புத்தகம் – 04.01.1985 – ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்

ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அகத்தியர் துணை
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
ஆறுமுக அரங்கமகாதேசிகர் அருளுரை ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அருளியவர் : சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
துறையூர் – 621 010.
| 1 |



ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
நூலின் பெயர்
: ஆறுமுக அரங்கமகாதேசிகர் அருளுரை
ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
நூலாசிரியர்
தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள்
மொழி
:
தமிழ்
நூலின் பொருள் :
ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
வெளியிட்டோர் : ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,
ஓங்காரக்குடில், துறையூர் – 621010. திருச்சி மாவட்டம். போன் : 04327 255184, 255384, www.agathiar.org Email : kudil@agathiar.in
முதற் பதிப்பு : 12.07.2014, பௌர்ணமி பூஜை வெளியீடு இரண்டாம் பதிப்பு : ஜய வருடம் கார்த்திகை மாத பௌர்ணமி பூஜை
06.12.2014, சனிக்கிழமை
பிரசுர உரிமை
: ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்
பக்கங்கள்
:
48
நூல் அளவு
:
1 x 8 டெம்மி
தாள்
: 80 Gsm மேப்லித்தோ
விலை
:
ரூ. 10 /
டைப் செட்டர்
:
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், துறையூர் – 621010. திருச்சி மாவட்டம்.
அச்சிட்டோர்
கண்மணி பிரிண்டர்ஸ், விருதுநகர் -1. போன் : 99941 81146
| 2 ||



ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
முருகப்பெருமான் துணை ஆறுமுக அரங்கமகாதேசிகர் அருளுரை | ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
திருச்சி மாவட்டம், துறையூர் ஓங்காரக்குடிலாசான் சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு, தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அவர்கள்
04.01.1985 அன்று அருளிய அருளுரை
ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம் அன்புள்ள ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்க உறுப்பினர்களே பெரியோர்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்,
ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் பக்தி நெறியையும், யோக நெறியையும் சமுதாயத்திற்கு சொல்லி வருகிறது. பக்தி நெறி என்பது ஒரு நல்ல மார்க்கம் என்றாலும், யோகாப்பியாசம் செய்யாவிட்டால் பக்தி நெறியால் பயனில்லை என்பது சித்தர்களுடைய தத்துவம்.
மகான் இராமலிங்க சுவாமிகளும் அப்படித்தான் சொல்லியிருக்க முடியும். மூச்சுக்காற்று இருக்கும் வரையில் பக்தி செலுத்தலாம்.
ஆனால் மூச்சுக்காற்று போனால், பக்தி செலுத்த முடியாது, பிணமாவான். இந்த தத்துவத்தை சித்தர்கள் சொல்கிறார்கள், மகான்கள் சொல்கிறார்கள். ஆசான் இராமலிங்க சுவாமிகளும் இதைத்தான் சொல்லியிருக்க முடியும்.
ஒரு நாளைக்கு இருபத்தோராயிரத்தி அறுநூறு முறை மூச்சுக்காற்று வந்து போகும். இப்படி வந்து போகின்ற மூச்சுக்காற்றை வாசிப்பழக்கம் அறிந்து உள்ளே ஸ்தம்பித்து நிறுத்தாமல், பக்தி சித்திக்காது என்பது உண்மை.
பக்தி நெறிதான் சிறந்ததென்று பெரிய மேதைகளெல்லாம் சொன்னார்கள். ஆனால் ஆசான் சிவவாக்கியர் சொல்கிறார்.




ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
நித்தமும ணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து கத்தியேக தறியே கண்கள்மூடி என்பயன் எத்தனைபே ரெண்ணினு மெட்டிரண்டும் பத்தலோ அத்தனுக்கி தேற்குமோ அறிவிலாத மாந்தரே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 504. யாரைப் பார்த்து அறிவிலாத மாந்தர் என்று சொன்னார்? பெரிய வீட்டில், பூஜை அறையில் அமர்ந்து, மணி அடித்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, மணிக்கணக்காக தியானம் செய்து கொண்டிருக்கின்றாயே? உனக்கு அதனால் என்ன லாபம்? தினம் நீயும் இப்படி செய்து கொண்டிருக்கிறாய்?
அப்போ, அத்தனை மக்களையும் பார்த்து, அறிவிலாத மாந்தரே என்று சொல்லும்போது ஆசான் சிவவாக்கியருக்கு நம் மீது கோபமா? இதற்கு அடிப்படை என்ன? எந்த அடிப்படையில் இந்த வார்த்தையை பயன்படுத்தினார்?
நித்தமுமணி துலக்கி நீடுமூலை புக்கிருந்து – நீடு மூலை என்பது வீட்டுக்குள் இருக்கும் ஒரு பூஜையறை.
அந்த பூஜை அறையிலிருந்து கொண்டு நமசிவாய என்றோ, ஐயப்பா என்றோ, ஓம் சக்தி என்றோ இப்படி பல்வேறு தெய்வத்தையெல்லாம் கூப்பிட்டு, மணியடித்துக் கொண்டிருந்தால், உனக்கு ஞானம் வந்திடுமா? என்றார். இப்படி அவர் கேட்டாலும் பரவாயில்லை. ஆனால் அறிவிலாத மாந்தரே! என்று சொல்லியிருக்கின்றார்.
அப்போ இதற்கு என்ன அடிப்படை? எத்தனைபேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்தலோ – அகாரஉகாரத்தைப் பற்றி தெரியாமல் இந்த மூச்சுக்காற்றை இடகலையும் பிங்கலையும் சேர்த்து புருவ மத்தியில் ஒடுக்காத மக்கள் எத்தனை பூஜை செய்தாலும் பயனில்லை. அதுமட்டுமில்லை அறிவில்லை என்று சொன்னார்.
ஆசான் சிவவாக்கியருக்கு நம்மீது என்ன கோபமா? நம் மேல் அவருக்கென்ன கோபம்? அப்போது நீங்கள் அதை தெரிந்து கொள்ள வேண்டும். வெறும் பக்தி பிறவித் துன்பத்தை ஒழிக்காது, வாசியோடு கலந்த பக்திதான் சித்திக்கும்.
| 4 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
பிறந்தவர்க்கு மோட்சகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும் மறந்தவர்க்கு மறலிவந்தால் வலுவாருண்டோ
வருமுன்னே வலுக்கட்டிக் கொள்ளவேணும் அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல் துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே. மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் 89. நீ பிறந்தால் மோட்சகதி தேட வேண்டும். அதுதான் சிறந்த அறிவு. இதே கருத்தை ஆசான் திருவள்ளுவர் சொன்னார்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது வேண்டாமை வேண்ட வரும்.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 362. வேண்டாத பொருள் – விருப்பமில்லாத பொருள். அவன்தான் ஞானிகள், அவன் பாதத்தைப் பற்றினால் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்பது சாரம்.
பிறந்தவர்க்கு மோட்சகதி தேடவேணும்
பின்கலையும் முன்கலையும் சேரவேணும் இடகலையும் பிங்கலையும் புருவ மத்தியில் சேர வேண்டும்.
மறந்தவர்க்கு மறலி வந்தால் வலு யாருண்டு – இதை சேர்க்க மறந்தால் அவனுக்கு வலு ஏது? எமனை வெல்லுகின்ற ஆற்றல் ஏது அவனுக்கு?
வருமுன்னே வலு கட்டிக் கொள்ள வேண்டும் – அது எப்படி வலு கட்டிக் கொள்ள வேண்டும்? இடகலையும் பின்கலையும் சேர்க்கின்ற ஒரு தத்துவத்தை, பெருமையை ஆற்றலைப் பெற வேண்டும்.
அறந்தழைக்க மறுமுகவன் பாதம் போற்றி
அர்ச்சனைசெய் தாலுதவி யகண்டவாசல் துறந்துநின்ற திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்ற மாமே.
| 5 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
இந்த சங்கம் வெறும் பக்தி நெறியைப் பற்றி போதித்து வந்தால் என்னாகும்? நிச்சயமாக பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியாது. அப்போது யோகத்தோடு கலந்த பக்தி நெறியை நாங்கள் சொல்கிறோம்.
நாங்களும் பக்தியைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் என்ன சொல்வது? ஆசான் அழுகண்ணிச்சித்தரே சொல்கிறார். ஒரு மனிதன் பஞ்சமாபாவியாக இருந்தாலும், யார் பால் அன்பு கொண்டால் அவன் செய்த பாவங்களெல்லாம் நீங்கி, முக்தி பெறுவான் என்பதற்கு விளக்கம் சொல்கிறார். லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே
நந்திதிருமூலரையும், லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும் சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய் உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய் கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர் ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன்
பூசைசெய்தால் சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
– மகான் அழுகண்ண ர். சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசை செய்வாய் என்று சொல்லும்போது கவனிக்க வேண்டும். லபிக்க வழி சொல்லுகிறேன் என்றால் உனக்கு சித்திக்க வேண்டுமென்றால், யார் தயவு வேண்டும்?
லபிக்க வழி சொல்லுகிறேன் ஆத்தாளே நந்தி திருமூலரையும் – நந்தீசன், திருமூலதேவன், காலாங்கிநாதன், சட்டமுனி, போகமகாரிஷி இப்பேர்ப்பட்ட மாபெரும் தலைவன்பால் அன்பு கொண்டால், நிச்சயமாக உனக்கு ஞானம் சித்திக்கும்.
இப்போ நாம எதற்கு கூட்டம் போட்டிருக்கின்றோம். வாசி நெறியைப் பற்றி பின்பு விளக்கம் சொல்லப் போகின்றோம். வாசி நெறி அறியாத மக்களுக்கு ஞானம் சித்திக்காது என்பது தத்துவம். அப்போது வாசி நெறி என்பது என்ன? ஏதோ மூச்சுக்காற்றை
-6-


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஸ்தம்பித்து நிறுத்துவதோ? இதல்ல வாசி நெறி. இந்த நுரையீரலில் நிறுத்துகின்ற காற்று வாசி நெறியாக இருக்க முடியாது.
அற்பமா மூட ரறியாமல் யோகம் சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார் கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே. – மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 – கவி எண் 17.
ஆசான் இதை வகுத்து தர வேண்டும். எவனொருவன் மூச்சுக்காற்றை அறியாமல், எத்தனை பக்தி செலுத்தினாலும், அவனுக்கு பிறவி உண்டு. அவன் மீண்டும் பிறப்பான். பிறவித்துன்பம் அற்றுப் போக வேண்டுமென்றால், அவன் வாசி நெறியைக் கற்று அறிய வேண்டும். அதற்குத் தானே சன்மார்க்க சங்கத்தை சார சொல்லியிருக்கின்றோம்.
வாசிப் பழக்க மறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும் நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே. – மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண் 27. வாசிப்பழக்கம் அறிய வேண்டும். எத்தனை பக்தி செலுத்தினாலும் வாசிப்பழக்கம் அறிய வேண்டும். இந்த மூச்சுக்காற்றைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மண்டல வீடுகள் என்பது ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்கள்.
நுரையீரல் வழியே சென்று வருகின்ற மூச்சுக்காற்று மும்மண்டலத்தையும் கோர்த்து வராது.
வயிற்றிலே பழைய உணவு இல்லாமல், மலச்சிக்கல் இல்லாமலிருந்து, வினாத்தண்டு நிமிர்ந்திருந்து எல்லா மகான்களையும் உள்ளம் உருக பூஜித்து அடியேன் வாசியோடு வாசியாக கலக்க வேண்டுமென்று கேட்டு வாசியை ஸ்தம்பித்து நிறுத்தி, அந்தக் காற்றை கண்டஸ்தானத்தில் இழுக்கவேண்டும். அதற்கு உகாரம் என்று பெயர், வெளிக்காற்றுக்கு அகாரம் என்று பெயர்.
| 7 ||



ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
இந்த அகார உகாரத்தையும் புருவமத்தியில் ஸ்தம்பிப்பார்கள். அப்படி ஸ்தம்பித்தால் ஆதித்த மண்டலம், அக்கினி மண்டலம், சந்திர மண்டலம் இந்த மூன்று மண்டலங்களும் ஒரு அடுக்குக்கு வரும். இது தத்துவம். இந்த காற்றே மும்மண்டலத்தையும் கோர்க்கின்ற காற்றாகும். அந்த அடுக்கு வரும்போது என்ன செய்ய வேண்டுமென்றால், நாசி வழிக்கொண்டு யோகமும் வாசியும்
நாட்டத்தைப் பாரடி வாலைப்பெண்ணே. என்றார். அப்போ நாசி வழியாகத்தான் போக வேண்டும், வேறு வழி இல்லை. இந்த கருத்துக்களை சொல்லும்போது, இதையெல்லாம் நீங்கள் இதுவரை கேட்டும், படித்திருக்கலாம், பேசலாம். ஆனால் செயல்படுத்துவது கடினம். இதை செயல்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்?
ஆசான் தயவு வேண்டும். ஆசான் தயவு இருந்தால் நம் பாவம் தீரும். பாவம் தீராமல் வாசி நெறி பற்றி நாம் அறிய முடியாது. வேண்டுமானால் பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்து கொண்டிருக்கலாம். பொங்கல், புளியோதரை வைத்து பூஜை செய்வதெல்லாம் ஏதோ மன ஆறுதலே தவிர, அது பிறவித்துன்பத்தை ஒழிக்க முடியாது. அப்போ பாவத்தை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழிசொல்லிக் கருணை வைப்பான் ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழிமுனையிலே இருக்கும் என்று கோன் என்ற சிவரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனைபோக்கி ஆசை போக்கி நான் என்ற ஆணவங்கள் தன்னைப்போக்கி நாட்டுவார் குருநாதன் மோட்சந் தானே.
– மகான் கொங்கண மகரிஷி – 12. இந்த உலகத்தில் தோற்றமாகின்ற தெய்வங்களெல்லாம் கற்பனை என்று உணர்கின்ற மக்கள்தான் ஞானியாக முடியும். உலகத்தில் இருக்கின்ற தெய்வங்கள் அத்தனையும், கற்பனை. சிவனென்று சொல்வதும், திருமால் என்று சொல்வதும், பிரம்மன்
| 8 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
என்று சொல்வதும், சக்தி என்று சொல்வதும் இதெல்லாம் ஒரு கற்பனை என்றும், இதற்கு மேலான ஒரு பொருள் உண்டு. அதை அறிகின்ற மக்கள்தான் ஞானியாக முடியும்.
தானென்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் – ஏன் ஈசன் தீர்க்கக் கூடாதா? அல்லது ஆதிபராசக்தி தீர்க்கக் கூடாதா? அல்லது ஐயப்பன் தீர்க்கக் கூடாதா? அல்லது பல்வேறு தெய்வங்கள் தீர்க்கக் கூடாதா? ஆனால் ஆசான்தான் பாவத்தை தீர்ப்பான். ஆசான்தான் வாசி வகுத்து தருவான்.
தானென்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான் – கொடும் பாவம் இருக்கும் வரையில் எதை எடுத்தாலும் சந்தேகம் வரும். இந்த கருத்தே உங்களுக்கு சந்தேகமாக இருக்கும்.
மோட்சம் தருபவன் ஆசான்தான். மனிதன் தான் தெய்வமாகிறான். மனிதன் நிலை உயர்ந்தால் தெய்வமாகிறான். மற்றதெல்லாம் தெய்வம் இல்லையென்று உணர்கின்ற பரிபக்குவம் எவருக்கு உண்டோ அவர்தான் ஞானியாகின்றான்.
நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுட்பஞ் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லுமந்திர மேதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளி ருக்கையில் சுட்டசட்டி சட்டுவங் கறிச்சுவைய றியுமோ.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 520. யாருக்கடா சொன்னது இந்த கருத்து? மாபெரும் யோகிகளுக்கு, ஊழ்வினை அற்றவர்களுக்கு, பண்புள்ள மக்களுக்கு, சிறந்த அறிவாற்றல் உள்ள மக்களுக்குத்தான் இதை சொல்ல முடியும். இதை மற்றவர்களுக்கு சொல்ல முடியாது. அப்போ கோவில்களில் இருக்கும் தெய்வங்கள் எல்லாம் ஏதோ பாமர மக்களுக்கு வழிகாட்டியாக அந்த காலத்தில் சிறப்பறிவில்லாத மக்கள் வகுத்த பாதை அது. இதை ஆசான் சிவவாக்கியர் சொல்வார்,
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா வாயினால் தொழுது நின்ற மந்திரங்க ளேதடா ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலா மிறையையே. – மகான் சிவவாக்கியர் பாடல்கள் – கவி எண் 186.
-9-


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
கோயில் பள்ளி ஏது? ராத்திரி பத்து மணிக்கு மேல் சாமியை கொண்டுபோய் வைப்பான். பெண்பிள்ளை சாமி இருக்கும். அங்கே ஆண்பிள்ளை சாமியை கொண்டு போய் வைப்பான். விடிந்து எழுந்தவுடன் என்ன செய்வார்கள்? இரவில் அந்த சாமிகள் சேர்க்கை சேர்ந்ததாக சொல்வார்கள். பிறகு அந்த துணியை விற்றுக்கொண்டிருப்பார்கள். இது என்ன? இதைப் போன்ற பள்ளியைத்தான் நாம் பார்க்க முடியும்.
ஆசான் சிவவாக்கியர் சொல்கிறார், இதல்ல, இதெல்லாம் இவர்களாக ஒரு சதி செய்த கூட்டமடா இது. ஒரு வகையான சேர்க்கை . இவர்கள் செய்த ஒரு கற்பனை அது. எந்த சாமி இராத்திரியில் குடும்பம் நடத்திக் கொள்ளும்? இவனிடம் இது பற்றிக் கேட்டால் நீங்கள் என்ன நாத்திகவாதி என்று எங்களை நினைக்கின்றீர்களா? இல்லை! அவரே சொல்கிறார்,
கோயில்பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுது மந்திரங்க ளேதடா எந்த மந்திரம் சொன்னால் என்ன ஆகும்? காற்று போனால் மந்திரம் போச்சு. ஆக நீங்கள் இதை கவனிக்க வேண்டும்.
வாயினால் தொழுது மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் ஞானமான பள்ளி எது? கோயில் பள்ளியா? ஞானமான பள்ளி என்பது புருவமத்தி. இங்கே இடகலை என்று சொல்லப்பட்டது பெண் கலை. வலது கலை ஆண் கலை அல்லது சூரியகலை. இரண்டையும் எங்கே சேர்க்க வேண்டும்? புருவ மத்தியில் சேர்க்க வேண்டும்.
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியிற் காணலா மிறையையே. அப்போ யோகிகள் என்ன செய்கிறார்கள்? பாமர மக்களுக்கு புறத்தே காட்டுகின்றார்கள். ஆண் சாமி, பெண் சாமி இரண்டையும் இரவில் ஒன்றாக வைத்து பூட்டுவான். சாமி இருந்த இடத்தில்தான் இருக்குமே தவிர அந்த இடத்தை விட்டு மாறாது. அதை நாம் பார்த்துக் கொண்டிருப்பது அல்ல! இங்கே புருவமத்தியில் சேர்க்க வேண்டும். எதை சேர்க்க வேண்டும்? பெண் கலையையும், ஆண்
| 10 ||



ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
கலையையும் சேர்க்க வேண்டும். சூரிய கலையையும், சந்திர கலையையும் புருவமத்தியில் செலுத்தி நிறுத்த வேண்டும். இதுதான் ஞானமான பள்ளி.
நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியிற் காணலா மிறையையே – இதைதான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதை தெரிந்த மக்கள் என்ன செய்வார்கள்? இதை தெரிந்து கொள்வதற்கு அகார உகாரம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப் பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
– திருமந்திரம் – திருவம்பலச் சக்கரம் – கவி எண் 986. எட்டு இரண்டென்பது அகார உகாரம். எட்டு என்பது தமிழில் அ’ என்பது (8), ‘உ’ என்றால் இரண்டு (2). இதை அறியாத மக்கள் ஏழையர் என்று சொல்வார்கள். இதை அறியாத மக்கள் மிகப்பெரிய கல்வியறிவு உள்ளவனாக இருந்தாலும் சரி அல்லது தினம் காலை, மாலை பூஜை செய்பவனாக இருந்தாலும் சரி, இன்னும் கவிஞனாக இருந்தாலும் சரி, எழுத்தாளனாக இருந்தாலும் சரி, இன்னும் அநேக அறிவாற்றல் உள்ள மக்களாக இருந்தாலும் சரி, அவர்களை ஏழை என்றார். அவன் அறியாதவன் ஏழை.
ஏழையென்றால் என்ன? அறிவில் ஏழை என்றார். சிறப்பறிவுள்ள மக்கள் அகார உகாரம் தெரிந்திருக்க வேண்டும். மகான் இராமலிங்க சுவாமிகள் இதைத் தெரிந்தவர். அவருடைய அருட்பா படித்துவிட்டு, அகார உகாரம் தெரியாவிட்டால் அதைப் படித்ததற்கு அர்த்தமில்லை என்று பொருள்.
சன்மார்க்கம் என்ற வார்த்தையையே இராமலிங்க சுவாமிகள் அருட்பாவில்தான் பயன்படுத்தியுள்ளார். இங்கே வித்தியாசம் பார்க்கக் கூடாது. மகான்களில் இவர் உயர்ந்தவர், இவர் தாழ்ந்தவர் என்பது சித்தர் மரபுக்கு ஒப்பாகாது.
இருமூன்று நான்கெனப் – இருமூன்றென்பது ஆறு, நான்கு, ஆக சேர்த்து பத்து. இருமூன்று என்பது ஆறாதாரம். அதாவது மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம், அனாகதம், விசுக்தி,
| 11 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஆக்கினை ஆகும். நான்கு என்பது வெளிப்பால், வெளிவுட்பால், வெளிவெளிப்பால், நிர்குணப்பால் நான்கு ஜீவகலைகள். இந்த நான்கு ஜீவகலைகளும் அகார உகாரம் சேர்ந்தால்தான் சித்தி பெறும்.
சித்தாந்த சன்மார்க்க பாதமே – அதுதான் சன்மார்க்கப் பாதை. மற்றதெல்லாம் சன்மார்க்கப் பாதையல்ல, துன்மார்க்க பாதை. இதெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமல்லவா?
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறைந்தபோது விண்ணிலே சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் வேந்தனாகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம் கூந்தலம்மை கோணலொன்றுங் குறிக்கொணாதி
துண்மையே. – மகான் சிவவாக்கியர் – கவி எண் 531. ஆசான் சிவவாக்கியர் இவ்வாறு தனது பாடலில் கூறுகிறார். இதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
மாந்தர்வாழ்வு மண்ணிலே மறைந்தபோது விண்ணிலே – ஏன் மறக்கிறான்? எப்போது மறப்பான் இவன்? இறந்தால் மறப்பான். ஒரு மனிதன் ஆணோ, பெண்ணோ எப்போது இறக்கிறானோ, அப்போதுதான் பாசபந்தத்தை மறப்பான். இது சராசரி மனிதனுடைய இயல்பு. ஞானியர்கள் இருக்கும்போதே மறப்பார்கள். எப்படி மறப்பார்கள்?
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் – சாந்தனான ஆவி, ஒரு நாளைக்கு இருபத்தோராயிரத்தி அறுநூறு முறை வந்து போகும் சுவாசம், காற்று. இதைத்தான் சாந்தமான வாசி என்றார். அந்தக் காற்றை பக்குவப்படுத்துவார்கள்.
சாந்தனான ஆவியைச் சரிப்படுத்த வல்லிரேல் வேந்தனாகி மன்றுளாடும் விமலன்பாதம் காணலாம்
தலைவனை காண்கின்ற ஆற்றல், வாசி வசப்பட்டால்தான் முடியும். வாசி வசப்படாவிட்டால், வேந்தனாகி மன்றுளாடும் விமலன் பாதம் – மெய்ப்பொருளாகிய தலைவனைக் காண முடியாது.
கூந்தலம்மை கோணலொன்றுங் குறிக்கொணாதி துண்மையே – இந்த வாசியை இடகலை, பின்கலையாகிய அகார உகாரத்தை
| 12 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
புருவமத்தியில் செலுத்துகின்றவர்கள் பெண் மாயையிலிருந்து விடுபட வேண்டும். இது சட்டம். இதே கருத்தை மகான் இராமலிங்க சுவாமிகளும் சொன்னார். இப்போது நாங்கள் சொல்கின்ற கருத்துக்கள் இந்த அகார உகாரம் தெரியாத மக்களுக்குத்தான்.
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினாற் கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
– திருமந்திரம் – தியானம் – கவி எண் 603. எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும் – இப்போ யோகாப்பியாசம் எல்லா மக்களும் செய்கின்றார்கள். வாசியை ஸ்தம்பிப்பார்கள், அதாவது நிறுத்துவார்கள், மூச்சுக்காற்றை இடது பக்கம் இழுத்து வலது பக்கம் விடுவார்கள் அல்லது நிறுத்தி எப்படி எப்படியோ வாசி யோகம் செய்வார்கள். ஆனால் தலைவனை அறிய முடியாது. காரணம்? ஆசான் வகுத்துக் கொடுக்க வேண்டும்.
ஆசான் இராமலிங்க சுவாமிகளுக்கு வாசி நடத்திக் கொடுத்தது யார்? ஏக தலைவனாகிய மகான் மாணிக்கவாசகர்தான் வாசி நடத்திக் கொடுத்தார். ஆசான் மாணிக்கவாசகர் பாதத்தைப் பற்றுகின்ற மக்களுக்கு ஞானம் சித்திக்கும். ஏன் அப்படி சொல்கிறோமென்றால், திருவாசகத்தைப் படிப்பதைவிட திருவாசகம் சொன்ன மகான் மாணிக்கவாசகர் பாதத்தைப் பற்றினால் உங்களுக்கு ஞானம் சித்திக்கும். இதற்கு விளக்கம் ஆசான் திருமூலதேவர் சொல்கிறார்.
சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல் முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற் சுத்தச் சிவமாவ ரேசுத்த சைவரே.
– திருமந்திரம் – கடுஞ்சுத்த சைவம் – கவி எண் 1440. இங்கு கவனிக்க வேண்டும். திருவாசகம் படித்துக் கொண்டிருந்தால் போதுமா? அவர் உள்ளம் உருகித்தான் பாடியிருக்கின்றார். அவர் எப்படி சிவத்தின் பெருமையை அறிந்திருக்கின்றார்? அவர் அடைந்த பேரின்பம் எப்படி? அவர்
| 13 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
உள்ளெழும் ஜோதியைக் கண்டு அளவில்லாத மகிழ்ச்சியடைந்தார். அவர் கண்ட அந்த உண்மையை, பெருமையை அந்த பேரின்பத்தை திருவாசகமாக பாடியிருக்கின்றார். நீ அதை படித்துவிட்டு ஆனந்தப்பட்டால் போதுமா? இறைவனை அடைய முடியுமா? முடியாது. அதை சொல்லும்போது திருமந்திரத்தில் ஆசான் திருமூலர் சொல்வார்.
சுத்த சிவனுரை தானதில் தோயாமல் – சிவத்தின் பெருமையைப் பற்றி திருவாசகம் மாதிரி எந்த நூலும் பேசவில்லை. அதனுடன் நீ கலக்காதே என்றார். திருவாசகம் படிக்க வேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் ஆசான் திருமூலதேவர் அதை படிக்காதே என்கிறார். ஏன் அப்படி சொன்னார்? படிக்கலாம், சார வேண்டாம். ஏதோ பொழுது போக்கிற்கு படிக்கலாம், மன ஆறுதல் தரும். அது முக்தி தந்துவிடாது. என்னடா செய்வது? சுத்த சிவனுரை திருவாசகம்தான் அல்லது திரு அருட்பாவாக இருக்கலாம். இன்னும் பல நூல்கள் இருக்கலாம். அதில் கலக்காதே!
சுத்தச் சிவனுரை தானதில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் திருஅருட்பா படித்துவிட்டு ஆனந்தப்பட்டால் பிறவித்துன்பம் அற்றுப் போகாது. திருஅருட்பா படித்து ஆனந்தப் படுவதைவிட, அருட்பா ஓதிய மகான் இராமலிங்கசுவாமிகள் பாதத்தை உள்ளம் உருக பூசிக்க வேண்டுமென்று சொன்னார்.
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம் – பதப்பொருள் என்பது என்ன? ஆசான் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தை படித்து காலத்தை வீணாக்குவதைவிட மகான் மாணிக்கவாசகர் பாதத்தை உள்ளம் உருக பூசித்தால் ஞானியாகலாம். அதுதானே சாரம்?
அத்தகை ஆன்மா அரனை அடைந்தற்றாற்
சுத்தச் சிவமாவரே சுத்த சைவரே சுத்த சைவர் ஆவதற்கு என்ன அடிப்படைக் காரணம்? ஆசான் மாணிக்கவாசகர் சொன்ன திருவாசகத்தை படித்து காலத்தை வீணாக்குவதைவிட அவர் பாதத்தைப்பற்றி பூசிக்க வேண்டும்.
| 14 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
திரு அருட்பாவை முழுவதுமாக தெளிவாகப் படிப்பதற்கு பத்தாண்டுகள் ஆகும், ஐந்து நாளில் கூட படிக்கலாம், குற்றமற கற்றுத் தெளிவதற்கு பத்தாண்டுகள் ஆகும்.
இந்த பத்தாண்டுகளில் நீ என்ன செய்ய வேண்டும்? திருஅருட்பா படித்து காலத்தை வீணாக்காதே!
ஆசான் இராமலிங்கசுவாமிகள் அவர்களே! இந்த பாவிக்கு ஞானம் சித்திக்க வேண்டும். அடியேனுக்கு பந்தபாசம் அற்றுப்போக வேண்டும். அடியேன் உள்ளதை உள்ளவாறு அறிய வேண்டும். அடியேன் வாசி நெறி அறிய வேண்டும். உண்மைப்பொருள் உணர்வதற்குரிய பரிபக்குவம் வேண்டும். உன் பாதத்தை உள்ளம் உருக பூசிப்பதற்கு அருள் செய்ய வேண்டுமென்று ஆசான் இராமலிங்க சுவாமிகளை பத்து ஆண்டுகள் பூசை செய்து வந்தால், ஞானியாகலாம்.
இப்போது நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும். புராணங்கள் பதினெட்டு இதிகாச புராணங்களை எல்லாம் படித்து ஏனடா காலத்தை வீணாக்குகிறாய்? ஞானியின் பாதத்தைப் பற்று. இதே கருத்தை மகான் தாயுமானசுவாமிகளும் சொல்கிறார். மகான் தாயுமானவர் மட்டுமல்ல! அகத்தியர் தத்துவம் முந்நூறு என்ற ஒரு நூல் உள்ளது. அதை பூரணமாக படிப்பதென்றால், படித்து அதன் பொருளை அறிவதென்றால், சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆகும். இந்த பதினான்கு ஆண்டுகள் என்ன செய்ய வேண்டும்? மகான் தாயுமானசுவாமிகள் வகுத்தது போல், எவனொருவன் உண்மைப் பொருள் உணர்ந்தானோ, அந்த அகார உகார இரகசியத்தை அறிந்தானோ, அவன் பாதத்தைத் தொடர்ந்து பூசித்தால் அது போதும். தத்துவத்தை படித்து காலத்தை வீணாக்காதே! என்று சொன்னார். இதற்கு விளக்கம் சொல்லும்போது,
தத்துவப் பேயோடே தலையடித்துக் கொள்ளாமல் வைத்தவருண் மோன வள்ளலையே – நித்தமன்பு பூணக் கருது நெஞ்சு; போற்றக் கரமெழும்பும்;
காணத் துடிக்குமிரு கண். – மகான் தாயுமானவர் – உடல் பொய்யுறவு – கவி எண் 29.
| 15 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அப்போ தத்துவம் என்பது என்ன? தொண்ணூற்றாறு தத்துவங்கள். இதை படித்து ஏனடா காலத்தை வீணாக்குகின்றாய்? தத்துவ பேய் என்று சொன்னார். தத்துவத்தை பேய் என்று சொன்னதற்கு அடிப்படைக் காரணம் என்ன? இது உனக்கு சித்தி தராது, காலத்தை வீணாக்காதே! வைத்த அருள் மோன வள்ளலையே – மோனம் என்பது மோன நிலை. இந்த மோனம் என்பதற்கு விளக்கம் சொல்லும்போது அந்த கவிக்கு மீண்டும் வந்து சொல்கிறோம். இந்த மோனநிலை என்பது என்ன?
சும்மா விருக்கச் சுகஞ்சுக மென்று சுருதியெல்லாம் அம்மா! நிரந்தரஞ் சொல்லவுங், கேட்டும், அறிவின்றியே பெம்மான் மௌனி மொழியையுந் தப்பியென்
பேதைமையால் வெம்மாயக் காட்டி லலைந்தேன்; அந்தோ!வென்
விதிவசமே. – மகான் தாயுமானவர் – பாயப்புலி – கவி எண் 36. சும்மா இருப்பது என்ன? அகார உகாரமாகிய இருவகைக் காற்றை வாசியை புருவமத்தியில் செலுத்துகின்ற மக்கள்தான் மௌனிகள். அவர்கள் பாதத்தைப் பற்றி பூசித்தால், தத்துவம் படிக்க வேண்டிய அவசியமில்லை, புராணங்கள், இதிகாசங்கள் மற்ற நூல்களைப் படிக்க வேண்டிய அவசியமில்லை. நீ மௌனியாகிய மகான் இராமலிங்கசுவாமிகள், மகான் மாணிக்கவாசகர், மகான் தாயுமானசுவாமிகள், மகான் திருமூலதேவர், மகான் அகத்தீசர், மகான் கருவூர்முனிவர், மகான் கொங்கணமகரிஷி, மகான் பட்டினத்தார், மகான் பத்ரகிரியார், மகான் அருணகிரிநாதர் போன்ற மாபெரும் தலைவன்பால் அன்பு கொண்டால் ஞானம் சித்திக்கும். அவர்கள் வாசி நெறியை வகுத்துக் காட்டுவார்கள். இதுதானே இயல்பு. அப்ப நீங்கள் கவனிக்க வேண்டும்.
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும் கண்ணார் அமுதினைக் கண்டறி வாரில்லை உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினாற் கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
– திருமந்திரம் – தியானம் – கவி எண் 603.
| 16 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அப்ப உள்நாடி அறிவதற்கு என்ன செய்ய வேண்டும்? இதைக் கற்றவன் சொல்ல வேண்டும், இதை உணர்த்த வேண்டும், வாசி நடத்தித் தர வேண்டும். மகான் இராமலிங்கசுவாமிகளுக்கு ஆசான் மாணிக்கவாசகர் வாசி நடத்திக் கொடுத்தார்.
வாசி நடத்தித் தருவாண்டி – ஒரு
வாசியில் இங்கே வருவாண்டி ஆசில் கருணை உருவாண்டி – அவன்
அற்புதத் தாள்மலர் ஏத்துங்கடி. – திருஅருட்பா முதல் திருமுறை – சண்முகர் கொம்மி – 2987.
அப்ப வாசி நடத்தித் தரவேண்டும். வாசி அறியாதவன் எத்தனை பக்தி செலுத்தினாலும் மரணம் வந்துவிடும், பிறவி வரும், இது இயல்பு.
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினாற் கண்ணாடி போலக் கலந்துநின் றானே என்று சொன்னார். அப்ப என்ன செய்கிறான்? அன்பு செலுத்துகின்ற மக்களுக்கு உணர்வோடும், உணர்ச்சியோடும் கலக்கின்றான் என்பது சாரம். அதற்கு அறிவாற்றல் வேண்டுமல்லவா? ஞானிகளின் பாதத்தைப் பற்றி பூசிப்பதற்கும் அறிவாற்றல் வேண்டும்.
ஆனால் கோயிலில் இருக்கும் தெய்வங்களைக் கும்பிடுவதற்கு அறிவாற்றல் தேவையில்லை. ஏதோ பொங்கல், புளியோதரை வைக்கலாம். மாவிளக்கு போட்டு கும்பிட்டுப் போகலாம். ஏதோ தட்டு நிறைய மாவிளக்கு மாவும் வைக்கலாம். பொங்கல் வைக்கலாம், பூஜை செய்யலாம், தேங்காய் உடைக்கலாம், சூடம் கொளுத்தலாம், கும்பிட்டு போகலாம். இவை பிறவித் துன்பத்தை ஒழிக்காது. வாசிமார்க்கம்தான் பிறவித்துன்பத்தை ஒழிக்கின்ற மார்க்கம்.
நாடிநாடி யும்முளே நயந்துகாண வல்லிரேல் ஓடியோடி மீளுவா ரும்முளே யடங்கிடும் தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் கோடிகால மும்முகந் திருந்தவாற தெங்ஙனே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 157. நாடிநாடி யும்முளே நயந்து காண வேண்டும். வாசி நெறியை ஆராய்ந்து ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும். அப்போது ஓடிஓடி
| 17 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
மீள்கின்ற காற்று உம்முள்ளே அடங்கும். உம்முள்ளே அடங்கா விட்டால், தேடிவந்த காலனை திகைத்து நிற்கச் செய்ய முடியாது. நீ காலனை புறமுதுகு காட்டச் செய்ய வேண்டுமென்றால், உனக்கு வாசிவசப்பட வேண்டும். வாசி வசப்பட்டவன்தான் காலனை வெல்வான். மற்றவன் காலனை வெல்ல முடியாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஞானிகள் பாதத்தைப் பற்ற வேண்டும். ஞானிகள் பாதத்தைப் பற்றினால் உனக்கு அறிவு தானே வரும்.
போதந் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப் போதந் தனில்வைத்துப் புண்ணிய ராயினார் நாதன் நடத்தால் நயனங் களிகூர வேதந் துதித்திடப் போயடைந்தார் விண்ணே .
– மகான் திருமூலர் – உபதேசம் – கவி எண் 142. நீ என்ன செய்கிறாய்? இந்த மெய்ப்பொருளை அறிவு கொண்டு பார்த்தால் முடியுமா? ஞானிகள் பாதத்தைப் பற்றினால் உங்களுக்கு அந்த உண்மை தெரியும் என்றார். போதம் என்பது அறிவு, ஞானம். ஞானத்திற்குரிய அறிவு நமக்கு இல்லையென்றாலும், ஞானிகள் பாதத்தைப் பற்ற வேண்டும். யார் ஞானி? அவர் யார்? சொல்லுகிறோம் ஆசான் அகத்தீசர் ஞானி, அவர் பாதத்தைப் பற்றினால் உங்களுக்கு உண்மை தெரியும். அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார் அகத்தியரே காஷாய வேட மீவார்
அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள் அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
யாருக்குந் தடையில்லை அரசே யென்பார் அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே – மகான் கொங்கண மகரிஷி – கொங்கணர் கடைக்காண்டம்.
ஆசான் அகத்தியர் மாபெரும் யோகி. எக்கியத்தில் பிறந்த யோகி என்றார். மகத்துவம் பொருந்திய மகான் சுப்பிரமணியரின் அனுக்கிரகத்தால் தோன்றியவர் ஆசான் அகத்தீசர். அதனால்தான் ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் என்று பெயர் வைத்திருக்கின்றோம். சித்தருக்கெல்லாம் தலைவன் ஆசான் அகத்தீசர். எத்தனை பெரிய
| 18 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஞானியாக இருந்தாலும் அகத்தீஸ்வரா இந்த பாவியின்பால் கருணை காட்ட வேண்டும். எனக்கு வாசி வசப்பட வேண்டும். மரணமிலாப் பெருவாழ்வு கிடைக்க வேண்டுமென்று கேட்காவிட்டால் ஞானியாக முடியாது. அப்போது உள்ளம் உருக பூசிக்கின்ற மக்கள்தான் வாசி தத்துவத்தை அறிவார்கள். வாசிக்குத் தலைவன் ஆசான் அகத்தீசர். யோக மார்க்கத்திற்குத் தலைவன் ஆசான் அகத்தீசர். முக்தி தருபவர் ஆசான் அகத்தீசர்.
முத்தி தரும் கும்ப முனி பதத்தை நித்தம்
முனை மூக்கு மத்தியிலே வைத்துப் பாரு சித்தி தரும் புத்தி தரும் கருமம் போகும்
செகசால மாய்கையை யெல்லாந்தீருந் தீரும். ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அவரை தொடர்ந்து பூஜிக்க வேண்டும். அதற்குத்தான் விளக்கம் சொல்கிறார்.
போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை – நீ எத்தனை அறிவாற்றல் பெற்றிருந்தாலும் வாசி நெறி அறிய முடியாது. அந்த வாசி நெறி அடைவதற்கு தடையாய் இருப்பது நீ செய்த பாவம். இந்த பாவத்தை நீக்க காசிக்குப் போனால் முடியுமோ? அங்கு கங்கையில் நீராடினால் முடியுமோ? முடியாது. அப்ப போதம் என்பது ஞானம். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஆசான் அகத்தீசர் பாதத்தைப் பற்ற வேண்டும்.
காசிக்கோ டில்வினைபோமோ – அந்தக்
கங்கையா டில்கதி தானுமுண் டாமோ பேசுமுன் கன்மங்கள் சாமோ – பல பேதம் பிறப்பது போற்றினும் போமோ.
– மகான் கடுவெளிச்சித்தர் பாடல். உன் வினை ஒழிய வேண்டுமென்றால் ஞானிகளின் திருவடிகளை பூசிக்க வேண்டும். காசி இராமேஸ்வரம் போனால் முடியுமோ? இராமேஸ்வரம், காசிக்குப் தினம் பஸ் போகுது. அதில் டிரைவர், கண்டக்டர்கள் கங்கையில் குளித்துவிட்டு வருகிறார்கள். இதனால் அவர்கள் ஞானியாகி விட முடியுமா? இல்லையப்பா!
| 19 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
சமுதாயத்தில் இதெல்லாம் இலகுவான வேலை. இலகுவாக எல்லோருமே குளித்துவிடலாம். ஆனால் பிறவித் துன்பத்தை ஒழிக்க முடியாது. பிறவித்துன்பத்தை ஒழிக்கின்ற மார்க்கம் எல்லாம்வல்ல தலைவன் நம்முள்ளே இருக்கின்றான் என்பதை அறிய வேண்டும்.
தன்னை யறியத் தனக்கொரு கேடில்லை தன்னை யறியாமல் தானே கெடுகின்றான் தன்னை யறியும் அறிவை அறிந்தபின் தன்னையே யர்ச்சிக்கத் தானிருந் தானே.
– திருமந்திரம் – அறிவுதயம் – கவி எண் 2355. தன்னை அர்ச்சிக்க வேண்டும். தன்னை அர்ச்சிப்பது இந்த தூல தேகத்திலே இல்லை. சூட்சும தேகத்தைத் தட்டி எழுப்பினால் அந்த ஆற்றல் பெற்றவன் தலைவன் ஆவான்.
உள்ளே இருக்கும் சக்தியை தட்டி எழுப்பினால் மரணமில்லாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தை அது தரும். இந்த ஆற்றலை யார் தருவார்? போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்றார். அறிவு தருவார். இந்த ஆற்றலை யார் தருவார்? ஆசான் திருமூலதேவர் தருவார்.
தீஞ்சுவை தமிழ் பாடிய ஆசான் திருமூலதேவர், சித்தனுக்கெல்லாம் தலைவன் ஆசான் திருமூலதேவர், அவரை பூசிக்க வேண்டும்.
மகான் திருமூலதேவர் ஞானியாவதற்கு என்ன செய்தார்? மகான் திருமூலதேவர் ஞானியாவதற்கு ஆசான் நந்தீசர் பாதத்தைப் பற்றினார். மகான் நந்தீசர் ஞானியாவதற்கு ஈசன் பாதத்தைப் பற்றினார்.
ஈசன் ஆதிகாலத் தலைவன் மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னே மனிதனாக இருந்து சித்தனானவன். இப்படிச் சொன்னால் நாத்திகம் என்று சொல்வார்கள். அல்ல! ஆதித்தலைவன் அதற்கு விளக்கம் சொல்லும்போது,
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி – மகான் மாணிக்கவாசகர் – போற்றித் திருஅகவல்
– வரி எண் 164,165.
| 20 ||



ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஞானத்திற்குரிய அறிவும் ஆற்றலும் அதற்குரிய தெளிவும், தேட்டமும் அந்த பரிபக்குவமும், அந்த பண்பும் கூர்மையும் இந்த மண்ணில் பிறந்தவனுக்குத்தான் உண்டு. இந்த தமிழ்நாட்டில் பிறந்த, இந்த ஞானபூமியில் பிறந்த, இந்த நான்கு மாகாணத்தைச் சார்ந்த ஞானபூமியில் பிறந்தவனுக்குத்தான் அந்த ஆற்றல் உண்டு. அவன் மூன்று இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னே சித்தி பெற்றவன் ஈசன். அவன் உலகத்திற்கெல்லாம் தலைவன். அவன் பாதத்தைப் பற்றுவதற்கு என்ன வேண்டும்? அவரை பூசிக்க வேண்டும். மகான் திருமூலதேவர் ஆசான் நந்தீசர் பாதத்தை உள்ளம் உருக பூசித்த காரணத்தினால்தான் அவருக்கு இந்த எல்லா தத்துவமும் உணர்த்தப்பட்டது. சாதாரண மனிதனாக இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை எழுதினார். ஆசான் திருமூலதேவர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தார். அதற்கு நாமென்ன செய்ய வேண்டும்? பூசிக்க வேண்டுமல்லவா? எல்லா மகான்களும் இப்படித்தான் சொல்கிறார்கள்.
கொள்ளுவார்கள் சிந்தையிற் குறிப்புணர்ந்த ஞானிகள் விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி
யேத்தினால் உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய்த் தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 446. போதந்தரும் எங்கள் புண்ணிய நந்தியை என்று முன்னமே சொன்னோம். போதம் என்பது அறிவு. அப்படி அவன் பாதத்தைப் பற்றப் பற்ற அவன் என்னென்ன கற்றானோ, உணர்ந்தானோ, தெளிந்தானோ, அது அப்படியே உனக்கு பிரதிபலிக்கும்.
போதந் தரும் எங்கள் புண்ணிய நந்தியை
போதந்தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார் நீ திருமூலதேவா என்றால் போதும். அப்படி அவரை சிந்திக்க சிந்திக்க, அவர் உணர்வோடும், உணர்ச்சியோடும், நாடி நரம்புகளோடும் கூடி உன்னுள் இருக்கும் எல்லா தீய சக்திகளையும் நீக்கி, உன்னை புனிதமாக்குகிறார். நாதன் நடத்தால் நயனம் களிகூர – நாதம் என்பது தசநாதம்.


| 21 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அது எப்படி தோன்றும்? இடகலை பின்கலை என்று சொல்லப்பட்ட இந்த இரகசியத்தை ஆசான் தயவு கொண்டு புருவமத்தியில் செலுத்தி விட்டால் அங்கு நாத ஒலி கேட்கும்.
சிலம்பொ லியென்னக் கேட்கும டிமெத்த
சிக்குள்ள பாதை துடுக்கமடி வலம்புரி யச்சங்க மூது மடிமேலே
வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே. – மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண் 26. அப்போது தசநாதம் கேட்கும்.
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே என்றார். இந்த தசநாதம் தோன்றினால்தான் புருவ மத்தியில் ஓர் ஒளிச்சுடர் தோன்றும். அது நயனம் களிகூர – கண்கள் களிக்க. ஆனால் காண்பதற்கு அரிய பெருங்காட்சிகள் புருவமத்தியில் தோன்றும். அப்படி தோன்றினால், வேதங்களெல்லாம் போற்றக்கூடிய ஆற்றல் பெறுவார்கள். இதெல்லாம் நடைமுறை தத்துவம். இவையெல்லாம் கற்பனையல்ல.
கொள்ளுவார்கள் சிந்தையிற் குறிப்புணர்ந்த ஞானிகள் – தினமும் ஆசான் திருமூலதேவரையோ, ஆசான் அகத்தீசரையோ வணங்கினால், உன்னை அவர்கள் நினைப்பார்கள். நீ எதைக் கேட்கிறாய்? எதைக் கேட்க வேண்டும்? மரணமிலாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தைக் கேட்க வேண்டும். அதுதான் உண்மையான விண்ணப்பம்.
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி யேத்தி-அதைக் கேட்டால்தான் தருவார்கள். மற்றதை கேட்கலாம். ஆனால் அதற்கு சிறப்பறிவு இருக்க வேண்டும்.
நாங்கள் அன்பர்களுக்குச் சொல்வோம். தினமும் காலை நான்கு மணிக்கு எழுந்திருக்க வேண்டும். காலைக் கடன்களை முடிக்க வேண்டும். தீபத்தின் முன்னே ஆசான் அகத்தீசர் நாமத்தையோ, ஆசான் திருமூலதேவர் நாமத்தையோ, ஆசான் மாணிக்கவாசகர் நாமத்தையோ, ஆசான் இராமலிங்க சுவாமிகளையோ, ஆசான் பட்டினத்தாரையோ, ஆசான் தாயுமான
| 22 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
சுவாமிகளையோ இப்படி தொடர்ந்து எத்தனை மகான்களுடைய நாமத்தைச் சொல்லமுடியுமோ சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
உதயத்திற்கு பிறகு, கீழ்திசையாக இருந்து தீபம் ஏற்றி, வினாத்தண்டு நிமிர்ந்திருந்து அடியேன் வாசியோடு வாசியாக கலக்க வேண்டுமென்று கேட்டு, வாசியை மூக்குப் பக்கம் இழுத்து, ஸ்தம்பித்து நிறுத்த வேண்டும். அப்படி நிறுத்தும்போது அடிக்கடி மகான்கள் உள்ளே வந்து போவார்கள்.
இப்படி சில ஆண்டுகள் கடந்த பின், இயல்பாகவே உங்களுக்கு ஞானத்தைப் பற்றிய அல்லது வாசியைப் பற்றிய உணர்வை ஊட்டுவார்கள். இந்த தத்துவத்தை நீங்கள் நிச்சயமாக பின்பற்றி செயல்படுத்த முடியும்.
ஆனால் அதற்கு தடையாக இருப்பது என்ன? இந்த அறிவாற்றலுக்கு தடையாக இருப்பது என்ன? பல்வேறு ஜென்மத்தில் செய்த பாவங்கள்,
தடை எவைஎனில் அஞ்ஞான சந்தேக விபரீதங்கள் படர்செய்யும் இந்த மூன்றும் பலசன்மப் பழக்கத்தாலே உடன்உடன்வரும் வந்தாக்கால் உயர்ஞானம்கெடும்
இவற்றைத் திடமுடன் கெடுப்பாய் கேட்டல் சிந்தித்தல் தெளிதலாலே.
– கைவல்யநவநீதம். கைவல்யநவநீதம் ஓதிய தலைவன், இதை அடைய தடையாய் இருப்பது என்னவென்று சொன்னார்.
பல ஜென்மத்தில் செய்த பாவம்தான் இந்த ஜென்மத்தில் இந்த தத்துவத்தை அறியமுடியாத தடையாக இருக்கிறதென்று சொன்னார். பல ஜென்மத்தில் செய்த பாவம், இதை உணர முடியாத ஒரு அஞ்ஞானத்தை உண்டு பண்ணும் என்று சொன்னார்.
தடை எவை எனில் அஞ்ஞான சந்தேக விபரீதங்கள் – அஞ்ஞானம் இருப்பதால் சந்தேக விபரீதங்கள் தோன்றும். அந்த அஞ்ஞானத்தையும் சந்தேகத்தையும் அஞ்ஞானத்தால் ஏற்படுகின்ற சந்தேகத்தையும், விபரீதத்தையும் எப்படி நீக்க வேண்டுமென்று? கேட்டார்.
| 23 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அது தெரிய வேண்டுமல்லவா? திடமுடன் கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்றார். இதை யார் மூலமாக தெரிந்து கொள்ள வேண்டும்? எவன் மும்மலம் அற்றானோ, எவன் பந்தபாசம் அற்றானோ, எவன் மரணமில்லாப் பெருவாழ்வு பெற்றானோ, எவன் மனமாய்கை அற்றானோ அவனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும், கேட்டு தெளிவு பெற வேண்டும். அவனை கேட்டு தெளிவு பெற்றால்தான் வாசிநெறிப் பற்றி உனக்கு சொல்வார்கள், உணர்த்துவார்கள்.
சில அன்பர்கள் கேட்பார்கள், தெளிவார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த மாட்டார்கள். கேட்டு சிந்தித்தால் மட்டும் போதுமா? தெளிவு வந்து விடுமா? நடைமுறைப்படுத்த வேண்டுமல்லவா? நடைமுறைப்படுத்துவதற்கு ஆசான் தாயுமான சுவாமிகள் என்ன சொன்னார்கள்? கைவல்யநவநீதம் எழுதிய தலைவனை கேட்டு சிந்தித்து தெளிய வேண்டுமென்று சொன்னார். மகான் தாயுமான சுவாமிகள் கேட்டு சிந்தித்து தெளிந்தால் மட்டும் போதாதப்பா! நாட்டம் வேண்டுமென்றார். கேட்டு சிந்தித்தால் போதும் என்றார் சந்தேக விபரீதம் நீங்குவதற்கு, ஒரு மனிதனுக்கு சந்தேகம்தான் பிறவிக்குக் காரணம். பிறவிக்குக் காரணம் பல இருக்கலாம்.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்புஈனும் வித்து.
– திருக்குறள் – அவா அறுத்தல் – குறள் எண் 361. பொருள் அல்ல வற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு.
– திருக்குறள் – மெய் உணர்தல் – குறள் எண் 351. ஆனால் சந்தேக விபரீதங்கள் நீங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? பண்பட்ட மக்களோடு பழக வேண்டும். தோற்றம், ஒடுக்கம், இயக்கம் ஆகிய தத்துவத்தை உணர்ந்த, கசடற உணர்ந்தவர்களிடம் கேட்டு தெளிய வேண்டும்? அப்படி இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்? மகத்துவம் பொருந்திய ஞானிகள் பால் பற்று கொள்ள வேண்டும். அப்படியிருந்தால் உங்களுக்கு அந்த உண்மை தானே புலப்படும்.
| 24 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அப்போது ஆசான் தாயுமானசுவாமிகள், கேட்டலுடன், சிந்தித்தல், கேடிலா மெய்த்தெளிவால் வாட்டமறா வுற்பவநோய் மாறுமோ? – நாட்டமுற்று மெய்யான நிட்டையினை மேவினர்கட் கன்றோதான் பொய்யாம் பிறப்பிறப்புப் போம். – மகான் தாயுமான சுவாமிகள் – உடல் பொய்யுறவு
– கவி எண் 8. யாருக்கு பொய்யான பிறப்பு அற்றுப்போகும்? சத்தியமாக உறுதியாக நமக்கு பிறப்பிறப்பு உண்டு. கேட்டு, சிந்தித்து, நாட்டமுற்று, வாசியைக் கற்றவனுக்கு நிச்சயம் பிறப்பிறப்பு அற்றுப்போகும். அது பொய்யாகாது.
இந்த தத்துவத்தை சொன்னால் புலப்படுமோ? ஏட்டறிவால் புலப்படுமோ? ஏட்டறிவால் புலப்படாது. அதற்கு ஆசான் தயவு வேண்டும். அதற்கு விளக்கம் சொல்லும்போது, அவர் என்ன சொல்கிறார் என்றால், ஒரு மகான் சொல்கிறார்.
வித்தகமாக பலகலை பயின்றும் – எல்லா தத்துவத்தையும் பூரணமாக உணர்ந்தும்,
மேவதன் பயன்களை அறிந்தும் – எல்லா தத்துவங்களை உணர்ந்தும், அதை பின்பற்றி செல்கின்ற ஆற்றலைப் பெற்ற போதிலும்,
தத்துவம் முழுவதும் கசடற உணர்ந்தும் – தத்துவம் முழுவதும் கசடற என்றால், இருபது வயதில் ஆரம்பித்தால் எண்பது வயது ஆகும். அறுபது ஆண்டுகள் ஆகும், தத்துவங்களை முழுவதுமாக கற்க, கற்று முடிவதற்கு,
தத்துவம் முழுதும் கசடற உணர்ந்தும்
தன்னிலை அறிதற்கு அரிதாம் சுத்த மெய்ஞான தேசிகன் மகிழ்ந்தே
சொல்லாமல் சொல்லுமொரு மொழிதான். அது சொல்லாமல் சொல்வது என்கிறார். பேசினால் நிறுத்து, பேசாமல் நிறுத்து என்பார். பேசாதிருப்பது மௌனம்.
முத்திரை மோன நிலையினாலன்றி முத்தி நிலை கிடையாது
| 25 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அப்ப நீங்கள் என்ன செய்ய வேண்டும்? எல்லா நூலையும் படித்தால் மட்டும் போதுமா? புலப்படாது. தத்துவம் முழுதும் கசடற உணர்ந்தால் மட்டும் போதுமா?
முத்திரை மோன நிலையினாலன்றி முத்தி நிலை கிடையாது என்று சொன்னார். மோனம் என்பது என்ன? வாய்மூடி இருப்பதோ? ஆடு மாடு கூடத்தான் மௌனமாக இருக்கு. ஞானியாகி விடுமா?
இன்னும் சிலபேர்கள் பொருளறியாத மூடர்கள் மௌனமாக இருப்பார்கள். ஞானியாகி விடுவானா? அல்ல!
மௌனமாக இருந்தால் ஞானியாகி விடுவானோ? அல்ல! மோனம் என்பது என்ன? அதை ஆசான் சுட்டிக்காட்ட வேண்டும்.
செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இரு சொல்அற என்றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.
– கந்தரநுபூதி – கவி எண் 12. செம்மான் மகளைத் திருடும் திருடன் – தலைவன் யார்? சித்தனுக்கெல்லாம் தலைவன், அகத்தீசருக்குத் தலைவன் ஆசான் சுப்ரமணியர்.
ஆசான் இந்த மோன நிலையை சுட்டிக் காட்ட வேண்டும். அந்த சும்மா இருக்கின்ற இரகசியத்தை சொல்ல வேண்டும். சொன்னால்தானே உங்களுக்குத் தெரியும்.
இல்லையென்றால் எப்படித் தெரியும்? அதை எப்படி உணர்த்துவார்கள்? உணர்வோடும் உணர்ச்சியோடும் இருந்து உணர்த்துவார்கள். கவனிக்க வேண்டும், சிந்தையிலிருந்து உணர்த்துவார்கள்.
ஆமையைப் பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள், பார்த்திருப்பீர்கள். அதன் இயல்பென்ன? அது எப்படி இனப்பெருக்கம் செய்கின்றதென்று தெரியுமா? ஒரு சில அன்பர்கள் அறிந்திருக்கலாம்.
ஆமை கரையில் ஏறி முட்டை வைக்கும். எதற்கு அதை சுட்டிக்காட்டினார் ஆசான் சிவவாக்கியர்?
| 26 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
கடலிலே திரியுமாமை கரையிலேறி முட்டையிட்டுக் கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல் மடலுளே யிருக்குமெங்கள் மணியரங்க சோதியை உடலுளே நினைந்துநல்ல வுண்மையான துண்மையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 99. நீ உள்ளம் உருக ஆசானை நினைத்தால் அவன் உன்னை நினைப்பான். அப்படி நினைத்தால் மும்மலத்தை வெல்லுகின்ற அறிவாற்றலும், அந்த சூட்சும தேகத்தை தட்டி எழுப்புகின்ற பரிபக்குவமும் உனக்கு கிடைக்கும்.
கவனிக்க வேண்டும் நீங்கள்! ஆமையானது கரையிலே முட்டை வைத்துவிட்டு, முந்நூறு நானூறு மைல் சென்று, தான் முட்டை வைத்த இடத்தை குறிப்பாக நினைத்தால் அது குஞ்சாகும். இது சொல்கின்ற மார்க்கமென்ன? ஏன் இதை சொல்கிறார்கள்? நினைக்க வேண்டும். அப்போதுதானே உங்களுக்கு அந்த அறிவாற்றல் கிடைக்கும். ஆமை நினைத்தால் குஞ்சாகும். அதுபோல,
மடலுளே யிருக்குமெங்கள் மணியரங்க சோதியை உடலுளே நினைந்துநல்ல வுண்மையான துண்மையே தலைவனை உள்ளம் உருக நினைத்தால், ஆமை நினைத்தால் குஞ்சாவது போல், ஆசான் அகத்தீசரை நினைத்தால் ஞானம் உனக்கு, தானே வருமென்று சொன்னார். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்போ ஆமை இனப்பெருக்கத்திற்கு கடலிலே இருந்து, கரையில் முட்டை வைத்துவிட்டு, மீண்டும் கடலில் பல மைல் தூரம் சென்றபோதிலும், முந்நூறு நானூறு மைல் சென்ற போதிலும், தான் இட்ட முட்டையை குறிப்பாக நினைத்தால் குஞ்சாவது போல, ஆசான் அகத்தீசரையோ, மகான் திருமூலதேவரையோ, மகான் மாணிக்கவாசகரையோ நினைத்தால், அந்த மோனநிலை என்று சொல்லப்பட்ட இரகசியத்தை ஆசான் உனக்கு உணர்த்துவார்.
அந்த ஆற்றல் கிடைக்குமென்பது இதன் சாரம். இதில் ஆமையை உவமைக்கு சொன்னார். ஆமை நினைத்தால் முட்டை குஞ்சாவது போல், ஆசான் அகத்தீசரை கூர்மையாக நினைத்தால் நமக்கு ஆற்றல் கிடைக்குமென்று சொன்னார்.
| 27 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
இதே கருத்தை மகான் சிவவாக்கியர் மறுபடி சொல்கிறார். நீங்கள் எல்லோரும் பார்த்திருக்கலாம். குளவி தன் இனப்பெருக்கத்திற்கு என்ன செய்யும்? ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி போன்ற மழைக்காலங்களில் உள்ள ஈர மண்ணை கொண்டு வந்து, வீட்டிற்குள்ளே கூடு கட்டும். கூடு கட்டி வெளியிலே சென்று தனக்கு விருப்பமான புழுக்களைக் கொண்டு வரும். அப்படிக் கொண்டு வந்து அந்த கூட்டுக்குள்ளே திணிக்கும். அப்படி திணித்து என்ன செய்யும்? ஓம் என்ற சப்தம் கொடுக்கும். ஓம் என்று தொடர்ந்து சப்தம் கொடுத்தால், அந்த புழு குளவியாகும்.
இனப்பெருக்கத்திற்காக அந்த குளவி என்ன செய்யும்? ஈரமண்ணைக் கொண்டு வந்து, வீட்டிற்குள் கூடு கட்டி தனக்கு விருப்பமான புழுவைக் கொண்டு வந்து, அந்த கூட்டிலே திணித்து தன் இனமாக வேண்டும், தன் இனமாக வேண்டும் என்று தொடர்ந்து நினைத்து அந்த புழுவை குளவியாக்கிவிடும்.
இதை ஏன் தலைவன் சிவவாக்கியர் சொல்கிறார்?
குளவிக்கு எத்தனை அறிவு? செடிகொடி வகைகளுக்கெல்லாம், தாவர வர்க்கத்திற்கு ஓரறிவு, ஸ்பரிச உணர்வு மட்டும் உண்டு.
புழு, நத்தை, சிப்பி இது போன்ற உயிர்களுக்கெல்லாம் ஈரறிவு. ஸ்பரிச உணர்வும், நாக்கால் சுவை உணர்கின்ற அறிவு, முத்து, சிப்பி, நத்தைகளுக்கு உண்டு.
எறும்பு, செல் போன்ற உயிர்களுக்கு மூவறிவு. ஸ்பரிச உணர்வு, நாக்கால் சுவை உணர்கின்ற அறிவு, கந்தம் என்கின்ற மூக்கால் வாசனை அறிகின்ற உணர்வு.
ஆனால் குளவிக்கு நான்கறிவு. ஸ்பரிச உணர்வு, சுவை உணர்வு, கந்த அறிவு, பார்வை உணர்வு. நான்கு அறிவுள்ளது குளவி.
தான் கொண்டு வந்த புழுவிற்கு ஈரறிவு. புழுவுக்கு ஈரறிவுதான், ஈரறிவுள்ள புழுவை கூட்டிற்குள்ளே திணித்து, இது தன் இனமாக வேண்டும், இது தன் இனமாக வேண்டுமென்று நினைத்தால் அது குளவியாகும். அந்த புழு குளவியாகும்.
ஆமை நினைத்தால் குஞ்சாவது போல, குளவி தன் இனப்பெருக்கத்திற்காக ஈரறிவுள்ள ஒரு புழுவைக் கொண்டு வந்து,
| 28 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஒரு கூண்டிலே திணித்து, இது தன் இனமாக வேண்டும், தன் இனமாக வேண்டுமென்று தொடர்ந்து நினைத்தால், குளவியாகும். இதைத் தலைவன் ஏன் சொல்கிறான் என்றால் எதையும் குறிப்பாக உற்றுணர்ந்து நினைத்தால் அது உனக்கு சித்திக்கும் என்பது இதன் சாரம்.
பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன் நித்தமும் நினைத்திட நினைந்தவண்ண மாயிடும் பச்சைமண் ணிடிந்துபோய் பரந்ததும்பி யாயிடும் பித்தர்கா ளறிந்துகொள்க பிரானிருந்த கோலமே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 107. குளவி தன் இனப்பெருக்கத்திற்காக புழுவை தன் இனமாக்குவது போல, நீ என்ன செய்ய வேண்டும்? குறிப்பாக தினம் ஞானிகளை நினைக்க வேண்டும்.
நித்தமும் நினைத்திட நினைந்தவண்ண மாயிடும் – ஒரு மனிதன் ஞானியாவதற்கு என்ன செய்ய வேண்டும்? தொடர்ந்து அதையே சிந்திக்க வேண்டும். அது கைக்கூடினாலும், கூடாவிட்டாலும் தொடர்ந்து சிந்தித்தால் சித்தியாகும் என்பது சாரம்.
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்; மற்று அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
– திருக்குறள் – ஊக்கம் உடைமை – குறள் எண் 596. அப்போது குளவி இனப்பெருக்கத்திற்கு ஒரு புழுவை தன் இனமாக்குகின்ற ஆற்றல் குளவிக்கு உண்டு. நான்கறிவுள்ள அந்த குளவிக்கு இனப்பெருக்கத்திற்கு புழுவை குளவியாக ஆக்குவது போல, சூட்சும தேகத்தை நாம் தட்டி எழுப்ப வேண்டும்.
அதற்கு ஆசான் அகத்தீசர்பால் அன்பு கொள்ள வேண்டும். ஆசான் இராமலிங்கசுவாமிகள்பால் அன்பு கொள்ள வேண்டும். நீ எதைக் குறித்து நினைக்கின்றாயோ? அது சித்திக்கும். இந்தக் கருத்தைச் சொல்லும்போது உங்களுக்கு அதற்கு மனம் வேண்டுமல்லவா? இந்த கருத்தைச் சொல்கிறோம்.
மகான்கள் அத்தனை பேரும் ஏன் இதை சொல்கிறார்கள். உங்களுக்கு மனம் வேண்டுமல்லவா? அதற்கு மகான் கொங்கணமகரிஷி சொல்கிறார்.
| 29 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
மனமு மதியு மில்லாவி டில்வழி
மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள் மனமு றுதியுங் வைக்கவே ணும்பின்னும்
வாலை கிருபையுண் டாகவேணும். – மகான் கொங்கணர் – வாலைக்கும்மி – கவி எண் 21. மனம் வேண்டும். என்ன மனம் வேண்டும்? பிறந்தால் அவன் மோட்சகதி தேட வேண்டும். மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய மார்க்கத்தை அடைவதற்கு அவனுக்கு மனம் வேண்டும். மனம் இருந்தால் போதாது, மதியும் வேண்டுமென்று சொல்லி விட்டார். மதி வேண்டுமல்லவா? ஞானத்திற்குரிய அறிவு இருந்தால்தானே இதை சாதிக்க முடியும்? மனம் இருக்க வேண்டும், உறுதியும் இருக்க வேண்டும், எப்படிப்பட்ட மன உறுதி இருக்க வேண்டும்? முன் வைத்த காலை பின் வைக்காது இருக்கின்ற தீரம் இருக்க வேண்டும். அது ஆசான் தயவு இருந்தால் நிச்சயமாகக் கைக்கூடும். ஆசான் தயவு இருந்தால் உங்களுக்கு இயல்பாகவே இந்த மூல வாசியைக் கட்டுகின்ற ஆற்றல் கிடைக்குமென்று சொன்னார்.
கிட்டுமோ ஞானயோகம் கிடைக்குமோ குருவின் பாதம் கட்டுமோ மூல வாசி காணுமோ கயிலை வீடு எட்டுமோ நாக லிங்கம் ஏற்றுமோ தீப சோதி தட்டுமோ பளிங்குமேடை தனையறி யார்க்கு நெஞ்சே. – மகான் கணபதிதாசர் – நெஞ்சறி விளக்கம் – கவி எண் 21.
கிட்டுமோ ஞானயோகம்? ஞானயோகம் பெற்றால்தானே மரணமிலாப் பெருவாழ்வு பெறமுடியும்.
கிடைக்குமோ குருவின் பாதம்? குருவின் பாதம் பற்றாமல் உங்களுக்கு மலமாயை அற்றுப் போகாது. இதே கருத்தைச் சொல்வார் மகான் பட்டினத்தார்.
அற்புதமா யிந்தவுட லாவி யடங்குமுன்னே சற்குருவைப் போற்றித் தவம்பெற்று வாழாமல் உற்பத்தி செம்பொன் உடைமைபெரு வாழ்வைநம்பிச் சர்ப்பத்தின் வாயிற் றவளைபோ லானேனே. – மகான் பட்டினத்தார் – நெஞ்சொடு புலம்பல் – கவி எண் 12.
| 30 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அற்புதமா இந்தஉடல் – யாருக்கு இந்த உடல் அற்புதமானது. யார் இந்த உடம்பை பற்றி ஆராய்ந்தாரோ? அவருக்கு இந்த உடல் அற்புதமான உடல் சூட்சுமதேகத்தைத் தட்டி எழுப்புகின்றவர்களுக்குத்தான், இந்த உடம்பு அற்புதமான உடம்பு ஆகும். இல்லையென்றால் தூலதேகம் நிச்சயமாக வீழ்ந்து விடும்.
ஏன் சற்குருவைப் போற்ற வேண்டும்? சற்குருவைப் போற்றினால்தான் இந்த உடம்பு சித்தி பெறும்.
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம லாட்டமென் றேயிரு பொல்லா வுடலை அடர்ந்தசந்தைக் கூட்டமென்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர் ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே.
– மகான் பட்டினத்தார் – பொது – கவி எண் 21. பந்தபாசம் அற்றவனும், கருணையே வடிவானவனும், யார் எதைக் கேட்டாலும் கொடுக்கும் தகைமை உள்ளவனும், நினைத்தபோதெல்லாம் நினைத்தபடி அருள் செய்யும் ஆற்றல் பெற்றவனுமாகிய சற்குரு பாதத்தைப் பற்ற வேண்டும்.
அதை விட்டுவிட்டு உற்பத்தி செம்பொன் உடைமை பெரு வாழ்வை நம்பி, அநித்தியமான பொருளை நித்தியமென்று கருதுகின்ற மயக்க உணர்வு இருந்தால் எப்படி நாம் சற்குரு பாதத்தைப் போற்ற முடியும்?
நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும் புல்லறி வாண்மை கடை.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 331. இந்த உடம்பை அற்புதம் என்று சொன்னார். யாருக்கு அற்புதம் என்றால், யார் சற்குருவைப் போற்றுகின்றானோ அவனுக்கு இந்த உடம்பு அற்புதமாகும். அற்புதமான உடம்பு என்பது மும்மலம் அற்றுப்போனால்தான் அற்புதமான உடம்பாக இருக்க முடியும். அதற்கு சற்குருவைப் போற்ற வேண்டும். சற்குருவைப் போற்றினால் அநித்தியம் நித்தியம் எது? என்று உணர்கின்ற பரிபக்குவமும் அதற்குரிய அறிவும் கிடைக்கும். இல்லையென்றால் சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆனேனே என்றார்.


| 31 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல.
– திருக்குறள் – நிலையாமை – குறள் எண் 337. ஆசான் திருவள்ளுவர், வாழ்வது என்பது உண்மைப்பொருளை உணர்கின்ற பரிபக்குவ அறிவைக் கொண்டு வாழ்வதுதான் வாழ்வு என்றார்.
அப்படி இல்லையென்றால், அஞ்ஞானமுள்ள மக்கள் பொருளல்லவற்றை, நிலையில்லாத ஒன்றை நிலையென்று உணர்ந்து, அதைப் பின்பற்றுவார்கள். அப்படி பின்பற்றுகின்ற மக்கள் அநித்தியமானதை நித்தியமென்று மயங்குகின்ற மயக்கத்தால், பல கோடி கருதுவார்கள். ஆக நாம் என்ன செய்ய வேண்டும்?
சர்ப்பத்தின் வாயில் தவளை போல் ஆகாமல், சற்குருவை போற்ற வேண்டும். நாங்கள் வகுத்துக் காட்டுகின்ற பாதை ஆசான் அகத்தீசரையோ, மகான் திருமூலதேவரையோ வழிபாடு செய்தால் மட்டும் போதாது. வாசி நெறி அறிய வேண்டும். வாசிநெறி பற்றி உங்களுக்கு பின்னால் சொல்லப் போகிறோம். அதை எப்படி செய்ய வேண்டும்? அதை எப்படி எப்படி செய்தால் வாசி சித்திக்கும்? அப்ப இந்த எட்டு இரண்டு என்பது என்ன?
எட்டு மிரண்டையும் ஓர்ந்து – மறை
எல்லா முனக்குள்ளே ஏகமாய்த் – தேர்ந்து வெட்ட வெளியினைச் சார்ந்து – ஆனந்த வெள்ளத்தின் மூழ்கி மிகுகளி கூர்ந்து.
– மகான் கடுவெளிச்சித்தர். அப்ப அகார உகாரமாகிய இரகசியத்தை அறிகின்ற மார்க்கத்தை ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் போதிப்பது மட்டுமல்லாமல், பூஜாவிதியையும் சேர்த்து சொல்லி வருகின்றது.
நாங்கள் உண்மையான வாசிப்பழக்கத்தைச் சொல்லி வருகின்றோம்.
சிலர் பொதுமக்களிடையே குண்டலினியை ஏற்றுகிறேன் என்று சொல்லி என்ன செய்கின்றார்கள்? அப்படியே வினாத்தண்டோடு கையை கொண்டு தடவிகொண்டே வந்து புருவ மத்திக்கு வந்ததும், குண்டலினி சக்தி உச்சிக்கு வந்து விட்டது. இனி
| 32 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
இக வாழ்க்கையிலிருந்து பர வாழ்க்கைக்கு வந்து விட்டாய்! என்ற ஒரு வகையான பிரம்மையை உண்டாக்குகிறார்கள். அதை தப்பு என்று நாங்கள் சொல்கின்றோம்.
அது ஏன் தப்பு என்று சொல்கின்றோமென்றால், “ஐயே மெத்த கடினம்” என்று சொன்ன இந்த தத்துவத்தை, அது பல ஆண்டுகள் பாடுபட்டால்தான் யோகாப்பியாசம் என்ற உண்மை ஒருவருக்குப் புலப்படும். அதை விட்டு விட்டு, வினாத்தண்டை தடவிக்கொண்டு வந்து புருவ மத்தியில் செலுத்தி விட்டதும், குண்டலினி சக்தி உச்சிக்கு வந்து விட்டதென்று சொல்லி ஒரு பிரம்மையை உண்டாக்கி, அவர் தொடர்ந்து பூஜாவிதியை மேற்கொண்டு முன்னேறுவதற்கு தடையாய் இருக்கின்ற இந்த தத்துவத்தை குற்றம் என்று சொல்லி, உண்மையான யோக நெறியை நாங்கள் வகுத்துக் காட்டி வருகின்றோம். எனவே அகார உகாரம் என்பது என்ன?
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித் துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம் உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட் கிறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.
– திருமந்திரம் – கேசரி யோகம் – கவி எண் 801. அகார உகாரம் என்பது, வினாத்தண்டு நிமிர்ந்திருந்து, வயிற்றில் பழைய உணவில்லாமல் மலச்சிக்கல் இல்லாமல், பத்மாசனம் இட்டு, வாசியை ஸ்தம்பித்து நிறுத்தி, கண்டஸ்தானமாகிய சிகார ஸ்தானத்தில் நிறுத்தி, காற்றை உள்ளே இரேசித்தால், இரேசிக்கும்போது இரு கலையும் வரும்.
அப்படி இருகலையும் வருகின்ற அந்த சுவாசத்தை என்ன செய்வார்கள்? உள்காற்று இருக்கும்போது, வெளிக்காற்றை இழுக்கும்போது, உள்காற்றும் வெளிக்காற்றும் இரண்டும் சேர்த்து புருவ மத்தியில் ஒடுங்குவதற்கு அகார உகாரம் சேர்ந்ததென்று பொருள். இதற்கு பயிற்சி கொடுப்போம்.
தினமும் ஆசான் திருவடியைப் பற்றி பூஜை செய்ய வேண்டும். அந்த திருவடியும் ஆசான் அகத்தீசர் திருவடியாக இருக்க வேண்டும். மகான் மாணிக்கவாசகர் திருவடியாக இருக்க வேண்டுமென்று சொல்வோம். இப்படி சொல்லி இந்த தத்துவத்தை உங்களுக்கு
| 33 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஞானிகள் உணர்த்த வேண்டுமென்று சொல்வோம். ஞானிகள் உணர்த்தினால்தான் அகார உகார தத்துவங்களை உணர முடியும்.
அப்படிப்பட்ட பிரம்மையை உண்டுபண்ண மாட்டோம். இந்த பிரம்மையை நீங்கள் உணர வேண்டுமென்று சொல்வோம்.
எட்டிரண்டு என்பது சில மக்கள் சொல்லலாம். அதை ஆசான்தான் வகுத்துக் காட்ட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், நீங்கள் வாசியை பின்பற்ற வேண்டும். நித்திய சரத்தை அறிய வேண்டுமென்று சொல்கிறோம். இந்த சுவாசத்தை மாற்றுகின்ற முறையை உங்களுக்கு சற்று விளக்கமாக சொல்லிவிட்டு இன்றைய உரையை இதோடு முடிக்கப் போகின்றோம்.
யோகிகள் காலையில் எழுந்ததும், முறைப்படி எல்லா மகான்களையும் வணங்கி, சரத்தை சற்று கவனிப்பார்கள். சரம் பார்ப்பவன் பரம் பார்ப்பான் என்று உணர்த்தப்படும். சரம் பார்ப்பவர்கள்தான் பரம் பார்க்க முடியும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சூரியகலை இயங்க வேண்டும். திங்கட்கிழமை காலையில் சந்திரகலை இயங்க வேண்டும். ஏன் இந்த வாசியை கவனிக்க வேண்டுமென்றால், வாசிப்பழக்கம் அறிய வேணும் என்பதற்காக விளக்கம் சொல்கிறோம்.
திங்கட்கிழமை காலையிலே சந்திரகலை இயங்கினால்தான், இந்த வாத, பித்த, சிலேத்துமம் என்று சொல்லப்பட்ட நாடிகள் உங்களுக்கு செம்மையாக இருக்கும். வாத, பித்த, சிலேத்தும நாடிகள் செம்மைப்படாவிட்டால், உங்களுக்கு ஞானம் சித்திக்காது, வாசியின் இயல்பு தெரியாது.
அப்போது என்ன செய்வார்கள் யோகிகள்? ஞாயிற்றுக்கிழமை காலையில் மூக்கில் கை வைத்துப் பார்க்கும்போது, உதயத்திலே சூரியகலை இயங்க வேண்டும். சூரிய கலை இயங்காவிட்டால் என்ன செய்வார்கள் என்றால், இப்படி வலது பக்கம் கால்களை மடக்கி வைத்து உட்காருவார்கள். வலது குதிகால் நரம்பை சற்று லேசாகப் பற்றுவார்கள்.
அப்படி பற்றி அழுத்தினால், சுவாசமானது ஞாயிற்றுக்கிழமை சூரிய கலையில் இயங்கும். அப்படி இயங்காவிட்டால் நோய் சூழுமென்பது சர நூல் சட்டம்.
| 34 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
திங்கட்கிழமை காலை மூக்கில் கை வைத்து பார்க்கும்போது சந்திரகலை இயங்காவிட்டால் இப்படி மாற்றி இடது பக்கம் கால்களை மடித்து உட்காருவார்கள். உட்கார்ந்து, இடது குதிகால் நரம்பை சற்று அழுத்துவார்கள். அப்படி அழுத்தினால் சுவாசம் மாறும்.
இதை நித்தம் பின்பற்ற வேண்டும். நித்தம் பின்பற்றினால்தான் உங்களுக்கு வாத, பித்த, சிலேத்துமம் என்பது செம்மையாக நடக்கும். வாத, பித்த, சிலேத்துமம் செம்மையாக நடந்தால்தான் உங்களுக்கு நோயற்ற வாழ்வு அமையும்.
செவ்வாய்கிழமை காலையில் மூக்கில் கை வைக்கும்போது சூரியகலை இயங்க வேண்டும். அப்படி சூரியகலை இயங்காவிட்டால், இதேபோல் இந்த வலது காலை வைத்து வலது குதிகால் நரம்பை அழுத்தினால், சுவாசம் மாறும். அதேபோல் புதன்கிழமை சுந்திரகலை இயங்க வேண்டும்.
வியாழக்கிழமை வளர்பிறையென்றால் சூரியகலை, தேய்பிறை என்றால் சந்திர கலை இயங்க வேண்டும். வெள்ளிக்கிழமை சந்திரகலை இயங்க வேண்டும். சனிக்கிழமை சூரியகலை இயங்கவேண்டும். இதோடு தொடர்பு கொள்ள வேண்டும். இது வாசிப்பழக்கம்.
வாசிப்பழக்கத்தை முழுதும் கற்றால்தான் இந்த இடகலையையும், பிங்கலையையும் ஒன்றுபடுத்த முடியும். அதற்குத்தான் வாசிப்பழக்கம் சொல்கிறோம்.
இன்னும் சரநூல் சட்டப்படி, இந்த சுவாசத்தை அறிந்த மக்கள் என்ன செய்வார்கள்? யாரேனும் ஒரு பெரிய அதிகாரியை சந்திக்கும்போதோ அல்லது ஒரு மத்தியஸ்தம் தீர்க்கும்போதோ, சுவாசத்தை வலது பக்கம் இயக்குவார்கள். அப்போ அதிகாரிகளை சந்திக்கும்போது சூரியகலை இயங்கும்போது, அதிகாரிகள் நமக்கு வசப்படுவார்கள்.
மேல்தட்டு மக்களை சந்திக்கும்போதோ அல்லது ஒரு உபதேசம் கேட்கவோ அல்லது ஒரு சண்டை சச்சரவில் ஈடுபட்டு சித்தி பெறச்செய்வதோ, சூரியகலை இயங்கும்போது, இந்த காரியத்தை மேற்கொள்ள வேண்டும்.
| 35 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
சந்திரகலை இயங்கும்போது என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும்? மங்கலமான காரியங்கள், உபதேசம் கேட்டல், சமாதானம் செய்தல், முகூர்த்தம் செய்தல் இதுபோன்ற காரியங்களையெல்லாம் சந்திரகலை இயங்கும்போது செய்ய வேண்டுமென்பது சாரம்.
சூரியகலை, சந்திரகலை இதையெல்லாம் பழகுவதற்கு உங்களுக்குப் பயிற்சி வேண்டும். இந்த வாசியை நீங்கள் சாதாரண விசயமென்று நினைக்க வேண்டாம். இதையே மகான் திருமூலதேவர் சொல்வார்,
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங் காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறியது வாமே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 571. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் – இந்த சுவாசம் இடகலை, பிங்கலையைப் பற்றி தெரிந்த மக்கள்தான், வாசியை என்ன செய்வார்கள்? இப்படி பத்மாசனம் இடுவார்கள்.
பத்மாசனம் இட்டு, வினாத்தண்டு நிமிர்ந்திருக்க மூக்காலே வாசியை இழுத்து, ஸ்தம்பித்தால் இருபக்கமும் சுவாசம் இயங்கும்.
அப்படி இருபக்கம் இயங்குகின்ற அந்த சுவாசக் காற்றை மகான்கள் தயவு கொண்டு, அப்படியே செலுத்தி புருவ மத்தியில் சேர்ப்பார்கள். புருவமத்தியில் சேர்த்துவிட்டால், அது என்ன செய்யும்?
ஆண்டு பன்னிரெண்டுக்குப் பிறகு, புருவமத்தியில் செலுத்திய அந்த காற்று வினாத்தண்டு வழியே சென்று உந்தி கமலத்தில் வந்து தங்கும்.
அப்படி தங்கினால் தசநாதம் தோன்றும். அப்படி அங்கு தங்குகின்ற காற்றுதான் குண்டலினி சக்தி என்று சொல்வார்கள்.
அது ஆண்டு பன்னிரெண்டுக்குப் பிறகு என்ன செய்யும்? பைய பைய உடம்பிலிருக்கும் தீய சக்திகளையெல்லாம் நீக்கி, உள்ளெழும் மூலக்கனலை எழுப்பி, அமிழ்தபானத்தை சுரக்கச் செய்யும்.
| 36 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள் மச்சுக்கு மேலேறி வானுதிரத் தானெடுத்துக் கச்சை வடம்புரியக் காயலூர்ப் பாதையிலே வச்சு மறந்தல்லோ என்கண்ணம்மா
வகைமோச மானேண்டி. – மகான் அழுகண்ணிச்சித்தர் – கவி எண் 14. ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் – இருகலை சுவாசம் வரும்போது, அந்த சுவாசத்தை புருவ மத்தியில் செலுத்தி, அந்த காற்று உந்தி கமலத்தில் தங்கினால், அது என்ன செய்யும்? கபத்தை அறுக்கும்.
வாய்க்க வாய்க்க வழலையும் அற்றது சாய்க்கச் சாய்க்க சரிந்ததென் கோழையும் தேய்க்கத் தேய்க்க ஜெனித்திடும் சிலேத்துமம்
தோய்க்கத் தோய்க்க சுழிமுனை காணுமே. அப்போது என்ன செய்வார்கள். கூற்றுவனை உதைக்கின்ற ஆற்றல் வாசி நெறி கற்றால்தான் முடியும். தினமும் சரம் பார்ப்பதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் தெளியக் குருவின் திருவருள் பெற்றால் வளியினும் வேட்டு வளியனு மாமே.
– திருமந்திரம் – பிராணாயாமம் – கவி எண் 569. இந்த மூச்சுக்காற்றை முறையுடன் வாங்கி வயிற்றில் அடக்க வேண்டும். வயிற்றில் அடக்கினால் என்ன ஆகும்? இந்த சுவாசத்தை வயிற்றில் அடக்கினால் நோய் வரும். அதை எங்கே அடக்க வேண்டும்? புருவ மத்தியில் ஒடுங்கி உந்தி கமலத்தில் அடக்க வேண்டும். வளி என்றால் காற்று.
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம் முதுமைப் பருவம் வந்தாலும், இளமைப் பருவம் வரும். இது சாதாரண அறிவு அல்ல! மேம்பட்ட ஒரு காரியம் இது! ஆசான் தயவு வேண்டும்.
| 37 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில் பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால் இந்த தத்துவத்தை உண்மையாக நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், ஆசான் தயவு வேண்டும். எந்த ஆசான்? இந்த வாசியை முழுதுமாக கற்றுணர்ந்த ஆசான் பாதத்தைப் பற்றினால், அந்த உணர்வு உனக்கு கிடைக்கும்.
உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரேல் விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும் அருட்டரித்த நாதர்பாத மம்மைபாத முண்மையே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 5. அப்ப ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கின்ற இந்த காற்றை யோகிகள் என்ன செய்கிறார்கள்? உருத்தரித்த நாடியில் ஒடுங்க வைக்கிறார்கள்.
உருத்தரித்த நாடி என்பது என்ன? எங்கே சுக்கிலம் உற்பத்தியாகின்றதோ, எங்கே சுக்கிலத்தை வெளியே தள்ளுகின்றதோ, அந்த இடத்திலே காற்று தங்க வேண்டும்.
உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரேல் எப்போது கபாலம் ஏற்ற வேண்டும்? யோகிகள் ஆண்டு பன்னிரெண்டுக்குப் பிறகு என்ன செய்வார்கள்? வினாத்தண்டு வழியாக அமிழ்தபானம் சுரந்து, உச்சியில் தங்கியிருக்கும். அப்போது லேசாக கசியும்.
யோகிகள் என்ன செய்வார்கள்? மீண்டும் காற்றை மூக்குப் பக்கம் இழுத்து, புருவ மத்தியில் ஒடுக்கி இரேசிப்பார்கள். இரேசித்து கபாலத்தில் ஏற்றும்போது, அமிழ்தபானம் சொட்டும். அந்த அமிழ்தபானம்தான் மரணமிலாப் பெருவாழ்விற்குரிய மார்க்கத்தைத் தரும்.
விருத்தரும் பாலராவர் – முதுமைப் பருவம் வந்தவன் பாலனாவான். இளமைப்பருவம் வந்து விடும். உடம்பு தங்கம் போன்று ஆகும்.
| 38 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாத முண்மையே – சிவசக்தியின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் என்று சொல்கிறார். எதற்கு இந்த சத்தியம் செய்கின்றார் என்றால், இந்த மூச்சுக்காற்றில் என்ன அவ்வளவு பெரிய இரகசியம் உள்ளது? அப்படி என்ன மூச்சுக்காற்றில் பெருமை உள்ளது?
யோகிகளுக்கு இந்த காற்று ஒரு நொடிப்பொழுதில் சித்திக்கும். சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல் சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 14. சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே – நான்கு வேதத்தில் கரை கண்டால் மட்டும் போதுமா? ஆசான் சிவவாக்கியர் காலத்திலே, ஒரு தத்துவ மேதை இருந்தார். அவர் நான்கு வேதத்தில் கரை கண்டவர், அவர் ராஜகுரு.
ஆசான் சிவவாக்கியர் ஒரு இடத்திற்கு போயிருக்கும்போது, அந்த இடத்தில் பந்தல் போட்டிருந்தது. அங்கே அரசனும், அமைச்சர்களும், மற்ற முக்கியஸ்தர்களும் வந்து போனார்கள்.
என்னப்பா, இந்த வீட்டில் விசேடம்? என்று கேட்டார் ஆசான் சிவவாக்கியர், “உங்களுக்குத் தெரியாதா சாமி? இராஜகுருவிற்கு உடல்நிலை சரியில்லை. அவர் நான்கு வேதத்திலும் கரை கண்டவர். ஆனால் உடல்நிலை சரியில்லை” என்று சொன்னார்.
“ஏனப்பா? நான்கு வேதத்தையும் கற்றவருக்கு ஏன் உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது?” என்று ஆசான் சிவவாக்கியர் மனதில் நினைத்தார், வெளியே சொல்லவில்லை.
அடுத்து ராஜகுருவிற்கு உடல்நிலை சரியாக வேண்டுமென்று யாகம் வளர்க்கிறார்கள், சில இடத்தில் பஜனை செய்கின்றார்கள், சிலர் வழிபாடு செய்கின்றார்கள். ஆனால் என்ன ஆனது? இரண்டு அல்லது மூன்று நாள்தான் அந்த ஜீவன் இருந்தது. ஒரு சத்தம் கேட்டதாம். கிர்முர் என்று சத்தம் கேட்டதாம். ஆசான் சிவவாக்கியர் திண்ணையில் இருந்தார். ஏண்டா! நான்கு வேதங்களையும்
| 39 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
கற்றவனுக்கு ஏன் இப்படி கிர்மூர் என்று இழுக்க வேண்டும். நான்கு வேதத்தைக் கற்றால் மரணமிலாப் பெருவாழ்வல்லவோ கிட்ட வேண்டும்? அவர் விளக்கம் சொல்லும்போது, சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே – நான்கு வேதங்களிலும் கரை கண்டாலும் முடியாதப்பா! மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வேண்டும். ஒரு நொடிப்பொழுது இந்த வாசியை நீ கட்டாவிட்டால், நான்கு வேதத்தைக் கற்றும் பயனில்லை என்றார்.
வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ – கிர்முர்ரென்று யாருக்கு இழுக்கும்? படிக்கதெரியாத கைநாட்டிற்கும் இழுக்கிறது, வேதம் படித்த இவனுக்கும் இழுக்கிறது. படிக்கத் தெரியாத கைநாட்டிற்கும் அவனுடைய இறுதி காலத்திலே, கிர்முர்ரென்று இழுக்கும், கபம் கட்டும். நான்கு வேதத்தில் கரை கண்டவனுக்கும் கபம் கட்டும்.
ஏன் அவனுக்கு கபம் கட்ட வேண்டும்? அவன் எதைக் கற்கவில்லை? நான்கு வேதத்தைக் கற்றானே தவிர, வாசி நெறியை கற்கவில்லை. ஒரு நொடிப்பொழுதாகிய மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல் – நொடிப்பொழுது இயங்கக்கூடிய இந்த வாசியை நீ கற்கவில்லை.
சாத்திரப்பை என்பது உடம்பு. இந்த உடம்புக்கு எப்படி நோய் வரும்? வாசி நெறி கற்காத மக்களுக்குத்தான் நோய் வரும்.
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள் வது.
– திருக்குறள் – தவம் – குறள் எண் 262. தவம் என்பது என்ன? எவனொருவன் வாசி நெறியைப் பற்றி அறிந்தானோ, அவன்தான் தவசியாக முடியும். அப்படி வாசிநெறியை அறியாத மக்கள் தவம் மேற்கொண்டால் அது வீண் என்று சொல்கிறார்.
யோகிகள் என்ன சொல்கிறார்கள்? நாம் இந்த தத்துவத்தை எப்படி சொல்கின்றோமென்றால், எந்த மனிதனாக இருந்தாலும், ஆசான் இராமலிங்க சுவாமிகளாக இருந்தாலும் சரி, ஆசான் மாணிக்கவாசகராக இருந்தாலும் சரி, ஆசான் திருமூலதேவராக இருந்தாலும் சரி, வாசி நெறி அறியாவிட்டால் ஞானியாக முடியாது.
| 40 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
முனிவரோடு ரிஷிமுனிவர் சித்தர்தாமும்
முராரி அயன் தேவர்களும் முன்னோர்தாமும் மனிதர்களும் அசுரர்களும் மாதவத்தோர்
வாசிபிடித் தேறிமயிர்ப் பாலந்தாண்டி தனிவழியே தமர்வாச லூடேசென்று
தாண்டவம்செய் தில்லைவனம் சார்ந்தபேர்க்கு தொனிமுழங்கும் திருவாடு துறையைப்பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே. – மகான் அகத்தியர் – துறையறி விளக்கம் – கவி எண் 22.
முனிவரோடு ரிஷிமுனிவர் சித்தர்தாமும் – முனிவனாக இருந்தாலும் சரி, சித்தனாக இருந்தாலும் சரி, ரிஷியாக இருந்தாலும் சரி, முராரி அயன் தேவர்களும் முன்னோர்தாமும் – முராரி திருமால், அயன் – பிரம்மா, ஈசன் – ருத்திரன் இவர்களில் யாராக இருந்தாலும் சரி, மனிதர்களும் அசுரர்களும் மாதவத்தோர் – மனிதனாக இருந்தாலும் சரி, அசுரனாக இருந்தாலும் சரி, மாதவத்தோனாக இருந்தாலும் சரி, கவனிக்க வேண்டும் இந்த இடத்தில், (இவர்கள் யாராக இருந்தாலும் சரி) வாசி பிடித்து ஏற வேண்டும்.
எத்தனை ஆற்றல் உள்ளவராக இருந்தாலும் சரி, வாசி பிடித்து ஏறி மயிர்ப்பாலம் தாண்ட வேண்டும். இதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
வாசி எது? மூச்சுக்காற்று. சாதாரண மூச்சுக்காற்று. இந்த காற்றை அறியாதவனுக்கு தூற்ற முடியாது. எதைத் தூற்ற முடியாது? ஊழ்வினையைத் தூற்ற முடியாது.
காற்றுள்ள போதே தூற்ற வேண்டும். எதை? நெல்லை அல்ல!
எதைத் தூற்றிக் கொள்ள வேண்டும்? வினையைத் தூற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இந்த வினை என்கின்ற பதரை நீக்க முடியாது. மூச்சுக்காற்றை முறைப்படி அறிந்து, என்ன செய்ய வேண்டும்? மறுபடி சொல்கிறோம், காற்றை ஸ்தம்பித்து புருவமத்தியில் செலுத்தினால், புருவ மத்திக்கும் வினாத்தண்டுக்கும் மயிரிழை போன்ற ஒரு நரம்பு இருக்கிறது. அந்த மயிரிழை போன்ற நரம்பு வழியாக சென்று என்ன செய்யும்? உந்தி கமலத்தில் தங்கும்.
| 41 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
மயிர்ப்பாலம் தாண்ட வேண்டும். அப்படி தாண்டினால் அமிழ்தபானம் சுரக்கும். இதெல்லாம் உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் அது உங்களுக்கு பலிக்க வேண்டுமல்லவா? என்ன செய்ய வேண்டும்? நீங்கள் பூஜை செய்ய வேண்டும்? எந்த பூஜை செய்ய வேண்டும்?
நித்தமும ணிதுலக்கி நீடுமூலை புக்கிருந்து கத்தியேக தறியே கண்கள்மூடி என்பயன் எத்தனைபே ரெண்ணினு மெட்டிரண்டும் பத்தலோ அத்தனுக்கி தேற்குமோ அறிவிலாத மாந்தரே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 504. எமன் பொல்லாதவன் நம்மை விட மாட்டான். ஹரிபஜன் செய்தால் தொடமாட்டான் என்றிருந்தால் விடுவானா உங்களை? விடமாட்டான். கொக்கி போட்டு இழுத்துக் கொண்டு போயிடுவான். ஆக நீ என்ன செய்ய வேண்டும்? பூஜையோடு கலந்து வாசி நடத்த வேண்டும்.
தவம் என்பது என்ன? தவசியின் பாதத்தை பற்றுவதுதான் தவம். காடுமேடு போய் சுற்றுவது தவமல்ல. தவசியின் பாதத்தைப் பற்றவேண்டும்.
யார் தவசி? ஆசான் இராமலிங்கசுவாமிகள் தவசி, ஆசான் மாணிக்கவாசகர் தவசி, இவர்கள் பாதத்தை பற்றி பூஜை செய்தால்தான் வாசி சித்திக்கும். அதுதான் தவம். ஏதோ மந்திரம் சொல்வது தவமல்ல.
தாவார மில்லை தனக்கொரு வீடில்லை
தேவார மேதுக்கடி – குதம்பாய் தேவார மேதுக்கடி.
– மகான் குதம்பைச்சித்தர் – கவி எண் 30. தனக்கே உட்கார இடமில்லையே! ஏன் தேவாரம் பாடிக் கொண்டிருக்கிறாய்? என்றார். இங்கு தேவாரம் என்று அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய முதுபெரும் ஞானிகள் எழுதிய நூலை குறை சொல்லவில்லை. அவர்கள் பெற்ற இறை அனுபவத்தை அவர்கள் தேவாரத்தில் எழுதிவைத்துள்ளனர். அதைப் படித்தால் மட்டும் போதுமா? அப்படிப்பட்ட இறை அனுபவத்தைப் பெற்ற முதுபெரும் தலைவர்களின் திருவடியைப் பற்றி ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமேயன்றி வெறும்
| 42 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
பாடல்களை பாடுவதால் எந்த பயனும் வரப்போவதில்லை என்பதற்காகவே இவ்வாறு மகான் குதம்பைச்சித்தர் கூறுகிறார்.
மாங்காய்பால் என்றார்கள் அன்பர்கள். அதற்கு விளக்கம் சொல்கிறோம். இதெல்லாம் தவமல்ல. மாங்காய்ப் பால் எங்கிருந்து வரும்? ஆகாயத்திலிருந்தா? வேரிலிருந்தா? மாங்காய்க்கு பால் எப்படி வரும்? மாங்காய் உச்சியில் இருக்கலாம். அதற்குப் பால் வருவது எங்கிருந்து? வேரில் இருந்து. இதை நீங்கள் கவனிக்க வேண்டும்.
மாங்காய்ப்பா லுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பா லேதுக்கடி – குதம்பாய் தேங்காய்ப்பா லேதுக்கடி.
– மகான் குதம்பைச்சித்தர் – கவி எண் 28. மலைமேல் என்பது மேல்நிலையில் உள்ளவர்கள். அவர்களுக்கு தேங்காய்ப்பால் அவசியமில்லை என்று அர்த்தம்.
தேங்காய்ப்பால் சாப்பிடுகிறவர்களுக்கு காமவிகாரம் வரும். அது சத்துள்ளது. தேங்காய்ப்பால் தினமும் சாப்பிட்டு பார்த்தால் உண்மையை தெரிந்து கொள்ளலாம். இல்லறத்தானுக்கு இந்த உண்மை தெரியும்.
தினம் தேங்காய்ப்பால் சாப்பிட்டு வந்தால் மனம் செம்மைப்படாது. மேல்நிலைப் பெற்ற ஞானிகளுக்கு தேங்காய்ப்பால் தேவையில்லை.
மாங்காய்ப்பால் என்பது மேம்பட்ட மக்களுக்கு மாங்காய்க்கு பால் வேரிலிருந்து வருவது போல, ஞானியர்க்கு அமிழ்தபானம் மூலாதாரத்திலிருந்து வரும்.
அது மூலாதாரத்திலிருந்து வருகின்ற மார்க்கத்தை அறிந்த மக்களுக்குத்தான், தேங்காய்பால் தேவையில்லை. மாங்காய்பால் சாப்பிட்டு தேங்காய்பால் சாப்பிட்டால் வாய்ப்புண் ஆறாது. தேங்காய்ப்பால் சாப்பிட்டால் மனம் செம்மைப்படாது.
மாங்காய்ப்பால் சாப்பிடுவது என்பது அமிழ்தபானம். மேம்பட்ட மக்கள் சாப்பிடும் பால் மாங்காய்ப்பால். அது அமிழ்தபானத்தைச் சொன்னார். இந்த தேங்காய்ப்பால் அல்ல. இன்னும் சில அன்பர்களுக்கு கருத்துக்கள் சொன்னாலும், ஏன் புலப்படவில்லை?
| 43 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும்.
– திருக்குறள் – ஊழ் – குறள் எண் 373. எத்தனை நூல்கள் படித்திருந்த போதிலும், நல்வினை வேண்டும். முன் செய்த நல்வினை இல்லையென்றால், எத்தனை நூல்கள் படித்தபோதிலும், பொருளறிய முடியாது.
அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
– திருமந்திரம் – ஆகமச்சிறப்பு – கவி எண் 60. இங்கு எழுபது கோடி நூறாயிரம் எனக் கூறுவது மிகுதியைக் காட்டுவதற்காக சொல்லப்பட்டதாகும். நூல்கள் பல கற்றபோதும் உண்மை தெரியுமோ? தெரியாது.
நாம் சிவத்தை அறிவதற்கு என்ன செய்ய வேண்டும்? ஊழ்வினை அற்றுப்போக வேண்டும். ஊழ்வினை அற்றுப்போவதற்கு என்ன செய்ய வேண்டும்? பூஜை செய்தால் மட்டும் போதுமா? பூஜையும் செய்ய வேண்டும்.
எப்படி பூஜை செய்ய வேண்டும்? ஆசான் அகத்தீசர் திருவடியை உள்ளம் உருக பூசிக்க வேண்டும். அதுவே தவமாகும். தவமும் தர்மமும் சேர்ந்தால்தான் ஊழ்வினை அற்றுப்போகும். தவமும் தர்மமும் சேராவிட்டால் ஊழ்வினையை நீக்க முடியாது.
ஆக என்ன செய்ய வேண்டும்? தவசியின் பாதத்தை பற்றுவது தவம். அவன் என்ன செய்வான்? உன்னிடம் இருக்கின்ற எல்லா அஞ்ஞானத்தையும் நீக்கி, உண்மையை உணரச் செய்வான். தர்மம் செய்ய வேண்டும். முடிந்தால் அன்னதானம் செய்ய வேண்டும். இதை ஆசான் திருவள்ளுவர் சொல்வார்,
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம் இன்சொ லினதே அறம்.
– திருக்குறள் – இனியவை கூறல் – குறள் எண் 93. இனிமையாக பேசுவதும் அறம்தான். இதை ஆசான் திருமூலதேவர் சொல்வார்,
| 44 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. – திருமந்திரம் – அறஞ்செய்வான் திறம் – கவி எண் 252. தர்மம் என்பது என்ன? பூஜை என்பது இறைவனுக்கு ஒரு பச்சிலை இட்டு பூஜை செய்தால் போதும். யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை – பசுவின் பாலும், அதிலிருந்து பெறப்படும் நெய்யும் இல்லாவிட்டால் ஒருவன் ஞானியாக முடியாது. எனவே அதை தெய்வமாக போற்ற வேண்டுமென்று ஆசான் திருமூலதேவர் சொல்வார்.
அப்ப பசு மாட்டை வைத்து பூஜை செய்தால் ஞானம் வந்துவிடுமா? பசுமாட்டை நிற்க வைத்து, அதற்கு குங்கும பொட்டு வைத்து, சூடதீபம் காட்டினால் ஞானம் வந்துவிடாது. அது மாடுதானே, பசும்பாலை தெய்வமாக கருத வேண்டும். பசுவை தெய்வமாக போற்ற வேண்டுமே தவிர, அதற்கு சூடதீபம் காட்டுவதல்ல பூஜை.
ஒரு மனிதன் தினமும் உணவை ஒரு பிடியாவது ஏழை எளிய மக்களுக்கோ அல்லது காக்கைக்கோ வைத்துப் பழக வேண்டும். இனிமையாக பேச வேண்டும். இப்படியெல்லாம் தர்மம் ஒரு பக்கம் வளர வேண்டும். தவம் என்பது என்ன? அகத்தீஸ்வரா! போகமகாரிஷி அவர்களே! திருமூலதேவர் அவர்களே! இராமலிங்கசுவாமிகள் அவர்களே! மாணிக்கவாசகர் அவர்களே! பட்டினத்தார் அவர்களே! தாயுமானசுவாமிகள் அவர்களே! இந்த பாவியின்பால் கருணைக் காட்ட வேண்டுமென்று சொன்னால் தவம் வந்து விட்டது என்று அர்த்தம். இதுதான் தவம். இந்த தவத்தை நீ எங்கிருந்தாலும் செய்யலாம்.
இதற்கு காவி கட்ட வேண்டியதில்லை. கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கைத்தாளம் போடவேண்டிய அவசியமில்லை. உள்ளம் உருக அந்தரங்கத்தில் பூஜை செய்ய வேண்டும். மானசீகமாக பூஜை செய்ய வேண்டும். நாங்கள் அப்படி செய்து கொண்டிருக்கிறோம். அப்படியே நீங்களும் செய்தால் முன்னேறலாம். இதைத்தான் நாங்கள் விளக்கி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
| 45 ||


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ ஓடியிட்ட பிச்சையு முகந்துசெய்த தர்மமும் சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே.
– மகான் சிவவாக்கியர் – கவி எண் 242. ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் – ஆடு மாடு யார் தேடுவார்கள்? இல்லறத்தில் இருப்பவன்தான் தேடுவான்.
இல்லறத்தானுக்கு அது ஒரு சிறந்த செல்வம். மாடு என்றால் செல்வம் என்றொரு பொருள் உண்டு. ஆடு, மாடு இல்லறத்தான் தேடுவான்.
ஆனைசேனை யார் தேடுவார்? அரசன். தனக்குப் பாதுகாவலாக இருப்பது காலாட்படை, குதிரைப் படை, யானைப் படை என்று சொல்வார்கள்.
ஆடுநாடு தேடினு மானைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ வாசியை, கோடி முறை இழுப்பார்கள், ஸ்தம்பிப்பார்கள், நிறுத்துவார்கள். எப்படி எப்படியோ செய்வார்கள்.
ஓடியிட்ட பிச்சையு முகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல தர்மம்வந்து நிற்குமே தவம் வலது கை, தர்மம் இடது கை. இரண்டும் ஒன்று பட்டால் இருகை கூப்புவது. அதுதான் இருகை கூப்புகிறான்.
அப்போது தர்மமும், தவமும் ஒன்றுபட்ட மக்கள் இருகை கூப்புவது போல, இடகலையும், பிங்கலையும் அப்போதுதான் சித்திபெறும். இடகலை தர்மம், பின்கலை தவம். இது ஒன்றுபட வேண்டுமென்றால் நீ அன்பு செலுத்த வேண்டும்.
ஆக எப்படி அன்பு செலுத்த வேண்டும்? நாம் மறுபடியும் தொடர்ந்து அதையே சொல்கிறோம். லபிக்கவழி (சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே
நந்திதிருமூலரையும், லபிக்கக்காலாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும் சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசை செய்வாய் உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய்
| 46 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர் ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன்
பூசைசெய்தால் சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.
– மகான் அழுகண்ண ர். ஞானியர்கள்பால் அன்பு கொள்ள வேண்டும், வேண்டும்போதே இப்படி வேண்டிக்கொள்ள வேண்டும்.
அடியேனுக்கு பந்தபாசம் அற்றுப்போக வேண்டும். அடியேன் உள்ளதை உள்ளவாறு அறிய வேண்டும். அடியேன் உமது பாதத்தை உள்ளம் உருக பூசிக்க வேண்டும். அடியேனுக்கு மலமாயை அற்றுப்போக வேண்டும். அடியேன் உள் கருவி கரணங்களை அறிய வேண்டும். இப்படியெல்லாம் கேட்டு, அடியேனுக்கு வாசி சித்திக்க வேண்டுமென்று கேட்பது மட்டுமல்ல, அடியேனுக்கு மரணமிலாப் பெருவாழ்வு கைகூட வேண்டுமென்று தொடர்ந்து பூஜை செய்தால், அது தவம். இதுதான் சாரம். இதைப்பற்றியெல்லாம் விளக்கமாக சொல்லியிருக்கிறோம்.
இப்படியெல்லாம் வாசிநெறியைப் பற்றி சொல்கிறோம். ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் வேறு, ஆசான் இராமலிங்க சுவாமிகள் சன்மார்க்க சங்கம் வேறு அல்ல. எல்லாம் ஒன்றுதான். ஆசான் இராமலிங்கசுவாமிகள் காட்டிய பாதைதான் ஆசான் அகத்தியர் காட்டியிருப்பார். ஆசான் அகத்தியர் காட்டியதைதான் ஆசான் இராமலிங்கசுவாமிகள் காட்டியிருப்பார்.
திருஅருட்பாவில் ஆறாயிரம் பாடல்கள் இருக்கிறது. இவற்றை முழுதுமாகப் படிப்பதானால் பத்தாண்டுகள் ஆகும். ஏனய்யா காலத்தை வீணாக்குகிறாய்? ஆசான் இராமலிங்கசுவாமிகளை அழைத்து, இந்த பாவிக்கு ஞானம் சித்திக்க வேண்டுமென்று கேட்டால் நிச்சயம் சித்தி பெறுவாய்.
இதெல்லாம் நாங்கள் உங்களுக்கு விளக்கி சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆக மேலும்மேலும் உங்களுக்கு இந்த தத்துவங்கள் சொல்லும்போது, நாங்கள் சில கருத்துக்களை சொல்வதற்காக சேகரித்து வைத்திருந்தோம். அதை முறைப்படி
|47 |


ஞானிகள் பற்றிய அனுபவ விளக்கம்
சொல்லிக்கொண்டே வந்தோம். என்ன செய்வோம்? ஆசான் மீது பக்தி செலுத்துவதைப் பற்றிச் சொல்லி, அவர் அனுக்கிரகத்தைப் பெறுகின்ற மார்க்கத்தைச் சொல்லி, அந்த அனுக்கிரகத்தைக் கொண்டே வாசி நெறியை சொல்லி, வாசி சித்திக்கின்ற முறை, உள்கருவி கரணங்கள் எப்படி இயங்குகிறது என்பதை சொல்லியிருக்கிறோம். வாசி அசைந்தால் உள்கருவி கரணங்கள் அசையும், தத்துவங்கள் இயங்கும்.
கருவி கரணங்கள் அசைந்தால் பசி எடுக்கும். பசி எடுத்தால் சாப்பிடுவோம். சாப்பிட்டால் உள்கருவி கரணங்கள் என்ன செய்யும்? சத்து அசத்தைப் பிரிக்கும். கழிவை வெளியே தள்ளும்.
உள்ளே இருக்கும் சத்து என்ன செய்யும்? எழுபத்திரண்டாயிரம் நாடி நரம்புகளை முறுக்கேற்றிவிடும். எழுபத்திரண்டாயிரம் நரம்புகள் என்ன செய்யும்? மனம், புத்தி, சித்தம், அகங்காரத்தை தட்டி எழுப்பும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ன செய்யும்? பொறிபுலன்களை தட்டி எழுப்பும். பொறி ஐந்து, புலன் ஐந்து. இந்த பொறிபுலன் ஐந்தும், கரணம் நான்கும், பதினான்கு கருவிகளும் மூச்சுக்காற்று அசைந்தால் இயங்கும்.
இந்த மூச்சுக்காற்றை உள்ளே அடக்கினால், கருவி கரணங்கள் அடங்கிவிடும். எழுபத்திரண்டாயிரம் நாடி நரம்புகளை முறுக்கேற்றினால் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற பொறி புலன்களை தட்டி எழுப்பி, மனமாய்கையை உண்டாக்கும். இந்த மனமாய்கையைத் தள்ளுவதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த தத்துவத்தை உணர்ந்தவனின் பாதத்தை பற்ற வேண்டுமென்று சொல்வோம். இதெல்லாம் இயல்பு. அப்ப கருவி கரணங்கள் அடங்குவதற்கு வாசி அடங்க வேண்டும். வாசிதான் மனம். வாசி அசைந்தால் மனம் அசையும். வாசி அசையாவிட்டால் மனம் அசையாது.
வாசியே ஆன்மா, வாசியே மனம், வாசியே அறிவு. இதையெல்லாம் உணர்ந்து எல்லாம்வல்ல ஞானிகள் திருவடியைப் பற்றி உளமுருக பூசித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்று முடிக்கிறேன். வணக்கம்.
| 48 |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175064
Visit Today : 204
Total Visit : 175064

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories