தேகசுத்தி & ஆன்மசுத்தி

ஞானத்திருவடி jan 2014

மகான் திருமூலர் அருளிய ஆசி நூல்
கவி 20

அருள் பெருக அனுதின தேகசுத்தி
ஆன்ம சுத்திக்கு பிரம்ம வேளையில்
அருள் பெற்ற ஞானிகள் நாமசெபம்
அதனோடு திருமந்திரம் பயின்றுவர

அருள் பெருகிடவே அவரவரும் தினசரி காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் தேகசுத்தி பெற்றிடவும், ஆன்ம சுத்தி பெற்றிடவும், வேண்டியே அருள் பெற்ற மகான் அரங்கரால் வகுத்தும் தொகுத்தும் கொடுக்கப்பட்ட சித்தர்கள் போற்றி தொகுப்பினை பாராயணம் செய்தும் அதனோடு திருமூலன் யான் இயற்றிய திருமந்திரம் தனையே பயின்றும், தேவாரம், திருவாசகம், வள்ளுவனாரின், உலக பொதுமறையாம் திருக்குறள் போன்ற ஞான நூல்களை வாரம் ஒரு நூலினை மனம் உருக உயர்வான பக்தியோடு வாசித்து வருதல் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0326032
Visit Today : 156
Total Visit : 326032

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories