கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிவபுராணம் விளக்கம் ஓங்காரக்குடில் மகான் Shivapuranam explained

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிவபுராணம் விளக்கம் ஓங்காரக்குடில் மகான் Shivapuranam explained


கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க 

ன்னா கரம் குவித்தே
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ன்னா கரம் குவியுதே 
இப்ப நம்ம வந்து கரம் கூப்புறோம் ஏன் கூப்புறோம் ன்னா, 

இது வலது கை புண்ணியம் இடது கை தவம் (பூஜை) ரெண்டும் ஒன்று சேரனும் வணங்குறோம்


 மனிக்கவாசகா நீங்கெல்லாம் பெரியவங்க ஐயா, திருஞானசம்பந்தர் ஐயா இராமலிங்க சுவாமிகளே திருமூலதேவா, அகதீசா, நந்தீசா நீங்கெலெல்லாம் பெரியவங்க என்னை ஏற்று அருள் செய்ய வேண்டும் என்று சொல்லி, கை கூப்புறோம், நிச்சியமா கரம் குவிபவன் சிரம் குவிவான், கரங்குவிவார் உள்மகிழும் அப்போ 

உள் மகிழ்ச்சி எப்ப வரும்,
வறுமை இருந்தா வருமா,
கடன் சுமை இருந்தா வருமா,
நோய் இருந்தா வருமா,
பகை இருந்தா வருமா,
குடும்பத்தில் பிரச்னை இருந்தா வருமா

கரங்குவிவார் – குவித்தல் – கும்மிடுதல் வணங்குதல், கரம் குவிவார் உள் மகிழும் இதயத்திலே மகிழ்ச்சி இருக்கும், அப்ப மனசிலே, இப்ப மனிக்கவாசகா ன்னு வணங்குனா போதும், ஈரேழு பதினாலு லோகமும், அதனை சித்தர்களும் பயபடுவார்ன்னு சொல்லுவாங்க, கரங்குவிவார் உள்மகிழும் அப்போ உள்ளே மகிழ்ச்சி இருக்கும், உள்ளதில மகிழ்ச்சி இருந்தால் நிச்சியமாக முகத்தில் இருக்கும்ன்னா,
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்காயினும் தான்முந் துறும். ன்னா வள்ளுவன், 

இதயத்துல மகிழ்ச்சி இருக்கு, காரணம்
பகை இல்லை
அச்சம் இல்லை
மனைவிக்கு நோய் இல்லை
பிள்ளைகளுக்கு நோய் இல்லை
தொட்டது துலங்குது, வியாபாரம் நல்ல படி இருக்கும், விவசாயம் நல்ல படி இருக்கும், நல்ல மனசு சாந்தம் இருக்கும், அப்போ கவலையே இருக்கதுன்னா, கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் கோன்- ன்னா தலைவன், கழல்கள் – னா திருவடி. தலைவன் திருவடி வெல்கன்னார் – அப்போ வெல்கன்னா வெற்றி பெருக ன்னு அர்த்தம். குடும்ப தலைவன் வெற்றி பெற்றால், குடும்பத்துக்கே நல்லதுனார், ஏன்யா தலைவன் திருவடி வெற்றிபெருகன்னு ஏன் சொன்னே ன்னார், அவன் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம், குடும்ப தலைவன் வெற்றிபெற்றால் குடும்பத்துக்கே நல்லது போல
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க – கோன் ன்னா தலைவன் அவன் திருவடி வெற்றி பெருகன்னா, அவன் வெற்றி பெற்றால் நான் வெற்றி பெறுவேன்னா, இதுல இவ்வளவு பெரிய மருமம், இருக்கு, உள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிவபுராணம் விளக்கம் ஓங்காரக்குடில் மகான் Shivapuranam explained

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0175071
Visit Today : 211
Total Visit : 175071

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories