வடிவேலு சொல்றா மாதிரி
நேத்து ஒரு கிருகன்கிட்ட மாட்டிகிட்டேன்

அவங்க 40 வருசமா சித்தர்களை ஆராய்ச்சி செய்யறாங்களாம். வள்ளலாரின் உண்மை உருவத்தை கண்டுபிடிச்சாரம்.
ஏன்யா அவரே ரூபம் வேண்டாம் என்று அரூபமா போறாங்க அவரோட ரூபத்தை கண்டுபிடிகிறியே உன்னை போல பாவியும் இருப்பானோ.

உலகம் முழுவதும் கண்டபடி வச்சிருக்கான் கடவுளையும் கொள்கைகளையும். அந்த கொள்கைகளில் மாட்டிகிட்டு எல்லா உயிரினத்தையும் சாவடிகிறாங்க அவங்களும் கும்பல் கும்பலா வெட்டிகிட்டும் சுட்டுகிட்டும் சாகிறாங்க.

கடவுள் நம்முள்ளே இருக்கிறார் என்றும் அதை குருவின் துணை கொண்டு உணர்ந்தும் அடைந்தும் நமக்கு வழிகாட்டுகிறார்கள் தமிழ் சித்தர்கள்.
அபேற்பட்ட இயற்கையின் இயக்கமாகிய சிவம் – சித்தன் போக்கே சிவன் போக்கு என்று அவர்களை வணங்கி கேட்டு சிவனாக ஆகாமல் சவம் (பிணம்) ஆவதற்காகவே ஆராய்ச்சி செய்யுது ஏகப்பட்ட கூடம்.

கலியுகத்தில் ஒரு லட்சம் பேருக்கு மரணத்தை வெல்ல வாய்ப்பு இருக்கு. அங்க இங்க பொய் மூடனிடம் ஏமார்ந்து விடாதீர்கள். நவகோடி சித்தர்களின் குரு அகத்தியரை முறை அறிந்து வணங்கி பெறுவோம். இதில் வெற்றி பெறாவிட்டாலும் இழப்பதற்கு ஒன்றும் இல்லை.
https://www.youtube.com/watch?v=ZWYL7OMMDXo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 48
Total Visit : 349217

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version