தகுதி மீறி தருமகாரியம் செய்வது அதுவும் குற்றமே | வள்ளுவன் வாக்கு

ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் அகத்தீசாய நம
 
அன்புள்ள பெரியோர்களே தாய்மார்களே வணக்கம்

 

அன்னதானம் செய்யலாம் அதற்கும் ஒரு அளவு,
தருமம் செய்வதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும்

 
அதுவும் தலைவன் ஆசி இல்லாமல் முடியாது.
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:477).
 

தருமம் செய்வதும் தகுதிக்கு மீறி செய்யக்கூடாது

 
அன்னதானம் செய் என்று சொல்லலாம் நம் வசதி என்ன நாம் இதற்க்கு மேல் தருமம் செய்தால் விளைவுகள் எங்கே போய் முடியும் கடன் வாகும் சூழ்நிலை வரும்
 
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி
 
அப்படீன்னு சொன்னான் வள்ளுவன்
எந்த அளவிற்கு உனக்கு சக்தியோ
 
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்
குறள் எண்: 480
 
(குறளின் பால்: பொருட்பால்
அதிகாரம் : வலியறிதல்
குறளின் இயல்: அரசியல்)
 
உன்னுடைய சக்திக்கு உட்பட்டு தரும காரியம் செய்யவேண்டும், ஒப்புரவு அறிதல் அல்லது தருமகாரியம் செய்தல்
தரும காரியம் செய்வதற்கு உன் தகுதி அறிந்து தருமகாரியம் செய்யவேண்டும்

தகுதி மீறி தருமகாரியம் செய்வது அதுவும் குற்றமே 

-என்றான் வள்ளுவன்
 
நம்ம சக்தி அவ்வளவுதான் மாதம் இரண்டு பேருக்கு அன்னதானம் அதற்குமேல் செய்யக்கூடாதுன்னான் இப்படி ஒவ்வொன்றும் அளந்து செய்தல் சிந்தித்து செய்தல் சிறப்பாக செய்தல் அத்தனையும் திருவருள் துணையால்
 
புண்ணியவான்கள் ஆசி இருக்க வேண்டும் அப்போ புண்ணியவான்கள் ஆசி இருந்தால் உணர்த்தப்படும்
 
 
 
 
 
 
 
தகுதி மீறி தருமகாரியம் செய்வது அதுவும் குற்றமே | வள்ளுவன் வாக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Benifishers

0224733
Visit Today : 209
Total Visit : 224733

Arangar Arulurai

Jeeva Nadi Vaasippu

Annadanam Channel

Categories

Exit mobile version