கு வந்து விட்டது என்று சொன்னார் ஆசான் சிவவாக்கியர்.
ஒலிபடருங் குண்டலியை உன்னியுணர் வாலெழுப்பிச் சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவது மெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 94 ஒலி படருங் குண்டலியை – ஒலி என்றால் சப்தம். ஓசையை படரச் செய்யுமென்றார். இப்ப மத்தளத்தில் ஒரு பொருளை அடிக்கும்போது ஒரு எதிரொலி கேட்கும். அந்த எதிரொலி எந்த அளவிற்கு அடிக்கின்றோமோ அந்த அளவிற்கு கேட்கும். அது புறத்தே கேட்கும். ஆனால் மூலாதாரத்தில் காற்று ஒடுங்கிய அந்த வினாடியிலிருந்து மெல்லிய சப்தம் “ஓம் ரீம்” என்று கேட்க ஆரம்பிக்கும். இது எப்ப முற்றுப்பெறும்? ஆண்டுகள் பன்னிரெண்டுக்குப் பிறகு தசநாதமாகத் தோன்றும்பொழுது முற்றுப்பெறும். வாசியை மூலாதாரத்தில் நிறுத்துகின்ற மக்கள்தான் அந்த ஓசையை அறியமுடியும். இதைத்தான் சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவது மெக்காலம் என்றார்.
அப்ப புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்று வினாத்தண்டு வழியாக சென்று உந்திகமலத்தில் தங்கும். தங்கிய அந்த காற்று, தங்கிய வினாடியிலிருந்து உடம்பிற்குள் இருக்கின்ற எல்லா கருவிகரணங்களையும் தன்வயப்படுத்தி ஓங்கார தொனியை உண்டு பண்ணும். தங்கிய அந்த காற்றுதான், ஓங்கார தொனியை எழுப்ப முடியும் என்று சொன்னார். இதை உன்னியுணர் வாலெழுப்ப வேண்டுமென்றார். யாருடைய உணர்வால் எழுப்ப வேண்டும்? அவரவர்களுடைய முயற்சியால்தான் எழுப்ப வேண்டுமென்றார். மற்றவன் ஏற்றுவது இறக்குவது அல்ல.
இப்பேர்ப்பட்ட தத்துவத்தை சிலர் குண்டலினி சக்தியை ஏற்றுகிறேன், இறக்குகிறேன் என்று சொல்லி இந்த தத்துவத்தை மாசுபடுத்துகின்றார்கள். அது தப்பப்பா! அவரவர் பாடுபடாமல் முடியாது. அந்த சக்தியை எழுப்புவதற்கு தர்மம் செய்ய வேண்டும், தவம் செய்ய வேண்டும். இதைத்தான் நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறோம்.
20


தர்மம் என்பது மக்களுக்கு பல்வேறு வகையாகவும், உதவிகளாகவும் செய்யலாம். இப்படி செய்து எந்த ரூபத்திலாவது ஞானிகளிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய மனம், மெய், மொழியாகவோ அல்லது பொருளாகவோ உதவி செய்யலாம். மெய்யால் உதவி செய்யலாம், மனத்தால் உதவி செய்யலாம், கல்வியால் உதவி செய்யலாம். இப்படி எந்த வகையிலாவது உதவி செய்து ஆசி பெற வேண்டும்.
தர்மம் செய்ய வேண்டும். இப்படி இருவகையாக முயற்சி எடுத்து, பல மகான்களுடைய அனுக்கிரகம் பெற வேண்டும். இதனால் மகான்களெல்லாம் உள்ளம் உருகி உன் மீது அன்பு கொண்டால், அந்த உணர்வு உனக்கு ஊட்டப்படும் என்றார். இதை உன்னி உணர்வால் எழுப்பக்கூடியதே தவிர, மற்றவன் ஏற்றி இறக்கிவிடுவதல்ல.
இப்படிப்பட்ட உண்மையை நாம் பல கூட்டத்தில் சொல்லுகிறோம். ஆனால் எடுபடவில்லை. ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்றால், அவர் போன உடனேயே குண்டலினியை ஏற்றிவிட்டு இகத்திலிருந்து பரத்திற்கு கொண்டு வந்து விட்டார். ஆனால் இவர் சொல்வதொன்றும் புலப்படவில்லை, புரியவில்லை என்று நம் மீது குறை சொல்லுகின்றான். அது அவன் செய்த பாவம்.
இதை சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவது எக்காலம் என்றார். சுழிமுனையை திறக்காமல் தூண்ட முடியாது. எப்போது சுழிமுனை திறக்கிறது. இதை கவனிக்க வேண்டும். மிகப்பெரிய இரகசியத்தை பேசப்போகின்றோம். இன்றைய கூட்டத்தில் நம்முடைய பேச்சு சிறப்பு சொற்பொழிவு. நம்முடைய பேச்சு சிறப்பு சொற்பொழிவு என்று சொல்லும்போது, சில இரகசியங்களை சொல்லிக்கொண்டே வருவோம்.
புதிதாக வருகின்ற அன்பர்களுக்கு இது சட்டென்று புலப்படாது. வேறு வழியே இல்லை. சுழுமுனையின் தாள் எப்போது திறக்கும்? ஆண்டுகள் பன்னிரெண்டுக்கு மேல் இந்த உடம்பில் பைய பைய உஷ்ணம் ஏற்படும். பின்பு அந்த உஷ்ணம் உச்சிக்கு வரும். கீழே இருக்கும் சுக்கிலமானது, உச்சிக்கு வந்து கபாலத்திலிருந்து லேசாக கசியும். அதுவே அமிழ்த பானம்.


கசிகின்ற அமிழ்தபானத்தை யோகிகள் என்ன செய்கிறார்கள்? மறுபடியும் ஆசான் தயவு கொண்டு வாசியை புருவ மத்தியில் இழுத்து இரேசிக்கின்றார்கள். அப்படி இரேசிக்கும்போது உள்ளே இருக்கும் அக்கினியானது, இரேசிக்க இரேசிக்க ஓங்காரத்தோடு அந்த அக்னி அளவில்லாத கொடூர கோபத்தோடு புருவமத்தியாகிய உச்சிக்கு வரும். உச்சிக்கு வந்த பிறகு என்ன செய்யும்? புருவமத்தியில் ஒரு லேசாக பூட்டு திறக்கும். பூட்டு திறந்தவுடன், அப்படி திறக்கப்பட்ட பூட்டில் வாசியை செலுத்துகின்றான். அப்படி செலுத்தும் போது என்னாகும்? மறுபடியும் அமிழ்த பானம் மீண்டும் மேல்நோக்கும். அது மேல்நோக்கி வரும்போது காற்றை கண்டஸ்தானத்தில் நிறுத்தி, அமிழ்தபானத்தை லேசாக இரு சொட்டு சாப்பிடுவான்.
அமிழ்தபானம் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சாகும். இரண்டு துளிதான் சாப்பிட வேண்டுமென்று சட்டம் இருக்கின்றது. அந்த இரண்டு துளி சாப்பிட்ட பின் என்னாகும்? இவனுக்கு நரை திரை அற்றுப்போகும். அதற்கு முன்னே எல்லா முடியும் நரைத்துப் போனாலும், அமிழ்தபானம் சாப்பிட்ட பின் நரை திரை அற்று நீடிய வாழ்வு உண்டாகும்.
சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவது மெக்காலம் – எதைத் தூண்டனும்? இதனுடைய பொருளை அறிவதற்கு என்ன செய்யலாம்? புறநூல்களை படிக்கலாமா? அப்படி நூல்களை படித்து உண்மையை அறிந்து கொள்ள முடியுமா? முடியாது. குண்டலினி சக்தியை ஆசான் பத்ரகிரியார் தாய் என்று தெளிவாக சொல்கிறார்.
குண்டலினி சக்தியை அறிவதற்கு காசிக்கு போனால் முடியுமோ? இல்லை இராமேஸ்வரம் போனால் முடியுமோ? இந்த கதை ஒன்றும் நடக்காது. இதை சொல்லும்போது,
காசினியெ லாநடந்து காலோய்ந்து போகாமல் வாசி தனிலேறி வருவதினி யெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 93. ஆக இந்த பொருளை அறிவதற்கு, காசினி – உலகெலாம் சுற்றினாலும் முடியுமோ? அந்த பொருள் எங்கே இருக்கிறது? வாசி


அறிந்த மக்களிடம் அந்த இரகசியம் அடங்கி கிடக்கின்றது. அப்ப வாசியால்தான் முடியுமென்பதை, உறுதியாக சொல்கிறார்.
அப்ப வாசியைப் பற்றி அறிய வேண்டுமல்லவா? மூச்சுக்காற்றை தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? மூச்சுக்காற்றைப் பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால், எப்படி இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும்? அப்படியே புறபூஜை செய்துவிட்டு போவதா? ஆக வாசியைப் பற்றி அறிய வேண்டும்.
வாசி என்றால் மூச்சுக்காற்று. அது இருவகையாக இயங்கிக் கொண்டுள்ளது. இப்பொழுது தூல தேகத்தில் வாசி இயங்கிக் கொண்டிருக்கிறது. இதை சூட்சும தேகத்தில் இயங்க செய்ய வேண்டும்.
தூல தேகத்தில் ஒரு நாளைக்கு 21,600 (இருபத்தோராயிரத்தி அறுநூறு) முறை வந்து போகின்ற காற்றை, இந்த தூலதேகத்தில் வாழ்க்கையை நடத்துகின்ற மூச்சுக்காற்றை யோகிகள் சுழிமுனையில் செலுத்துகிறார்கள்.
அந்த சுழிமுனையில் செலுத்துகின்ற வாசியை அறிந்தால் தான், உங்களுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு கிடைக்கும். சுழிமுனையில் ஒடுங்குகின்ற காற்று, குண்டலினி என்று சொல்லப்பட்ட மூலாதாரத்தில் சாரும்போது உங்களுக்கு ஓசை தோன்றும். இத்தகு வாசிநெறி தத்துவத்தை அறியாத மக்கள் இருந்தாலும் பயனில்லை என்றார்.
நித்தமும ணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து கத்தியேக தறியே கண்கள் மூடி என்பயன் எத்தனைபே ரெண்ணினு மெட்டிரண்டும் பத்தலோ அத்தனுக்கி தேற்குமோ அறிவிலாத மாந்தரே –
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 504. எத்தனை பேர் எண்ணினும் – இந்த துறையில் முன்னேற வேண்டுமென ஆசைப்பட்டு, நாமும் ஞானியாக வேண்டும், சித்திபெற வேண்டும் அல்லது மரணமில்லாப் பெருவாழ்வு பெறவேண்டுமென்று விரும்பி ஆசைப்படலாம். விரும்பி


ஆசைப்பட்ட போதிலும், எட்டிரண்டு அறிய வேண்டுமல்லவா? அந்த எட்டு, இரண்டு என்பது உணர்வால் எழுப்பக்கூடியது. அந்த எட்டிரண்டு என்பது உணர்த்துவதல்ல. அது இலக்கணத்திற்கு அகப்படாதது. இலக்கணத்திற்கு அகப்படாத ஒன்று, அதே சமயத்தில் உணர்வால் எழுப்பப்படக் கூடிய ஒன்று என்பார் மகான் சிவவாக்கியர்.
பூஜை செய்கின்ற அத்தனை மக்களும் ஆன்ம லாபத்தை பெற வேண்டுமென்று பூஜை செய்கிறார்கள். ஆன்ம லாபத்தைப் பெற பூஜை செய்கின்ற மக்கள் எதைத் தெரிந்து கொண்டு பூஜை செய்ய வேண்டும்? அதற்கு விளக்கம் சொல்லும்போது ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
நித்தமுமணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து கத்தியேக தறியே கண்கள் மூடி என்பயன் எத்தனைபே ரெண்ணினு மெட்டிரண்டும் பத்தலோ அத்தனுக்கி தேற்குமோ அறிவிலாத மாந்தரே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 504. இது சாடுவது. மகான் சிவவாக்கியர் மூடரே என்றும் அறிவில்லாத மாந்தரே என்று சொல்கிறார். ஆனால் மகான் பத்ரகிரியார் அப்படி சொல்லாமல் இலகுவாக சொல்கிறார். மகான் சிவவாக்கியரிடம் ஒரு பண்பாடு என்னவென்றால், சொல்கின்ற கருத்தை கரடுமுரடாக சொல்வார், தாக்கிப் பேசுவார், மூடர் என்பார், அறிவில்லாதவர் எ
லாதவர் என்பார். ஆனால் ஆசான் பத்ரகிரியார் சொல்வார்,
வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடித் தழுவிநிற்ப தெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 92. வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் – வாயை மூடிக்கொண்டும், கண்ணை மூடிக்கொண்டும் இருந்தால் உனக்கு மயக்கம் போகுமோ? மயக்கம் என்பது என்ன? அறியாமை. இந்த உடம்புக்குள்ளே ஒரு விகாரம், காம விகாரம் இருக்கிறது. காம விகாரத்திற்கு காரணம் மும்மலம். மும்மலத்திற்கான காரணத்தை பலமுறை விளக்கமாக சொல்லியிருக்கிறேன்.


