அரைவேக்காடு எது?
————————-
முருகன் துணை
மிகப்பெரிய மகான்கள் பட்டினத்தார்,
ராமலிங்கசாமிகள், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், பீர் முகமது, மஸ்தான் சாகிப், யாகோபு போன்ற மகான்கள் உலக மக்கள்பால் கருணை கொண்டு படைத்த பாடல்களில்
————————-
தாங்கள் யோகா வகுப்பு போனதாகவோ
அல்லது
யோகா பயிற்சி வகுப்பு நடத்தியதாகவோ கூறியிருக்க மாட்டார்கள்
————————–
யோகம் என்ற ஒன்று நடந்ததாக சொல்லியிருப்பார்கள்
எப்போது யோகம் நடக்கும்
பாவிகளுக்கா?
பொருள்பற்று உள்ளவனுக்கா?
நமக்கு பக்தியும் புண்ணியமும் பெருகும்போது தகுதிவரும்போது ஆசானே மூச்சுகாற்றோடு சேர்ந்து நம்முள் தங்குவார் – அதுவே உண்மையான யோகம்
அந்த உடலே ஜோதியாகும்
அதைவிடுத்து செங்கல் சூளையில் வேகாத – அரைவேக்காடுகள் பல்வேறு முயற்சி செய்து மற்றவனுக்கும் சொல்லிகொடுத்து – தானும் செத்து அதற்க்கு சமாதி என்று பெயர்சூட்டிகொண்டு பயிற்சி வகுப்புகள் என்ற பெயரில் மற்றவர்களையும் மடையனாக்கி கொண்டிருப்பார்கள்
அதிகாலை 4.30 முதல் 6.00 மணிவரையில் தீபமேற்றி “ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி” அல்லது “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று பூசித்து அருளும் அறிவும் பெறுவோம் – ஆசான் மனமிரங்கி நம்மை சாரும்வரை பூஜையையும் புண்ணியத்தையும் தொடர்வோம். (எத்தனை ஜென்மம் ஆனாலும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

Visit Today : 378
Total Visit : 344275

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version