உடம்பிலிருக்கும் காமம் அல்லது களிம்பு அது உணர்வை பாதிக்கும். உடம்பிலிருக்கும் காமத்தை நீக்காமல் உணர்வை சரிப்படுத்த முடியாது. காமம் அற்றிருக்க வேண்டும், மலமாயை அற்றிருக்க வேண்டுமென்று எல்லா மக்களும் விரும்பலாம். இது முடியுமோ? முடியாது. என்ன காரணம்? உடம்பே காம விகாரமாக இருக்கிறது, மும்மல சேட்டை உள்ளது, இந்த உடம்பு களிம்பு உள்ளதாச்சே! இந்த மும்மல களிம்பாகிய அழுக்கு உள்ள உடம்பில் இருந்து வருகின்ற உணர்வும் அழுக்காகத்தானே இருக்கும்? அதுதானே நியாயம்? இல்லை வேறு ஏதாவது இருக்குமா? குளித்தால் போகுமா இந்த அழுக்கு?
நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திர மென்ன கண்டாய் ஆற்றிற் கிடந்தும் துறையறியாமல் அலைகின்றையே.
– மகான் பட்டினத்தார் – கவி எண் 40. இந்த அழுக்கை நீக்குவதற்காக காசிக்கோ, இராமேஸ்வரத்திற்கோ போகலாமா? கங்கையிலோ, காவிரியிலோ மூழ்கினால் போகுமோ? போகாது. இந்த உடம்பிலே அழுக்கு இருக்கும். அதனால் காமவிகாரம் ஏற்படும். காம தேகமாகிய இந்த உடம்பிலிருந்து எழுகின்ற உணர்வு மாசுபட்டிருக்கும். அந்த மாசை நீக்குவதற்கு என்னதான் முயற்சி எடுத்தாலும் முடியாது.
அதற்கு விளக்கம் சொல்லும்போது, வாயோடு கண்மூடி – ஒவ்வொரு மக்களும் வாய் மூடி இருப்பார்கள், கண் மூடி இருப்பார்கள். கண்ணை மூடி இருப்பது என்பது மௌனம். கண்ணை மூடி இருப்பது வெளியில் இந்த காட்சியை எல்லாம் பார்க்காமல், மெய், வாய், கண், மூக்கு, செவி என்கின்ற ஐம்புலன்களை அதன் போக்கிலே போகாமல் அடக்கினாலும், மயக்கம் தீராது.
கண்ணை மூடிக்கொண்டு வாய் மூடி தவம் செய்து கொண்டிருந்தால் மயக்கம் தீருமோ? இல்லை காம விகாரம்தான் அற்றுப் போகுமோ? இல்லை காசி இராமேஸ்வரம் போனால்


முடியுமோ? காசி இராமேஸ்வரம் போனாலும் ஆகாது, கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் ஆகாது. அப்போது ஏதோ ஒரு சக்தி மறைந்து கிடக்கிறதல்லவா? அதற்கு விளக்கம் சொல்லும்போது, குண்டலினி தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்? என்றார்.
குண்டலினி சக்தியை தாயென்று சொன்னார். குண்டலினி சக்தியை ஏன் தாயென்று சொன்னார்? குண்டலினி சக்தி எழுந்தால் அமிழ்த பானத்தைத் தரும். தாய் பால் தருவாள். அந்த பால் அமிழ்த பால். அந்த பாலை சாப்பிட்டால் மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம். அதனால்தான் தாயென்று சொன்னார். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டுமல்லவா? அதை சொல்லும்போது,
இடைப்பிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில் தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – மெய்ஞ்ஞானப் புலம்பல் – கவி எண் 95. இதை சொன்னதும் மகான் பத்ரகிரியார்தான். இடை, பின் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு மனிதனுக்கு இரு பக்க சுவாசம் ஒரு நொடிதான் வரும் அல்லது சில விநாடிகள் வரலாம். உள்ளுடம்பிலே அளவு கடந்து வெப்பம் இருந்தால் இருபக்க சுவாசம் இயங்கும். அது சுழினை அல்ல. இரண்டு பக்கம் சுவாசம் வந்தால் சுழினை என்று சொல்வார்கள். அது சுழினை அல்ல. இரண்டு பக்கம் இயங்குகின்ற காற்றை புருவ மத்தியில் ஒடுக்கினால் அது சுழினை என்று சொன்னார். அது எப்போது ஒடுங்குமென்றால், வினாத்தண்டு நிமிர்ந்திருந்து, வாசியை மகான் தயவு கொண்டு வாசியை சிகார ஸ்தானம் என்று சொல்லப்பட்ட இருதய ஸ்தானத்தில் நிறுத்தி இரேசிக்க வேண்டும்.
அப்படி இரேசிக்கும்போது இருகலையும் செம்மையாக இயங்கும். அது செம்மையாக இயங்கும்போது வெறும் வயிறாக இருக்கும்போது பத்மாசனம் இட்டு ஆசான் தயவு கொண்டு அந்த காற்றை இழுத்து லேசாக ஸ்தம்பித்து நிறுத்தும்போது கருவி கரணங்கள் பூராவும், தத்துவங்கள் பூராவும் தங்கள் நிலை புரண்டாலும் தங்களுக்குள்ளேயே அடங்கி இருக்கும்.


நிலை கடந்து போகும் தத்துவங்கள் ஒரு வினாடிக்குள் என்ன செய்யும்? எல்லா தத்துவங்களும் பொங்கி, ஒரு வினாடிக்குள் இடகலையும், பின்கலையும் ஒரு நிலைப்பட்டு மகான் தயவு கொண்டு புருவமத்தியில் ஏற்றுவார்கள். அப்படி சேரும்போது இரண்டு கலையும் சேரும். பெண் கலை என்று சொல்லப்பட்ட சந்திர கலையும், ஆண் கலை என்று சொல்லப்பட்ட சூரிய கலையும் ஒன்றுபட்டு புருவமத்தியில் ஒடுங்கும். அப்படி ஒடுங்குகின்ற காற்றுதான் உங்களுக்கு ஞானத்தை உண்டு பண்ணும். அதுதான் மூலாதாரத்தில் ஒடுங்கும். வேறு எந்த காற்றும் அங்கே போக முடியாது.
நாசி வழி வந்து போகும் காற்றெல்லாம் சுழிமுனை காற்றல்ல! இடைப்பிங் கலைநடுவே இயங்குஞ் சுழுமுனையில் தடையறவே நின்று சலித்திருப்ப தெக்காலம். – மகான் பத்ரகிரியார் – மெய்ஞ்ஞானப் புலம்பல் –
கவி எண் 95. ஒரு மனிதன் ஒரு காரியம் கைகூடாதபோது சலித்திருப்பான். அப்ப சலித்திருப்பது என்பது சோர்ந்திருப்பது. ஒரு மனிதன் நிசப்தமாக இருந்தால் சலித்திருப்பதாக அர்த்தம்.
தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம் உள்ளே தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம் உள்ளே தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.
– திருமந்திரம் – உபதேசம் – கவிஎண் 129. ஞானிகள்தான் அந்த மௌனத்தில் இருப்பார்கள். அது மௌன தூக்கம்.
அப்ப நாமெல்லாம் பொருளறியாமல் கண்ணை மூடிக் கொண்டிருப்பது அது ஒரு மூடச்செயலே தவிர உண்மைச் செயல் அல்ல. இப்ப இந்த பொருளை அறிவதற்கு நாம் என்ன சொல்கிறோம்? அந்த பொருளை அறிந்த மக்கள் என்ன செய்கின்றார்கள்? மூலாதாரத்தில் ஒடுங்குகின்ற இந்த காற்று


அதிலிருந்து எழுகின்ற அனல் உச்சிக்கு வந்தபின் சூரியனாகவும், சந்திரனாகவும் காட்சி தருகிறது. இதை மகான் பத்ரகிரியார் சொல்லும்போது,
மூல நெருப்பைவிட்டு மூட்டுநிலா மண்டபத்தில் பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 96. மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் – நிலா மண்டபம் என்பது கண்டஸ்தானத்திற்கு மேலுள்ள சந்திர மண்டலம் ஆகும். ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் என மூன்று உள்ளது.
என்னுடைய ஆராய்ச்சியில் அறிந்தது ஆதித்த மண்டலம் என்பது மூலாதாரம் ஆகும், அக்கினி மண்டலம் என்பது சிகார ஸ்தானமாகும். சிலர் இதை ஆதித்த மண்டலமென்றும் மூலாதாரமென்றும் சொல்வார்கள். இருதய ஸ்தானம் என்று என்னுடைய அபிப்ராயம். சிகார ஸ்தானத்தில் அக்கினியை செலுத்தாமல் ஆதித்த மண்டலத்தில் அக்கினியை செலுத்த முடியாது. இதெல்லாம் உயர்ந்த மேலான கருத்துக்கள்.
இன்று பேசப்பட்ட கருத்துக்கள் உங்களுக்கு கடினமான தத்துவங்கள். இது சிறப்புச் சொற்பொழிவு. ஆக நீங்கள் என்ன எதிர்பார்த்தாலும், இன்றைக்கு இப்படித்தான் பேச வேண்டியிருக்கும், வேறு வழியில்லை. அது உங்களுக்குப் புரியாது என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் சட்டப்படிதான் நான் பேசியாக வேண்டும். இப்ப சொல்லப்பட்ட கருத்துக்கள் உங்களுக்கு புதுமைதான், புலப்படாதது தான், வேறு வழியே இல்லை , இதைத்தான் சொல்லியாக வேண்டும்.
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் – மூலாதாரத்தில் அக்கினியை எழுப்பாமல் புருவ மத்தியில் இருக்கும் சந்திர மண்டலத்திற்கு இந்த அக்கினியை கொண்டுவர முடியாது. சந்திர மண்டலத்திற்கு அக்கினியை கொண்டு வந்தால்தான் அமிழ்தபானம் சுரக்கும்.


கண்டஸ்தானத்திலிருந்து உச்சிவரை சந்திர மண்டலத்தின் இருப்பிடம். அப்ப சந்திர மண்டலத்திற்கு அக்கினி வராமல் அமிழ்தபானம் சுரக்காது. அமிழ்தபானம் சுரக்காவிட்டால் பசி ஒழியாது. பசியை ஒழிக்கலாம். ஆனால் ஆவி போய்விடும்.
ஒருவன் சாப்பிடாமல் இருந்தால் செத்தே போய் விடுவான்! சரி, சாப்பிட்டுக் கொண்டிருந்தால், காமம் வந்து விடும். நாம் மரணமிலாப் பெருவாழ்வு பெற காமம்தான் தடையாக இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டுமென்று நினைத்து சாப்பிடாமல் இருந்தால் செத்தே போய் விடுவான். சாப்பிட்டுக் கொண்டிருந்தால் காமம் வந்துவிடும். இது பெரிய பிரச்சனை.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே . – திருமந்திரம் – சரீரசித்தி உபாயம் – கவி எண் – 724. அந்த உபாயத்தை எவன் அறிந்தான்? எந்த உபாயம்? உடம்பும் வளர வேண்டும், உணர்வும் அடங்க வேண்டும். நமக்கு உடம்பு வளர்ந்தால் உணர்வு அடங்காது.
ஆனால் அந்த உபாயத்தை அறிந்த மக்கள் உடம்பையும் வளர்ப்பார்கள், உணர்வையும் அடக்குவார்கள். அது எவ்வளவு பெரிய ஆற்றல்? அது யார் கொடுத்தது? ஆசான் நந்தீசர் அல்லவோ கொடுத்தார். அந்த இரகசியத்தை அந்த ஆற்றலை நமக்கு யார் கொடுக்க வேண்டும்? யாராவது தர முடியுமா? ஒருவராலும் முடியாது. மகான்களின் ஆசியால் முடியும்.
அப்ப சிலபேர் தவறு செய்கின்றார்கள். அதனால் உண்மைப் பொருள் மறைக்கப்பட்டிருக்கின்றது. அந்த உண்மையை வெளிப்படுத்ததான் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம். ஆக அந்த மூல நெருப்பை யார் எப்போது தூண்ட வேண்டும்?
இடை பின்கலை நடுவே இயங்கும் சுழிமுனையை அறிந்த மக்கள்தான் மூல நெருப்பை தூண்டி, உச்சிக்குக் கொண்டு வர முடியும். அப்போதுதான் பாலை இறக்கி உண்டு பசியை ஒழிக்கமுடியும்.


பாலை இறக்கி சாப்பிட வேண்டுமல்லவா? இந்த இரகசியத்தை ஆசான் வழி கொண்டுதான் அறிய வேண்டுமே தவிர எங்கேயாவது போய் நதியில் குளித்துப் பெற முடியுமோ? இதை மகான் சிவவாக்கியர் சொல்லும்போது,
எத்திசையெங் கெங்குமோடி எண்ணிலாத நதிகளில் சுற்றியுந்த லைமுழுகச் சுத்தஞானி யாவரோ பத்தியோட ரன்பதம் பணிந்திடாத பாவிகாள் முத்தியின்றிப் பாழ்நரகில் மூழ்கி நொந்தலைவரே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 545. மூல நெருப்பைவிட்டு மூட்டுநிலா மண்டபத்தில் பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 96. என்று சொன்ன அந்த இரகசியத்தை பல ஊர்களில் உள்ள நதிகளில் போய் மூழ்கினால் வந்து விடுமா? எத்திசையும் எங்கும் ஓடி எண்ணிலாத நதிகளில் – ஒரு நதியல்ல பல நதிகளில் மூழ்கினாலும் எல்லாமே தண்ணீர்தான். புஷ்கரணி தீர்த்தமென்பான், அக்கினி தீர்த்தமென்பான், இப்படியே சொல்லிக் கொண்டே இருப்பான். ஆனால் எந்த தீர்த்தத்தாலும் இந்த மனமாயையை நீக்க முடியாது.
அமிழ்தபானத்தை உண்ண முடியாது. அமிழ்த பானத்தை உண்ணுகின்ற மக்கள் என்ன செய்கிறார்கள்? இந்த புரவி என்று சொல்லுகின்ற காற்றை வசப்படுத்துகின்றார்கள்.
ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவிசெல்ல ஏக வெளியி லிருப்பதினி எக்காலம். – மகான் பத்ரகிரியார் – மெய்ஞ்ஞானப்புலம்பல்
– கவி எண் 97. ஆக வெளியில் என்றால் ஆகாயம் என்ற ஒரு பொருளுண்டு. இப்போது இந்த உடம்பு பிண்டம். கண்டஸ்தானத்திற்கு கீழே இருப்பது பிண்டம் என்றும், கண்டஸ்தானத்திற்கு மேலே இருப்பது அண்டம் என்றும் சொல்வார்கள். கண்டஸ்தானத்திற்கு மேலுள்ள புருவமத்திக்கு வெட்டவெளி என்றொரு பொருளுண்டு.


ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல – இந்த காற்றை அடக்கி வைக்க முடியாது. மீறி அடக்கி வைத்தால் என்ன செய்யும்? கபாலம் வெடித்து இறந்து போவான். காற்றை லேசாக இழுக்க வேண்டாம். நீங்கள் காற்றை இழுக்க வேண்டாம், நிறுத்த வேண்டாம். அப்படியே மூச்சு விடாமல் நிறுத்தி விட்டால் உள்ளே காற்று குபுகுபுவென பொங்கும். மூச்சை இழுக்க வேண்டாம். அப்படியே மூச்சை இழுக்கவும் வேண்டாம், விடவும் வேண்டாம். அப்படியே நிறுத்த வேண்டியது. அப்படி நிறுத்தும்போது என்னாகும்? உள்ளே பிராணன் அதிகமாக எழுந்திருக்கும். எழுந்து இயல்பாகவே காற்று உற்பத்தியாகும். உற்பத்தியாகும் இடமும் மூலாதாரம்தான். அதற்கு விளக்கம் சொல்லும்போது, ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல, புரவி என்றால் குதிரை, இந்த மூச்சுக்காற்றுக்கு கருஞ்சாரை, வெஞ்சாரை என்றும், மூலப்புளி, அமுரி என்றும், உப்பு, வெள்ளை கல்லுப்பு என்றும் இப்படியெல்லாம் சொல்வார்கள். மேலும் பறவை என்றும் சொல்வார்கள்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற் கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந் துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும் உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 566. புள்ளினு மிக்கப் புரவியை மேற்கொண்டால் – பறவையைவிட வேகமாகச் செல்லக் கூடியதுதான் இந்தக் குதிரை.
என்னய்யா? ஒரு சாண் தான்! மூலத்தில் தோன்றி – என்ன இந்த காற்று? மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பத்து அங்குலம், பன்னிரண்டு அங்குலம் தான் மேலே போகும். பன்னிரெண்டு அங்குலம்தான் உள்ளே வந்து போகும். பத்து அங்குலம் போதாது, பன்னிரெண்டு அங்குலம்.
மூலத்திற் றோன்றி முடிவிலிரு நான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். – மகான் ஔவைக்குறள் – வாயுதாரணை – கவி எண் 1.


அப்ப பன்னிரெண்டு கலைதான் தோன்ற முடியும். இந்த சூரிய கலைக்கு பன்னிரெண்டு கலை. இந்த சூரிய கலை பன்னிரெண்டு தன்மை உள்ளது, சந்திரகலை பதினாறு. ஆக சந்திரகலை ஓடினால் பதினாறு என்றும், சூரிய கலை ஓடினால் பன்னிரெண்டு என்றும் சொல்வார்கள். பன்னிரெண்டுக்கு மேல் போக முடியாது.
ஆக அந்த பன்னிரெண்டு கலை உள்ள அந்த காற்றை ஏன் மகான்கள் பறவை என்றும், கருஞ்சாரை என்றும், வெஞ்சாரை என்றும், மூலப்புளி என்றும், அமுரி என்றும் பல்வேறு வகையாக சொன்னார்கள்? ஏனென்றால் இது அடங்காது.
ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல – சென்றால் திரும்பி வராது. இந்த காற்று புருவமத்தியில் ஒடுங்கினால், நிச்சயமாக திரும்ப வராது. ஆனால் நுரையீரலில் தங்கிய காற்று நிச்சயம் வெளியே வரும்.
ஏக வெளியில் இருப்பதினி எக்காலம்? – புருவமத்திக்கு ஒரு இயல்பு உண்டு. புருவ மத்தியில் ஒடுங்குகின்ற காற்று மூலாதாரத்திற்கு சென்ற போதிலும், அந்த காற்று வந்த வழி இந்த வழியல்ல! தூல தேகத்தின் வழியல்ல. சூட்சும தேகத்தின் வழி வந்திருக்கின்றது. இதையெல்லாம் உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறேன், உங்களுக்கு புரிகிறதா? புரியவில்லையா? வேறு வழியே இல்லை. இருந்தாலும் சொல்ல வேண்டிய கடமை.
சித்தியும் முத்தியுந் திண்சிவ மாகிய சுத்தியும் முத்தீ தொலைக்குஞ் சுகானந்த சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும் பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.
– திருமந்திரம் – மும்முத்தி – கவி எண் 2477. இயல்பாகவே மதுபானம் சாப்பிடுகின்ற மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி. மதுபானம் சாப்பிடுகின்ற மக்களுக்கு உணர்வுகள் மயங்கிய காரணத்தாலே ஒரு மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் அது காலத்தால் வீழ்ந்து போகும். அந்த போதை இருக்கும் மட்டும் மகிழ்ச்சி இருக்கும். மறுபடியும் மதுபானம் சாப்பிட்டால்தான் போதை இருக்கும்.


ஆனால் இந்த அமிழ்தபானம் சாவா மருந்தல்லவா? இந்த மதுபானத்தை குண்டலினிதாய் அல்லவா தர வேண்டும்? அந்த குண்டலினிதாய் தந்தால் அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும், துள்ளி நடப்பிக்கும். ஆனால் இது அப்படியல்ல. இந்த மதுபானம் சாப்பிட்டால் எல்லையில்லாத மகிழ்ச்சி உண்டாகும்.
புறத்தே இருக்கின்ற மதுபானம் சாப்பிடும்போது, நாடி நரம்புகளை விரைவாக முறுக்கேற்றிவிடும். அந்த மதுபானம் உள்ளே வீரியம் இருக்கும் மட்டில்தான் மகிழ்ச்சி தரும். ஒரு குறிப்பிட்ட ஆண்டுவரை தேகம் திடமாக இருக்கும். மதுபானம் சாப்பிடுகின்ற மக்களுக்கு அப்போதைக்கு மகிழ்ச்சி இருக்கும். திடகாத்திரமான நாடி நரம்புகளில் முறுக்கேற்பட்டாலும், பிறகு தளர்ந்து போகும்.
ஆனால் இந்த அமிழ்தபானம் சாப்பிட்டால் நாளுக்குநாள் நரம்புகளிலே ஒரு முறுக்கு ஏற்படும். நரம்புகளுக்கு ஒரு திடமான நிலை வரும். ஒரு தெளிவு இருக்கும். நரம்புகளில் உரம் இருக்கும். இவனை துள்ளி நடப்பிக்கும். ஆனால் அமிழ்தபானம் சாப்பிடுகின்ற மக்களுக்கு நாளுக்குநாள் ஒரு திடம் ஏற்படும்.
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே. அந்த உணர்வு என்பது என்ன? அந்த உணர்வை எப்படி எழுப்புவது? நமக்குள்ள உணர்வால் அதை தட்டி எழுப்ப முடியுமா? அப்ப உள்ளது சொன்னோம் உணர்வுடையோருக்கே என்றார்.
எந்த உணர்வு அது? ஞானத்திற்குரிய அறிவாகும். ஞானத்திற்குரிய அறிவு தீட்சண்யமாக இருந்தால் தானே உணர்வு தீட்சண்யமாக இருக்க முடியும்? அப்ப சிறப்பறிவு எப்படி வர வேண்டும்? அதற்குத்தான் பாடுபட வேண்டும்.
நீ ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கட்டாயமாக உறுதியாக பூஜை செய்ய வேண்டும். யாரை பூஜை செய்ய வேண்டுமென்றால் அது மகானாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த உணர்வுடையோருக்குத்தான் அந்த உண்மை சொன்னார்.


துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடையோருக்கே. உள்ளது சொன்னோம் என்பது யாருக்கு? நான் சொல்லிவிட்டேனப்பா, இந்த உண்மையை. அது உணர்வுள்ள மக்களுக்கு சொல்லியிருக்கிறேன். அந்த உணர்வு ஆசான் திருமூலதேவருக்கு யார் தந்தது? மகான் நந்தீசர் தந்தார். நமக்கு யார் தர வேண்டும்? ஆசான் திருமூலதேவர் தர வேண்டும், ஆசான் நந்தீசர் தர வேண்டும், மகான் இராமலிங்க சுவாமிகள் தர வேண்டும், ஆசான் மாணிக்கவாசக சுவாமிகள் தர வேண்டும். இதை அறியாத மக்கள் என்ன செய்வான்? கோவில், குளம் என்று சுற்றினால் ஒன்றும் முடியாது.
சுற்றியுந்த லைமுழுகச் சுத்தஞானி யாவரோ?
அக்கினி தீர்த்தத்தில் குளித்தாலும் சரி, சுத்த ஞானியாகி விடுவானா?
மூல நெருப்பைவிட்டு மூட்டுநிலா மண்டபத்தில் பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 96. என்று சொன்ன கருத்துக்கள் சந்திரமண்டலமாகிய இந்த கண்டஸ்தானத்திற்கு மேலுள்ள சந்திரமண்டலத்தில் மூலாதாரத்திலிருந்து அக்கினி மேல் நோக்கும்போது அமிழ்தபானம் சுரக்கும். அப்படி சுரக்கின்ற அந்த அமிழ்தபானத்தைச் சாப்பிட்டால் பசியை ஒழித்து இருக்கலாம்.
இந்த இரகசியத்தை ஆசான் சட்டமுனிவர் ஸ்ரீரங்கத்தில் கோவில் உள்ளே இருக்கும் அந்த குளத்திற்கு சந்திர புஷ்கரணி என்று பெயர் வைத்தார். பின்னே வரும் சந்ததிகளுக்கு அது புரியட்டும் என்பதற்காகத்தான் அந்த பெயரை வைத்தார்.
இவன் என்ன செய்துவிட்டான்? அந்த தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துவிட்டு பெரிதாக ஏதோ செய்து விட்டதாக நினைக்கிறான், ஏமாந்து போகிறான். நாம் அதை விளக்கி சொல்லியாக வேண்டும். சொல்வது நம் கடமை.


அப்ப இதற்கு விளக்கம் சொல்லும்போது, பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள்
இந்த இரகசியத்தை அறிவதற்கு பக்தி வேண்டுமல்லவா? இதை யார் அறிவது?
மூல நெருப்பைவிட்டு மூட்டுநிலா மண்டபத்தில் பாலை யிறக்கியுண்டு பசியொழிவ தெக்காலம்.
– மகான் பத்ரகிரியார் – கவி எண் 96. என்ற இந்த இரகசியத்தை அறிவதற்கு, பத்தியோட ரன்பதம் பணிந்திடாத பாவிகாள் முத்தியின்றிப் பாழ்நரகில் மூழ்கி நொந்தலைவரே.
என்றார். அட! நாம் சும்மாவாவது இருக்கலாமல்லவா? ஒரு மனிதன், ஒரு இல்லறத்தான் எதையுமே சாராமல் நிம்மதியாக இருக்கலாமல்லவா? அப்படியிருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை.
அவன் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்றவாறு நன்மை தீமையை அனுபவிக்கிறான்.
ஆனால் இவன் என்ன செய்கிறான்? முத்தியின்றிப் பாழ்நரகில் மூழ்கி நொந்தலைவரே , அதாவது பாடுபட்டு நரகத்திற்குப் போகிறான் என்கிறார்.
சும்மா இருந்தால் நரகம் இல்லையடா! பாடுபட்டு நரகத்திற்குப் போகிறான், ஏன் ஒன்று கிடக்க ஒன்று செய்கிறான்? பிராணாயாமம் செய்வான், வயிற்றில் பழைய உணவு இருக்கும். யான் என்ற கர்வம் கொண்டு, விரைவாக முன்னேற வேண்டுமென்று என்ன செய்வான்?
காற்றை ஸ்தம்பிப்பான், என்ன ஆகும்? அதற்கு ஒரு கணக்கு இருக்கு. பூராவும் அந்த கனல் இருக்கல்லவா? காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை, மிகுதியாக ஸ்தம்பிக்கும்போது என்ன ஆகுமென்றால் தத்துவங்களெல்லாம் ஒன்றுக்கொன்று மாறுபட்டு மலச்சிக்கல் வரும், இரத்தக்கொதிப்பு வரும். வெகுவிரைவில் செத்துப்போவான்.


அப்படி செத்துப்போகும்போது இவன் செய்த வினையை அனுபவிக்காமல் செத்துப்போகிறானல்லவா? அதனால் மீண்டும் அந்த வினையை அனுபவிக்க வேண்டும். அதனால் தான், முத்தியின்றிப் பாழ்நரகில் மூழ்கி நொந்தலைவரே என்று சொல்கிறார். ஆக இல்லறத்தான் நிம்மதியாக சாகிறான். இவன் யான் என்ற கர்வம் கொண்டதால் நொந்து நரகத்திற்குப் போகிறான். ஆசான் தயவு வேண்டும்.
வீண் ஆரவாரம் செய்கின்ற மக்களோடு சேர்ந்து கொண்டு, குண்டலினி சக்தியை ஏற்றி ஐந்து நிமிடத்தில் உச்சிக்கு வந்து விட்டது, இகத்திலிருந்து பர வாழ்க்கைக்கு வந்து விட்டாயென்று சொல்லி இவனுக்கு பிரம்மையை உண்டு பண்ணுகிறான். அந்த மாதிரி துர்குணம் உள்ள ஒரு கும்பலோடு சார்ந்து இவன் என்ன செய்கிறான்? உண்மைப் பொருளை அறியாமல் தன்னை ஏமாற்றிக் கொள்கிறான்.
அதற்குத்தான் சொல்கிறோம், பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் என்று ஞானிகள் விளக்கம் சொல்லியிருக்கிறார்கள். இங்கு அரன் என்பது யார்? எவன் ஒருவன் ஞானியோ அவன்தான் அரன், அவன்தான் தலைவன். அரன் என்றால் தலைவன் அல்லது ஈசன். இதை ஆசான் திருமூலர் தனது கவியில் ஈசன் என்பது,
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த சிவனே என அடி சேரவல் லார்க்கு நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான தின்றிப் பரலோக மாமே. – திருமந்திரம் – சிவகுரு தரிசனம் – கவி எண் 1580. குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. – திருமந்திரம் – சிவகுரு தரிசனம் – கவி எண் 1581.



பயன்பாலா
அரங்கான் அருளுரைபூரணம் என்னும் யோக இரகசியம்
ஆக ஆசானும் ஈசனும் ஒன்று. அந்த ஆசானை தேர்ந்தெடுக்கின்ற அறிவுதான் திறமையான அறிவு . எவன் உண்மையான ஆசான் என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். வீண் ஆரவாரம் செய்பவர்களை சாரக்கூடாது. நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உண்மைப் பொருள் உணர்ந்த ஆசான் எனக்குக் கிடைக்க வேண்டும், அதற்கு நீரே எனக்கு ஆசானாக இருந்து அருள் செய்ய வேண்டும்.
இந்த துறையில் நான் ஆன்மலாபம் அடைய ஆசைப்படுகின்றேன். அந்த ஆன்மலாபத்தைச் சொல்லித்தருகின்ற உண்மைப் பொருளுணர்ந்த ஆசான், எனக்கு கிடைக்க வேண்டும் அல்லது நீரே எனக்கு அருள் செய்ய வேண்டும். இவ்வாறு உள்ளம் உருக கேட்டு பூஜித்தால், ஆசானாக மாறுவான் அல்லது ஆசானை சுட்டிக் காட்டுவான். இதற்கு பக்தி வேண்டுமென்றார். பக்தி என்பது என்ன? உருவ வழிபாடு செய்தால் வருமோ?
கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ச்சிடுந் தராக்களில் வல்லதேவ ரூபபேத மங்கமைத்துப் போற்றிடின் தொல்லையற்றி டப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர் இல்லை இல்லை இல்லை இல்லை ஈசனாணை இல்லையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 546. எவ்வளவு கருணை இருக்க வேண்டும்? இந்த சமுதாயத்தில் நீங்களெல்லாம் முன்னேற ஆசைப்படுவது இயல்புதான். ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால், உருவ வழிபாடு செய்கிறீர்கள்.
சிலை என்பது எப்படி செய்யப்படுகிறது? கல்லால் செய்யப்பட்ட சிலை, வெள்ளியால் செய்யப்பட்ட சிலை, செம்பால் செய்யப்பட்ட சிலை, இரும்பால் செய்யப்பட்ட சிலை, சில சிலைகள் தராக்கில் (பித்தளையில் ஒரு வகை) செய்வான். இதெல்லாம் சேர்த்து ஐம்பொன் சிலை செய்வான். ஆனால் எதிலுமே உனக்கு ஞானம் சித்திக்காது. எதுவுமே உனக்கு ஆன்மலாபத்தை தராது, பிறவித்துன்பத்தை ஒழிக்கும் மார்க்கத்தை தராது.


இதை ஆசான் சிவவாக்கியர் சொல்கிறார் என்றால், நம்மீது எவ்வளவு கருணை இருக்க வேண்டும். ஆசான் சிவவாக்கியர் நாத்திகவாதியா? அவர் என்ன சொல்கிறார் என்றால், இதிலெல்லாம் லாபமில்லையடா! ஏண்டா போட்டு குழப்பிக் கொள்கிறாய்? இதெல்லாம் சரியை, கிரியையோடு நின்று விடும். அதனால் எந்த லாபமும் இல்லை .
ஆனால் நான் சொல்கின்ற மார்க்கம் தொல்லை அற்றிட வேண்டுமென்றால், ஒன்று நீ ஆசான்பால் பக்தி கொண்டு பிராணாயாமம் செய்ய வேண்டும். வாசி நெறி அறிவதோடு மட்டுமல்லாமல் வாசிக்குத் தலைவனாகிய ஈசனை அறிய வேண்டும். அது ஆசான் அகத்தீசராக இருக்கலாம், ஆசான் நந்தீசராக இருக்கலாம். இதை இவ்வளவு வெள்ளையாக சொல்லியும், இவ்வளவு கருணையோடு சொல்லியும் மக்களுக்கு புலப்படாது. இது ஒரு அறியாமை.
மெய்ப்பொருளை அறியாத, இல்லறத்தில் இருக்கின்ற மக்கள் துன்பம், வறுமை மற்றும் பல்வேறு துன்பங்களை தாங்காமல் தடுமாறுகிறார்கள். ஆனால் ஞானியர்களுக்கும் துன்பம் உண்டு, அந்த துன்பத்திற்கு பிறகு பேரின்பம் உண்டு.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
– மகான் திருவள்ளுவர் – தவம் – கவி எண் 267. ஞானிகளுக்கும் துன்பம் உண்டு. யோகப்பயிற்சியை மேற்கொள்ளும் மக்களுக்கும், பிராணாயாமம் செய்கின்ற மக்களுக்கும் மூலக்கனல் எழுந்திருக்கும்போது அடாத துன்பங்களை அனுபவிப்பார்கள். ஆனால் எத்தனை துன்பங்களை அனுபவித்தபோதிலும் ஜீவனுக்கு ஆபத்தில்லை. அந்த துன்பம் அவர்களுடைய வினையை நீக்குவதற்காக வந்திருக்குமே தவிர வினையை உண்டுபண்ணாது.
வினை நீங்குவதற்காக துன்பத்தை அனுபவித்த மக்கள் பிறகு பேரின்பத்தை அடைவார்கள். இந்த இரகசியத்தை, ஆசான் சிவவாக்கியர்


தொல்லையற்றிடப் பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர் இல்லை இல்லை இல்லை இல்லை ஈசனாணை இல்லையே
என்று தலைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் என்றார். பிறவித் துன்பத்தை ஒழிக்கின்ற மார்க்கத்தை அது தந்திடுமோ? தராது. இப்படி உலோகங்களாலும் கல்லினாலும் செய்த சிலைகளை வணங்கினால் தொல்லையற்றிட பெருஞ்சுகம் இல்லையடா! என்கிறார். இப்படி இந்த இரகசியத்தை யார் சொல்வார்?
இப்படி சொன்னால் ஆசான் சிவவாக்கியரை நாத்திகவாதி என்று சொல்ல வேண்டியிருக்குமே? ஆசான் சிவவாக்கியர் நாத்திகவாதியா? அல்ல சுத்த ஆத்திகவாதி. அவர் சமுதாயம் இப்படி பாழ்பட்டு போகுதென்று கருணையோடு நமக்கு நல்லது சொல்கிறார். ஆசான் சிவவாக்கியர், கல்லுவெள்ளி செம்பிரும்பு காய்ச்சிடுந் தராக்களில் என்றார்.
இப்படி சிலை செய்வதற்கென்று ஒரு மரம் உண்டு. நான் தேக்கு, வேம்பு இப்படிப்பட்ட மரமாக இருக்குமென்று நினைத்தேன். அது எங்களுக்கு புலப்படாது இருந்தது. இப்போதுதான் கேள்விப்பட்டோம். மாவலிங்க மரமாக, அத்திமரமாக, இலுப்பை மரமாக இருக்கலாம். இவைகளில் எண்ணெய் பசை உண்டு. எண்ணெய் பசை உள்ள மரம் உளுத்துப்போகாது. அதனால் உளுத்து போகாத மரத்தில்தான் செய்வார்கள்.
இந்த வராகி அம்மன் இருக்குதல்லவா? வராகி அம்மன் என்றால் சிரசுதான் வைத்திருப்பான், முழுமையாக இருக்காது. முழுமையாக இருந்தால் இவனுக்கே சந்தேகம் வந்து விடும். என்ன நாம் பன்றியை கும்பிடுகின்றோமா? என்ற உணர்வு வந்துவிடுமோ என்று சொல்லி தலையை மட்டும் வைத்திருப்பான். அதை மரத்தால் செய்திருப்பான்.
நல்லரவான் சிரசு மரத்தால் செய்திருப்பான். சிரசும் மரத்தால் இருக்கும். கேரளாவில் ஒரு கோவில் இருக்கிறது. அங்கும் சிரசுமட்டும்தான் இருக்கும். அதெல்லாம் மரத்தால் செய்யப்பட்டது.


அதற்கு விளக்கம் சொல்லும்போது சொல்கிறார். தச்சர், ஒரு மாரியம்மன் சிலை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட பத்து அடிக்கு ஒரு மரம் இருந்திருக்கு. அதன் அடிமரத்திலே நல்லரவான் சிலை செய்தார். வராகி அம்மன் என்று சொல்லப்பட்ட சிரசு மட்டும் செய்து வைத்திருந்தார்.
இந்த துறையில் முன்னேற ஆசைப்பட்ட ஒருவன் அங்கே போனான். காலிற்கு பாதரட்சை செய்வதற்கு ஒரு மரம் உண்டு. அப்பா! இந்த மரத்தில் காலில் போட்டுக் கொள்வதற்கு ஒரு பாதரட்சை செய்து கொடு என்றான். அவனும் செய்து தந்தான். அதை இவன் போட்டுக் கொண்டான்.
ஆசான் சிவவாக்கியர் இதை பார்த்துக் கொண்டே இருந்தார். என்னடா! ஒரே மரத்தில் வராகி அம்மன் சிலை செய்தான், மாரியம்மன் சிலை செய்தான். அந்த மரத்தின் கிளைப் பகுதியில் பாதரட்சையும் செய்தான். இந்த மூன்றையும் பார்த்தார்.
செம்மை சேர்மரத்திலே சிலைதலைகள் செய்கிறீர் கொம்மையற்ற கிளையில்பாத குறடுசெய் தழிக்கிறீர் நும்முளே விளங்குவோனை நாடிநோக்க வல்லீரேல் இம்மளமும் மும்மளமும் எம்மளமு மல்லவே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 544. இம்மளமும் என்பதில் மத்தள ள’ போட்டிருக்கிறார். அப்ப இந்த ஜென்மத்தில் ஏற்பட்ட மலக்களிம்பும், முன் ஜென்மத்தில் எற்பட்ட மலக்களிம்பும், இனி எடுக்கப்போகும் ஜென்மத்தில் ஏற்படும் மலக்களிம்பும் அற்றுப்போகும். அற்றுப்போவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஞானிகள் மீது அன்பு செலுத்த வேண்டுமென்று சொன்னார்.
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லீரேல் – உள்ளே இருக்கின்ற தலைவனை அறியாமல் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஒரே மரத்தில் சாமி சிலையையும் செய்து கொள்கிறீர்கள், சாமிக்கு தலையை மட்டும் செய்து வைத்துக் கொள்கிறீர்கள், அதே மரத்தின் கிளையில் பாதரட்சை என்று சொல்லப்படுகின்ற செருப்பு செய்து காலில் போட்டு தேய்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.


தலைவன் உன்னுள் இருக்கிறான் என்பதை அறியாது, ஏனடா! போட்டுக் குழப்பி கொண்டிருக்கின்றீர்கள்? இதெல்லாம் நாம் சொல்கிறோம். சொன்னால் மட்டும் என்ன
ஆகும்?
இதுநாள் வரை இந்த துறையில் ஏதோ கோவில் வழிபாடு, உருவ வழிபாடு செய்து ஏதோ மிகப்பெரிய காரியம் செய்து விட்டோமென்று நினைத்து, நாமெல்லாம் முக்தி அடைவோம் என்று ஏமாந்த மக்களுக்கெல்லாம் இது ஒரு எடுத்துக்காட்டு. இப்ப இந்த இரகசியத்தை உங்களுக்கு சொன்னோம்.
தலைவன் உள்ளே இருக்கின்றான் என்ற இரகசியத்தை சொன்னோம். யார் உள்ளே இருக்கிறானென்று சொன்னாலும் அவன் பாதத்தை பற்றாமல் நமக்கு உண்மை தெரியாது.
ஆசான் சிவவாக்கியர் உள்ளே இருக்கின்ற அந்தப்பொருளை தட்டி எழுப்பியவர். அதனால் தலைவன் உள்ளே இருக்கிறார் என்று சொன்னார்.
இது எப்படியென்றால்? தூல வாழ்க்கை வாழ்கின்ற மக்கள் உண்மைப்பொருளை உணர உணர உணர, சூட்சும தேகத்தைத் தட்டி எழுப்புகின்றார்கள்.
அந்த சூட்சும தேகத்தை தட்டி எழுப்புகின்ற மக்கள்தான் அந்த உண்மைப் பொருளை அறிய முடியும். அந்த சூட்சும தேகத்தை தட்டி எழுப்பியவரால்தான் தம்முள் இருக்கின்ற தலைவனை அறிய முடியும்; மற்றவர்களால் அறிய முடியாது.
அப்படி அறிந்தவன் தான் சொல்வான், உள்ளே தலைவன் இருக்கின்றான், அவன் பாதத்தைப் பற்றினால்தான் அந்த இரகசியத்தை உணர முடியும். வேறு வழியே இல்லை.


ஆசான் சிவவாக்கியர் பாதத்தைப் பற்றாமல் தலைவனை நாம் அறிய முடியாது.
சில பேர் என்ன சொல்வார்கள்? தனக்கு இருக்கும் அறிவாற்றலுக்கு ஆசான் தேவையில்லை என்பான். இந்த மாதிரி சொன்னவன் வெகுபேர் செத்தே போய்விட்டான், நரகத்திற்கும் போய்விட்டான் என்று ஆசான் சிவவாக்கியர் சொல்கிறார்.
எனக்கிருக்கும் தமிழாற்றலுக்கும், என்னிடமிருக்கும் கல்வி ஆற்றலுக்கும் நான் நூல்களைப் படித்து முன்னேற முடியும். யாருடைய தயவும் எனக்கு தேவையில்லை என்று சொன்னவனெல்லாம் நரகத்திற்கே போவான். இதை விளக்கும்போது,
சாத்திரங்கள் பார்த்துப்பார்த்துத் தாங்குருடா வதால் நேத்திரங்கெ டவெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள் பாத்திர மறிந்துமோன பத்திசெய்ய வல்லீரேல் சூத்திரப்படி யாவருஞ் சுத்தராவ ரங்ஙனே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 548. சாத்திரங்கள் எதற்கு படிக்கின்றோம்? அளவு கடந்து நூல்கள் படிக்க ஆரம்பித்தால் இயல்பாகவே வெள்ளெழுத்து வந்து விடும். சும்மா தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தால்? வெள்ளெழுத்துதான் வரும். கண் குருடாகப் போகும்.
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடர் ஆவதால் – எதற்கு சாத்திரங்கள் பார்ப்பது? கண் குருடாவதற்கா? கண் குருடாவதற்கா சாத்திரம் படிக்க வேண்டும். தெளிவான அறிவு பெறுவதற்குதான் சாத்திரம் படிக்க வேண்டும்.
ஆனால் இந்த தத்துவங்கள், இலக்கியத்தைப் படித்து தெளிவு பெறலாம். பதினெண் கீழ்க்கணக்கும் மற்ற நூல்களும் இருக்கிறது. அதைப் படித்தால் தெளிவான அறிவு வரும். அது இல்லற வாழ்க்கை நடத்துவதற்குத்தான் அந்த அறிவு பயன்படுமே தவிர, ஞானத்திற்குப் பயன்படாது.
20


திருமந்திரம், திருஅருட்பா, திருவாசகம் போன்ற ஞான நூல்களையெல்லாம் நீ படிக்கலாம். அதிலுள்ள கருத்துக்கள் உனக்கு புலப்படாது. உள்ளுணர்வு, பெற்ற மகான்களின் தயவில்லாமல் அதை நீ படித்து அறிய முடியாது.
அந்த காலத்திலே சாத்திரங்களைப் படித்துவிட்டு, சூரியகலை இயங்கினால், சூரியன்தான் உனக்கு சகலமும் தருமென்பான். உண்மைதான் சூரியன்தான் சகலத்திற்கும் தெய்வம். இப்போ இதே கதிரவன் ஆகாயத்திலும் இருக்கும், நமது உடம்பில் 98.4 வெப்பமாகவும் இருக்கும்.
உயிரினங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கின்ற அதே கதிரவன், ஞானத்திற்குரிய தலைவனாகவும் இருப்பான். அதே சமயத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கும், தந்தையாக இருப்பான்.
அப்ப தந்தையும் அவனே, உயிரினங்கள் வாழ்வதற்கும் காரணம் அவனே. அதை உணர்ந்த மக்களுக்கு ஞானப்பால் ஊட்டுகின்ற ஞான தெய்வமும் அவன்தான். அது ஆசான் தயவால்தான் புலப்படும்.
நேத்திரங்கெட வெய்யோனை நேர் துதி செய் மூடர்காள் – என்ன செய்வான்? சூரியனைப் பார்த்து கும்பிடுவான். அது உணர்வற்ற பொருள்.
அங்கே வெளியில் இருக்கும் போது உணர்ச்சியற்ற பொருளாக இருக்கும். அது உடம்புக்குள்ளே இருக்கும்போது மிகப்பெரிய ஆற்றலை உண்டுபண்ணும். புறத்தில் இருக்கும்போது அது ஜடப்பொருள். உன் பக்தியை சூரியன் ஏற்றுக் கொள்ளாது.
ஏனென்றால் அது ஒரு மிகப்பெரிய எரிபிழம்பு. அது உன் பக்தியை ஏற்றுக் கொள்ளுமா? உன் பக்தியை ஏற்றுக் கொள்வதென்றால், அது என்ன செய்யும்? சித்திரை மாதத்தில் சில உயிரினங்கள் இறந்து கிடக்கும்.


இறந்து கிடக்கும்போது அதில் புழு வைக்கும். இறந்த அந்த பிரேதத்தின்மேல் அதிகமாக உஷ்ணம் தாக்கும். அதிலிருந்து புழு வெளியே வரும். வெளியே வந்தவுடன் சூரியனுடைய உஷ்ணம் தாங்காமல் செத்துவிடும். வெய்யில் வெகு உயிரை கொன்றுவிடும். வடநாட்டில் பார்த்தால், வெப்பம் தாங்காமல் இறப்பார்கள். அவ்வளவு கொடுமையான உஷ்ணம் இருக்கிறது.
அப்ப சூரியன்பால் அன்பு கொண்டு சூரிய பூஜை செய்கிறேன் என்று சொல்லி, என்ன செய்வானென்றால், கடைசியில் அவன் குருடனாகத்தான் ஆவானென்றார். நேத்திரம் என்றால் கண்.
இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார், நேத்திரங்கெ டவெய்யோனை நேர்துதிசெய் மூடர்காள் பாத்திர மறிந்துமோன பத்திசெய்ய வல்லீரேல்
மோன இரகசியத்தை அறியவேண்டுமென்று சொன்னார். மோனம் என்பது என்ன? வாய் மூடி இருப்பது மோனமோ? வாய் மூடி இருப்பது மோனமல்ல! மோனம் என்பது புருவமத்தியில் ஒடுங்குகின்ற காற்று. அந்த இரகசியத்தை அறியாமல்,
பாத்திர மறிந்துமோன பத்திசெய்ய வல்லீரேல்
சூத்திரப்படி யாவருஞ் சுத்தராவ ரங்ஙனே என்றார். மோன இரகசியத்தை அறியாமல் யாரும் சுத்தர் ஆக முடியாது. என்னதான் நாம் பேசிக்கொண்டிருந்தாலும், என்னதான் காவி கட்டிக் கொண்டிருந்தாலும், என்னதான் வாய்கிழிய ஞானத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், உருப்பட முடியாது.
இந்த இரகசியத்தை எல்லாம் நாம் சொல்கிறோம். இதை நாம் கற்றால் மட்டும் போதுமா? இப்ப இந்த இரகசியத்தை நீங்களெல்லாம் படிக்கின்றீர்கள்; படித்தால் மட்டும் போதுமா? ஆனால் இந்த இரகசியத்தை அறிய முடியாது. பூரணத்தை அறிய முடியாது.


கற்றறிவோ மென்பர் காணார்க ளுன்பதத்தைப் பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பறுமோ பூரணமே.
– மகான் பட்டினத்தார் – பூரணமாலை – கவி எண் 75. பூரணம் என்பது என்ன? சுவாசம் நுரையீரலில் தங்கினால், தங்கிய அந்த காற்று மீண்டும் வெளியே போகும். அதை அடக்கி வைத்திருந்தால் என்ன செய்யும்? கபாலம் வெடித்து அல்லது கண் வெடித்து அல்லது காது பக்கமோ வாய் பக்கமோ வெடித்து செத்துப் போவான்.
அந்த காற்று திரும்பி வராமல் இருக்காது. தோன்றும்போது மூலத்தில் தோன்றும். பன்னிரெண்டு கலை தோன்றும். உள்ளடங்கும்போது எட்டு கலைதான் அடங்கும். அப்போது இருபத்தோராயிரத்தி அறுநூறு முறை வந்து போகின்ற காற்றிலே, ஏழாயிரத்தி இருநூறு சுவாசம் வீணாகப் போகிறதென்று சொல்வார்கள். இது தத்துவம்.
கற்றறிவோ மென்பர் காணார்க ளுன்பதத்தைப்
பெற்றறியார் தங்களுக்குப் பிறப்பறுமோ பூரணமே கற்றால் மட்டும் முடியாது என்றார். பூரணம் என்ற இரகசியத்தை கற்றுத் தெரிந்து கொள்ள முடியாது. அது உணர்த்தப்பட வேண்டிய ஒன்று. அது புருவ மத்தியில் ஒடுங்கிவிட்டால், அதுதான் பூரணம். அந்தக் காற்று திரும்பி வரவே வராது.
பூரணம் என்பதற்கு என்ன பொருள்? இப்ப பூரணம் அடைந்துவிட்டார் என்பான். நாமெல்லாம் இறந்து விட்டார் என்போம். அது ஒன்றும் குற்றமில்லை.
நாம் செய்த பாவம் இறந்துவிடுகிறோம். அவர் பூரணம் அடைந்து விட்டார் என்பார். புருவமத்தியில் ஒடுங்கும் காற்று வெளியே வராது, அப்படியே ஒடுங்கிவிடும். இது இரகசியம். இதுதான் பூரணம். அப்ப அந்த இரகசியத்தை ஆசான்தான் சொல்ல வேண்டும்.



நேற்று ஒருவரைப் பார்த்தோம். அந்த அன்பர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிக் கொண்டிருக்கிறார். தொல்காப்பியத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். மிகப் பெரிய தமிழ் வித்வான். ஆனால் இந்த பூரணத்தை அவரால் அறியமுடியாது.
இந்த இரகசியத்தை அறிவதற்கு ஆசான் என்ன சொன்னார் ? வாசிதனை பார்த்தால் முடியுமோ? வாசியை அறியணும், வாசியை அறிந்த மக்கள் தான் பூரணத்தை அறியமுடியும். இதை மகான் பட்டினத்தார் சொல்வார்,
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துனைத்தான் போற்றாமல் காசிவரை போய்திரிந்து காலலுத்தேன் பூரணமே.
– மகான் பட்டினத்தார் – பூரண மாலை – கவி எண் 21. ஆசான் பத்திரகிரியார் காசினியெலாம் நடந்து காலோய்ந்து போகாமல் என்று சொன்ன கருத்தை மகான் பட்டினத்தார் இவ்வாறு கூறுகிறார். பத்திரகிரியாருக்கு ஆசான் யார்? பட்டினத்தார்.
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்துனைத்தான் போற்றாமல் காசிவரை போய்திரிந்து காலலுத்தேன் பூரணமே
பூரணத்தை அறியாத மக்களுக்கு இது புலப்படாது, அலுத்துப் போவான். ஏதோ ஒரு பொருளை அறியவேண்டுமென்று ஆசைப்பட்டு அலுத்துப் போவான். வாசி அறிய வேண்டும். அப்ப கால் அலுத்துப் போகாமல் இருப்பது சின்ன விசயமா? ரொம்ப கடினமான ஒன்று. அதை மறுபடியும் சொல்லும்போது,
என்னதான் கற்றாலென் எப்பொருளும் பெற்றாலென் உன்னை யறியாதார் உய்வரோ பூரணமே.
– மகான் பட்டினத்தார் – பூரணமாலை – கவி எண் 74. என்ன கற்றால் என்? எப்பொருளும் பெற்றால் என்? அப்படியென்றால் சங்கநிதி, பதுமநிதி என்று சொல்வார்கள்.


சங்கநிதி, பதுமநிதி என்பது எல்லையிலாத செல்வத்தைக் குறிப்பது, அளவிலாது இந்திரனுக்கு நிகரான செல்வத்தைப் பெற்றிருந்தாலும் உண்மையை அறிய முடியுமோ?
இல்லை தமிழ் இலக்கணத்தை பூரணமாகக் கற்றால்தான் முடியுமோ? இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார்.
என்னவென்று சொல்லுவே னிலக்கண மிலாததைப் பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதான வாறுபோல் என்னகத்து ளீசனும் யானுமல்ல தில்லையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 94. இதை நீங்கள் கவனிக்க வேண்டும். என்னதான் கற்றாலென் எப்பொருளும் பெற்றாலென் உன்னை யறியாதார் உய்வரோ பூரணமே.
உன்னை அறியாதவன் கற்றால் மட்டும் போதுமா? இந்திரனுக்கு நிகரான செல்வம் பெற்றால் மட்டும் போதுமா?
கல்வியில் கரை கண்டால் மட்டும் போதுமா? ஒன்றும் ஆகாது. பூரணத்தை அறியாவிட்டால் புலப்படாது.
என்னவென்று சொல்லுவேன் இலக்கணமிலாததை? தலைவன் எப்படி இருக்கிறான்? அவன் உணர்வுபூர்வமாக இருக்கின்றான். சிந்தை தெளிவுபட, சிந்தை தெளிய தெளிய தெளிய சிவனாகின்றான். தீர்ந்தே போச்சு!
ஒரு மனிதனுக்கு எப்போது சிந்தை தெளியும்? உடம்பிலுள்ள களிம்பு அற்றுப்போக போக சிந்தை தெளியும். சிந்தை தெளிய தெளிய சிவன் ஆவான். இப்போது பேசியதன் சாரம் அதுதான், புரிந்து கொள்ள வேண்டும்.
உடம்பிலிருக்கும் களிம்பு போகப் போக உணர்வு மேலோங்கும். உணர்வு மேலாங்க மேலோங்க மேலோங்க உண்மைப் பொருளை அறிவான். உண்மைப் பொருளை அறிந்தால் ஞானியாகி


விடுவான். உண்மைப் பொருளை அறிந்தவன் மௌனமாக இருப்பான். உண்மைப் பொருளை எந்தவிதத்திலும் சுட்டிக்காட்ட முடியாது. அது புலப்படாத ஒன்று. அதை சொல்லமுடியாது.
ஏண்டா போட்டு ஒலட்டிக்கிட்டு இருக்கிற? அவனாக உணர்ந்து கொள்ள வேண்டும், நாம் சொல்ல முடியாது.
என்னவென்று சொல்லுவேன் இலக்கணமிலாததை – இலக்கணம் என்பது என்ன? எழுத்து இல்லாமல் இலக்கணம் இருக்க முடியாது. எழுத்து இருந்தால்தானே இலக்கணம் இருக்கும்.
எழுத்து இருந்தால்தானே இலக்கணம் இருக்க முடியும்? அப்படித்தானே?
இலக்கணம் இருந்தால்தான் இலக்கியம் இருக்க முடியும். இலக்கணம் இல்லாமல் இலக்கியம் இருக்க முடியாது. இல்லாவிட்டால் பேச்சு இருக்காது. அப்போது, சுட்டிக்காட்ட முடியாத ஒன்றைப்பற்றி நான் என்ன சொல்ல முடியும்? சுட்டிக்காட்ட முடியாத ஒன்று!
இப்ப புறத்தோற்றம், புலன்களுக்கு புலப்படாத ஒன்றை நான் எப்படி சொல்ல முடியும்?
உணர்வுக்கு இலக்கணம் இல்லை. உணர்வுக்கு என்ன இலக்கணம்? அது பருப்பொருள் அல்ல! சுட்டிக்காட்ட முடியாத ஒரு பொருளை எப்படி சொல்ல முடியும்?
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதங்கடந்த பண்பென – இயல் இசை நாடகத்திற்கு அகப்படாதது.
மின்னகத்தில் மின்னொடுங்கி மின்னதானவாறு போல் – இதற்கு விளக்கம் சொல்லும்போது, இதற்கு மேலான பொருள் ஒன்று இருக்கிறது. நான் புலப்படுவதற்காக சொல்கிறேன்.
கடலில் மேகத்திரள் தோன்றும். புயல் தோன்றும், புயல் காரணமாக மேகம் தோன்றும். மேகம் என்ன செய்யும்?



ஆகாயத்திற்கு போகும். ஆகாயத்திற்குப் போனபின் மின்னல் தோன்றும். ஆகாயத்தில் மேகம் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் மின்னல் தோன்றும்.
மேகம் தோன்றுவது கடலிலே! ஒளி தோன்றுவது ஆகாயத்திலே. ஏன் அது கடலில் இல்லை . கடலில் ஒளி தோன்றுமா? ஆகாயத்தில்தான் ஒளி தோன்றும்.
கடல் நீரிலே தோன்றுகின்ற புயல் காரணமாக எழுகின்ற மேகத்திரள் ஆகாயத்தில் சென்று மின்னல் ஒளி தோன்றுவது போல, மூலாதாரத்தில் எழுகின்ற அக்கினி புருவமத்தியில் ஒளி தோன்றும் என்றார். எவ்வளவு பெரிய இரகசியம்?
அந்த இரகசியத்தை அஞ்சு, மூணும் எட்டு, எட்டு + இரண்டு என்று சொல்வார்கள். இந்த அகார உகாரம் என்று சொல்லப்பட்ட இரகசியத்தை ஆசான் தயவு கொண்டுதான் அறிய முடியும். இல்லையென்றால் அறியமுடியாது, அகார உகாரத்தைப் பற்றி விளக்கம் சொல்லும்போது,
அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம் நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செப்பிரேல் பஞ்சமான பாதகங்கணூறுகோடி செய்யினும் பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 18. அஞ்சு மூணும் எட்டு என்றார். அஞ்சு என்பது என்ன? பஞ்ச பூதங்கள். மூணு என்பது என்ன? இடகலை, பிங்கலை, சுழுமுனை. பஞ்ச பூதங்கள் இருந்தால்தான் இடகலை, பிங்கலை இருக்கும். இடகலை, பிங்கலை இருந்தால்தான் பஞ்ச பூதத்தோடு தொடர்பு இருக்கும்.
பஞ்ச பூதத்திற்கும் நமக்கும் எப்போது தொடர்பு இருக்கும்? வாசி வந்து கொண்டு, போய்க்கொண்டு இருந்தால் தொடர்பு இருக்கும். வெளியே போன காற்று உள்ளே வராவிட்டால் பஞ்ச பூதத்திற்கும் நமக்கும் தொடர்பு அற்றுப்போகும். உள்ளேயே தங்கி



விட்டாலும் பஞ்ச பூதத்திற்கும் நமக்கும் தொடர்பு அற்றுப்போகும். அப்போது உள்ளே அடங்குவதற்கு, எவன் ஒருவன் உற்ற துணையாக இருக்க வேண்டுமென்றால், அவன் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற இரகசியத்தை அறிந்தவனாக இருந்து அவனே உள்ளே அடங்க வேண்டுமென்று சொல்கிறார்.
பஞ்சமான பாதகங்கணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. பலகோடி ஜென்மத்தில் நீ செய்த பாவமாக இருந்தாலும் சரி. இந்த பஞ்சபூத இயற்கையையும், இடகலை, பிங்கலை சுழுமுனையை நீ அறிந்தால் எத்தனை கோடி ஜென்மத்தில் செய்த பாவத்தையும், தூள்தூள் பண்ணிவிட்டு, ஞானம் பெறலாம். யார் அறிவது?
இப்படி ஏற்றி இறக்குவதா இது? எவ்வளவு உணர்வுகள்? எந்த அளவுக்கு மனதை பண்படுத்த வேண்டும்? எந்த அளவிற்கு பயிற்சி கொடுக்க வேண்டும்? எந்த அளவிற்கு ஆர்வம் இருக்க வேண்டும்?
ஒரு காதலி காதலன் மேல் கொள்கின்ற பக்திபோல், இறைவனிடத்தில் கொள்ள வேண்டும். ஏன் இங்கே காதலன் மேல் என்று சொன்னால், காதலன் காதலிமேல் பற்று கொள்ள மாட்டான். ஏனென்றால் இவனுக்கு ஒரு வகையான உணர்வுகள் இருக்கும். காதலி காதலன்மேல் கொள்கின்ற பக்தி விசுவாசம்போல் இங்கே வந்து சார்ந்து நிழல்போல் இருந்து அறிந்து கொள்ள வேண்டும். அந்த இரகசியத்தை , ஏதோ ஒரு நாள் ஓங்காரக்குடிலுக்கு வந்திருந்து கேட்டு உணர்ந்து கொள்ள முடியாது, தொடர்ந்து கேட்க வேண்டுமென்று சொன்னார்.
இப்படி மகான் அகத்தீசர், மகான் சிவவாக்கியர், மகான் திருமூலதேவர், மகான் மாணிக்கவாசகர் இவர்கள் இயற்றிய சிவவாக்கியம், திருமந்திரம், திருவாசகம் போன்ற நூல்களெல்லாம் அருள்வாக்காகும். அவர்கள் இயற்றிய அந்த அருள்வாக்கை


சொல்லும்போது அவர்களுடைய பார்வைபடும். அப்படி இருபாலரும், சீடனும் உயர்வான், ஆசானும் உயர்வான்.
அந்த அஞ்சு மூணு என்று சொல்லப்பட்ட பஞ்சபூத இயல்பையும் ஆசான் திருவள்ளுவர் சொல்லும்போது,
அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம் அஞ்சு வசப்படுவ தாண்டதனில் – அஞ்சினையும் கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு விண்டறிய லாமே விதி.
– மகான் திருவள்ளுவர் ஞானம் – கவி எண் 18. நித்தியம் என்று சொல்லும்போது நாமெல்லாம் அநித்திய வாழ்வு வாழ்கின்ற மக்கள்.
அஞ்சும் வசப்படுவதாண்டே என்றார். ஆண்டு என்பது பன்னிரெண்டு. இப்ப பஞ்ச பூதாதிகளின் இயல்பை அறிந்த மக்களுக்குத்தான் இந்த அநித்தியத்தை போக்க முடியும். பஞ்ச பூதத்தை அறியாத மக்கள் நிச்சயமாக அநித்திய வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாது. பஞ்சபூதமென்பது பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகும். பஞ்ச பூதத்தை அறிந்தால் அநித்தியம் போகுமென்றால், எந்த அளவிற்கு அவன் புரிந்திருக்க வேண்டும்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு
– திருக்குறள் – நீத்தார் பெருமை – குறள் எண் 27. சுவைக்கு நாக்கு, அது அப்பின் கூறு, நாக்கில் தண்ணீர் இல்லாவிட்டால் சுவை அறிய முடியாது. அப்போது கரையக்கூடிய எதுவாக இருந்தாலும் இனம் பிரித்துக் காட்டும் ஆற்றல் நாக்குக்கு உண்டு. அது நீராக இருக்கும். கடலில் இருக்கும் நீர் ஆகாயத்திற்கு போகும். ஆகாயத்தில் மேகத்திரள் தோன்றி மழை பெய்யும். அந்த நீர் சாப்பிடுகின்ற காரணத்தால்தான் நாக்கில் தண்ணீர் ஊறும். இதற்குக் காரணம் அப்பின் கூறு. கடல்நீர்தான் காரணம்.


அந்த கடலில் புயல் எழுவதற்குக் காரணம் காற்று, அக்கினி. அக்கினி காரணமாகத்தான் கடலில் புயல் தோன்றும். புயல் தோன்றுகின்ற காரணத்தால்தான் மேகத்திரள் மேலே வரும். மேகத்திரள் மேலே வருகின்ற காரணத்தால்தான் மழை பொழியும். மழை பொழிகின்ற காரணத்தால்தான் மனித உயிர்களும் மற்ற உயிரினங்களும் வாழ முடிகிறது. அங்கே கடலாக இருக்கும். இங்கே நாக்கில் தண்ணீராக இருக்கும். தண்ணீர் இல்லாவிட்டால் மனிதன் செத்தே போவான்.
இந்த நாக்குக்கும் கடல் நீருக்கும் தொடர்பு உண்டு. அப்புஸ்தானம் என்று சொல்வான்.
அடுத்தது ஒளி. இந்த கண்ணில் இருப்பது பிரகாசம், வெளிச்சம். அது கதிரவன் கூறு. ஆனால் கதிரவன் எப்போதும் பிரகாசிப்பான். ஆனால் தேயுவின் கூறாகிய இந்த கண்ணுக்கு ஒளி மங்கினால், குருடாக மாறலாம். ஆனால் கதிரவன் என்றும் பிரகாசிப்பான். அவனுடைய ஒளி மங்காது.
ஓசை வாயுவின் கூறு. ஓசை – காது. இந்த காது கேட்பதற்கு காரணம் காற்று. கந்தம் என்று சொல்லப்படுகின்ற வாசனை அறிய காற்று உதவி செய்யும். மண்ணுக்கும், காற்றுக்கும் தொடர்பு இருப்பதால் தான் பரிச உணர்வையும், கந்தம் என்று சொல்லப்படுகின்ற வாசனை அறிய காற்று உதவி செய்யும். மண்ணுக்கும் காற்றுக்கும் தொடர்பு இருப்பதால்தான் பரிச உணர்வையும், கந்தம் என்று சொல்லப்படுகின்ற வாசனையையும் அறிய முடியும். பஞ்சபூதத்திற்கும் நமக்கும் உள்ள தொடர்பை எவன் அறிந்தானோ, அவனிடம் இந்த உலகம் இருக்கிறதென்று ஆசான் திருவள்ளுவர் சொல்கிறார்.
பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்தால்தான் வித்து தோன்ற முடியும். உடம்பில் ஜீவன் இருந்தால் உணர்வு இருக்கும். உடம்பில் உயிர் இருக்கும்போது, பரிச உணர்வு இருக்கும். இந்த உயிர் இயங்குவதற்கு அடிப்படை காரணம் பஞ்ச பூதம். பஞ்ச பூதங்களால்


ஆகிய இந்த உடம்பில் ஒன்றுக்கொன்று மாறுபடாத இயக்கம் இருக்கும். அது வாத, பித்த, சிலேத்துமம்.
வாத, பித்த, சிலேத்துமம் மாறுபடும்போது நோய் வந்துவிடும். நோய் வந்தால் ஜீவன் போய்விடும்.
பரிச உணர்வு அதாவது தொடும் போது உணர முடிகிறதென்றால் தேகத்தின் உள்ளே ஜீவன் இருக்கென்று அர்த்தம். இதே மனிதன் இறந்தபிறகு அவனை தொட்டால் உணர முடியுமா?
இது எப்படியென்றால், மண்ணில் ஒரு பொருள் கம்போ, கேழ்வரகோ மற்ற தானியங்களோ விளைகிறதென்றால், அதற்கு தண்ணீர் வேண்டும். தண்ணீர் மட்டும் இருந்தால் போதாது, காற்றும் வேண்டும். காற்று மட்டும் இருந்தால் போதுமா? அக்கினி வேண்டும். எனவே நான்கு பூதங்களும் வேண்டும். இந்த நான்கு பூதங்களும் உணர்த்தப்பட வேண்டிய பூதங்கள். காற்று, மண், தண்ணீர், அக்கினி ஆகிய நான்கும் உணர்த்தப்படுகிறது. ஆனால் ஆகாயத்தை உணர்த்த முடியாது.
ஆகாயம் என்பது ஆகர்ஷண சக்தி என்று சொல்வார்கள். நான்கு பூதங்களை உணரலாம். ஆகாயம் என்பது இங்கே எப்படி இருக்கிறது? அறிவாக இருக்கிறது. அது ஆகர்ஷண சக்தியாக இருக்கிறது.
அங்கே தனித்தனியாக இருக்கும் பஞ்சபூதங்கள், இங்கே ஒன்றுபட்டிருக்கும். பரிச உணர்வு என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும். மண்ணில் விளையும் பொருளை சாப்பிட்டால்தானே இந்த உடம்பு இருக்கும். எந்த மனிதனாவது ஆகாயத்தில் இருந்து உணவு கொண்டு வர முடியுமா?
ஆக பஞ்சபூத சேர்க்கையால் உருவான இந்த உடம்பிற்குள் காற்று அசைந்தால், பரிச உணர்வு இருக்கும், இந்த தேகம் சுவையை உணரும், கந்த உணர்வை அறியும், ஓசையை கேட்கும். இந்த தேகம் இயங்கிக் கொண்டிருக்கும். காற்று இல்லையென்றால்


அங்கே ஒன்றும் இருக்காது. காற்றுதான் காரணம்.
பஞ்சபூத சேர்க்கையே ஒளியாக இருக்கும். பஞ்சபூத சேர்க்கையே ஓசையாக இருக்கும். ஆக இதைத்தவிர வேறு மார்க்கமில்லை. பஞ்சபூதத்தை பிரித்தே பேசக்கூடாது. வெளியே பேசலாமே தவிர, உள்ளே பிரித்து பேச முடியாது. தனித்துப் பேசக் கூடாது. வேறு வழியில்லை பேசிக்கொண்டிருக்கிறோம்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. இது சின்ன விசயமல்ல. இதை எவன் அறிந்தானோ, உலகம் அவனிடம் இருக்கடா! இந்த நாக்கு, எல்லா கரைகின்ற பொருளின் சுவையை இனம் பிரித்துக் காட்டும். இந்த ஆற்றல் நாக்குக்கு உண்டு. தேனும் வேப்பெண்ணெயும் பார்த்தால் நிறம் ஒன்றாக இருக்கும். ஆனால் எப்போது உணர்த்தப்படும்? ஒரு சொட்டு நாக்கில் வைத்தால் உணர்த்தப்படும்.
பிள்ளைகளிடம் நாக்கில் தேன் வைத்தால் நன்றாக சாப்பிடும். வேப்பெண்ணெய் வைத்துவிட்டால் துப்பிவிடும். அங்கே பிள்ளைகளுக்கு இனம் பிரித்துக் காட்டுவது நாக்குதான். அதுபோல திரவப் பொருள் எதுவாக இருந்தாலும் சரி. எத்தனை சுவையாக இருந்தாலும் சரி, அப்பப்ப இனம் பிரித்துக்காட்டும் ஆற்றல் இந்த நாக்குக்கு உண்டு.
ஆனால் வெறும் தண்ணீர்தான், இந்த நாக்கை நீட்டினால் ஒன்றும் இருக்காது. எந்த இயந்திரமும் இருக்காது. சுவையை அப்படியே பிரித்துக் காட்டும். அந்த ஆற்றல் இந்த நாக்கிற்கு உண்டு. பஞ்சபூத பொருள் சேர்ந்திருக்கிறது என்று அர்த்தம், பிரித்தே பேசக்கூடாது. ஆனால் பிரித்து பேசுவதென்பது விளக்கத்திற்காக பேசிக்கொண்டிருக்கிறோம். வேறு வழியே இல்லை .
உலகத்தில் உள்ள பறவைகளில் கோட்டான் கத்துவது ரொம்ப கொடுமையாக இருக்கும். ஆனால் குயில் கூவும் போது


இனிமையாக இருக்கும்.
இசைக்கருவிகள் என்னென்ன ரூபத்தில் இருந்தாலும் சரி! யாழாக இருக்கலாம், குழலாக இருக்கலாம், குழலினிது யாழினிது என்பார் ஆசான் திருவள்ளுவர். இனிமையில் சிறந்தது குழல்தான். முதலில் புல்லாங்குழல் அதற்கு அடுத்தபடிதான் யாழ். இப்படி எப்பேர்ப்பட்ட சிறப்பான இசைக்கருவியாக இருந்தாலும் சரி, அதை இனம் பிரித்துக் காட்டும் ஆற்றல் காதுக்கு உண்டு.
கந்தம் – மூக்கு. இந்த மூக்குக்கு உள்ளே மட்டும் என்னதான் இரகசியம் இருக்கிறதோ? நான் அதை சிந்திக்கும்போது அளவிலாது ஆச்சர்யபடுகிறோம். என்னடா இதே காற்றை சாம்பிராணி பத்தியா? பத்மினி பத்தியா? என்ன மல்லிகை பூ வாசம் அடிக்கிறது? என்ன ரோஜா பூ வாசம் அடிக்கிறது? இந்த மூக்குக்கு என்னதான் ஆற்றலோ? தெரியவில்லை. அவ்வளவு ஆற்றல் இந்த மூக்குக்கு இருக்கிறது.
மூக்குக்குள் போன இந்த காற்றை இழுக்கும்போதே, எல்லா வாசனைகளையும் இனம் பிரித்துக் காட்டுகிறது. அந்த ஆற்றல் இந்த மூக்குக்கு உண்டு. இதற்கு எது காரணம்? காற்றுதான் காரணம். இந்த மூச்சுக் காற்று இயங்குவதற்கு பஞ்சபூதம் துணையில்லாமல் முடியாது. பிரித்தே பேசக்கூடாது. ஆனால் பிரித்து பேசலாம். விளக்கத்திற்காக பேசலாம். ஆனால் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்கும்.
அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போம் அஞ்சு வசப்படுவ தாண்டதனில் – அஞ்சினையும் கண்டறி வோர்ஞானக் காட்சி யதினினைவு விண்டறிய லாமே விதி.
– மகான் திருவள்ளுவர் ஞானம் – கவி எண் 18. அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் – அஞ்சும் எப்போது வசப்படும் என்றால் ஆண்டதனில்.


ஆண்டதனில் – ஒரு வருடம் இல்லை, பன்னிரெண்டு ஆண்டுகள் ஆகும்.
இந்த துறையில் வருபவர்கள் யாரும், விரைவாக கற்றுக் கொள்ளலாமென்று நினைத்து ஏமாந்து போகாதீர்கள்.
விரைவாக கற்றுக் கொள்ளலாம் என்று யாரேனும் உங்களிடம் சொன்னால், அவன் உங்களை வஞ்சனை செய்கிறான் என்பதை, உறுதியாக சொல்கிறேன், சத்தியமாக சொல்கிறேன். எல்லாம்வல்ல ஆசான் மீது ஆணையாக சொல்கிறேன். அவரவர்களும் பாடுபட்டுத்தான் ஆக வேண்டும். யாரும் ஏற்ற முடியாது, இறக்க முடியாது. ஆனால் சமுதாயத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது எங்கு பார்த்தாலும் சாமியார்கள், நாமென்ன சொல்லுவோம்? சாமியார் என்று யார் சொன்னாலும் முதலில் அவனை அயோக்கியப்பயல் என்று முடிவெடு. ஏனென்றால் ஊருக்கு ஒருத்தன் இப்படி இருக்கிறான். எல்லாம் குழப்பவாதிகள், துணிந்து பேசுகிறோம். எங்கே பேசினாலும் இதையேதான் சொல்வோம்.
வேதாரண்யத்தில் பேசும்போது சாமியார் என்று யார் சொன்னாலும், முதலில் அவனை அயோக்கியப்பயல் என்று முடிவெடு என்று சொன்னோம். ஏனென்றால் உண்மையானவன் கோடிக்கு ஒருவன் இருப்பான். ஆனால் வெளியே தெரிந்து கொள்ள முடியாது.
பல பெண்களை அடைவதற்காகவோ, சுபிட்சமாக வாழ்வதற்காகவோ, பாமர மக்களை, இதில் ஆர்வமுள்ள மக்களை வசியப்படுத்திக் கொண்டு வஞ்சிக்கிறான். அதனால் இப்படிப்பட்ட சாமியார்களை அயோக்கியப்பயல் என்று முடிவெடு என்று சொன்னோம்.


முதலில் பஞ்ச பூதத்தை அறியாதவன் பாவியாகிவிடுவான். பஞ்ச பூதத்தை அறியாதவன் பாவி. பஞ்ச பூதத்தை அறிந்தவன் நிச்சயமாக ஏமாற்றுபவனிடம் போக மாட்டான். இதுதான் இயல்பு. இதுதான் இரகசியம்.
அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம் நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செப்பிரேல் பஞ்சமான பாதகங்கணூறுகோடி செய்யினும் பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே.
எவன் நீக்குவான் என்றால், அந்த பஞ்ச பூதத்தை அறிந்த மக்கள் தான் நீக்க முடியுமே தவிர, மற்றவனால் இதைப் பற்றி அறியமுடியாது. இதைப் பற்றி அறிவது சின்ன விசயமோ?
ஆக இந்த பாவத்தை நீக்குவதற்கு நாம் வேறு ஏதாவது செய்து சரிப்படுத்த முடியுமா? இல்லை, யாகம் வளர்க்க முடியுமா? யாகம் வளர்த்துக் கொண்டு பாவத்தை நீக்க முடியுமா? யாகத்தில் போடுவதையெல்லாம் நெருப்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
இட்டகுண்ட மேதடா இருக்குவேத மேதடா சுட்டமட்க லத்திலே சுற்று நூல்கள் ஏதடா முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப் பற்றிநின்ற தேதடா பட்டநாத பட்டரே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 314. யாகம் என்று சொல்லி வேள்வி வளர்ப்பது யாவும் தமிழ்ப் பண்பாட்டுக்கு உகந்தது அல்ல. நம் சங்கத்தார்கள் எந்த காரணத்தை முன்னிட்டும், யாகம் செய்வதில் ஈடுபடக்கூடாது.
வேள்வி என்பது என்ன? மூலக்கனலை மேல் கொண்டு வருவது வேள்வி.
உள்ளே எழுப்புகின்ற அக்கினியை இவன் புறத்தே எழுப்பி என்ன செய்கிறான் ? பட்டுத் துணியை அந்த அக்கினியில் போடுகிறான்.


இப்படி செய்து நாட்டை குழப்புகிறான். அதை பார்ப்பது குற்றம். அதற்கு உதவி செய்வதும் குற்றம்.
இன்று பேசப்பட்ட தலைப்பு உங்களுக்கு கடினமான பொருளாக இருக்கலாம். ஆனாலும் குற்றமில்லை. இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆசான் சிவவாக்கியர், ஆசான் அகத்தியர், ஆசான் நந்தீசர், ஆசான் திருமூலதேவரை உள்ளம் உருக வணங்கி, இப்பொழுது பேசப்பட்ட கருத்துக்கள் எனக்கு புலப்படுதப்பா, ஆனால் செயல்படுத்த முடியவில்லை .
இதற்கு நீங்கள் தான் அருள் செய்ய வேண்டும். உங்களைப் போன்ற ஞானிகள் பாதத்தை பற்றினாலன்றி இந்த இரகசியம் எனக்கு புலப்படாது. ஒன்றும் புலப்படாத இரகசியமாகவே இருக்கிறதென்று ஆசானை உள்ளம் உருக கேட்க வேண்டும்.
தொடர்ந்து நீங்கள் ஓங்காரக்குடிலுக்கு வந்து பயிற்சி பெற வேண்டும். இப்ப நான் பேசுவது கேட்பதற்கு இலகுவாக இருக்கும்.
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
– திருமந்திரம் – ஆகமச் சிறப்பு – கவி எண் 60. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்.
– திருக்குறள் – ஊழ் – குறள் எண் 373. ஆக இந்த இரகசியம் புலப்படாது. எப்படி சொன்னாலும் புலப்படாது. இதை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும். நாம் மாதம் ஒருவருக்கோ, இருவருக்கோ அல்லது ஐந்து பேருக்கோ நமது சக்திக்கு தகுந்தாற்போல் மாதாமாதம் ஏழை எளிய மக்களுக்கு சாப்பாடு போடவேண்டும்.


அப்படி இல்லாவிட்டால் பல்வேறு மக்களுக்கு உதவி செய்யலாம். கட்டாயமாக காலை, மாலை இருவேளை பூஜை செய்ய வேண்டும். இப்படி செய்வதால் தர்மமும் தவமும் ஒன்றுபடும். எப்படியென்றால் காதலி காதலன் மேல் விருப்பம் கொள்வதுபோலாகும்.
நாம் இந்த பிறவியை தக்கவாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த பிறவி போனால் எந்த பிறவி வருமோ? என்று இதையே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டுமே தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. நயத்தால் உனது திருவருளை நண்ணாக்
கொடியேன் நாய் உடம்பை உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற்
பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ
என்கின்ற பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே. – திருஅருட்பா ஆறாம் திருமுறை – அடியார் பேறு
– கவி எண் 14. நயம் என்பது கனிவான மனம். அந்த கனிவான மனம் கொண்டு மேற்கொள்கின்ற இந்த பயிற்சியை தொடர்ந்து நீங்களெல்லாம் பின்பற்ற வேண்டுமென்று சொல்லி முடிக்கிறேன் வணக்கம்.
AGO கலியுக ஞானி மகான் அரங்கமகாதேசிக சுவாமிகளின் சாகா கல்வியை விளக்கும் சன்மார்க்க உண்மை பத்திரிக்கை
ஞானத்திருவடி மாத இதழை வாங்கிப் படித்து பயனடையுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175075
Visit Today : 215
Total Visit : 175075

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories